Chapter-25

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
164
0
16
www.amazon.com
தினேஷை பார்த்துவிட்டு ஷங்கரை பார்த்த சுவாதி அவன் தான் எல்லா விதத்திலும் சிறந்தவன் என்று யோசித்துக் கொண்டிருக்க, அவளுக்கு அப்போது தினேஷிடம் இருந்து கால் வந்தது. அதனால் அவளுக்கு தூக்கி வாரி போடுவதைப் போல இருக்க, “என்ன நான் மனசுல நினைச்சது அவனுக்கு கரெக்டா கேட்ட மாதிரி உடனே எனக்கு கால் பண்றான்? இதுக்கு முன்னாடி ஆபீஸ் டைம்ல எனக்கு இவன் ஆபீஸியலா கூட கால் பண்ணதே இல்லையே! என்ன சொல்லப் போறானோ!” என்று நினைத்த சுவாதி அதை அட்டென்ட் செய்து அருகில் மற்றவர்களும் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருந்தார்கள் என்பதால் “சொல்லுங்க சார்!” என்று மரியாதையுடன் கேட்டாள்.



“இன்னும் 10 மினிட்ஸ்ல கான்பரன்ஸ் ஹால்ல மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகுது. யாழினிய ரெடியா இருக்க சொல்லு. நீயும் சங்கரும் அங்க போய் எல்லாம் கரெக்டா இருக்கான்னு ஒன்ஸ் செக் பண்ணிட்டு வந்துருங்க. இன்னைக்கு மீட்டிங்ல ஏதாவது கொஞ்சம் ஸ்லிப் ஆனா கூட, என் ப்ரொமோஷன்ல பிரச்சனை ஆயிடும். இந்த ப்ராஜெக்ட் எனக்கு ரொம்ப முக்கியம். அதை மனசுல வச்சுக்கிட்டு வேலை பாருங்க." என்ற தினேஷ் சுவாதி அவனுக்கு பதில் சொல்வதற்குள் அந்த அழைப்பை துண்டித்து விட்டான். அதனால் மேலும் அவளுக்கு எரிசலாக இருக்க, “இந்த சிடு மூஞ்சி வரவர ஓவரா பண்றான். இவன் என்னை ஜஸ்ட் ஒரு கூட வேலை செய்ற பொண்ணா பாக்கும்போது கூட, எனக்கு மரியாதை கொடுத்து ஒழுங்கா பேசிட்டு இருந்தான்‌.

ஆனா இப்ப என்ன கல்யாணம் பண்ணி என்னமோ இவன் வீட்டுக்கு அடிமையா கூட்டிட்டு வந்ததா இவனுக்கு ஒரு நினைப்பு. என்னை கொஞ்சம் கூட மதிக்கிறதே இல்ல. இருக்கட்டும், எல்லாத்தையும் நான் ஞாபகம் வச்சுக்குவேன். எனக்குன்னு ஒரு டைம் வரும்ல்ல.. அன்னைக்கு இருக்கு இவனுக்கு.” என்று நினைத்த சுவாதி தனது டீமில் உள்ளவர்களிடம் விஷயத்தை சொல்லிவிட்டு ஷங்கருடன் கான்பரன்ஸ் ஹாலுக்கு சென்றாள்.



அவர்களுக்கு தெரிந்தவரை அங்கே எல்லாம் தயாராகத்தான் இருந்தது. இருப்பினும் அவர்கள் மைக் முதல் ப்ரொஜெக்டர் வரை எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை தங்களது திருப்திக்காக சோதித்து பார்த்துக் கொண்டார்கள். அதற்குள் தினேஷ் அவர்களுக்கு கொடுத்த 10 நிமிட காலக்கெடு முடிந்து விட, யாழினியுடன் பேசியவாறு அந்த ஹாலிற்குள் நுழைந்தான் அவன். அவர்களை தொடர்ந்து ப்ராஜெக்ட் மேனேஜர் அவனது டிமில் இருப்பவர்கள் என்று அனைவரும் உள்ளே வந்தார்கள்.



சில நிமிடங்களில் மீட்டிங் தொடங்கி விட, தங்களது ப்ராஜெக்ட் பற்றி ஒரு ஷார்ட் இன்ட்ரொடக்ஷன் கொடுத்த தினேஷ் அதைப்பற்றி யாழினி தெளிவாக விவரிப்பாள் என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு சென்று தனக்கான இருக்கையில் அமர்ந்தான். யாழினி இன்று கருப்பு நிற ஜீன்ஸ் பேண்டும், ப்ளூ கலர் சர்ட்டும் போட்டு வழக்கம்போல தனது கூந்தலை அழகாக ஸ்ட்ரைடெனிங் செய்து ‌ விரித்து விட்டிருந்தாள். அவள் தங்களது ப்ராஜெக்ட் பற்றி எக்ஸ்பிரஷன்களுடன் பேசும்போது அவளுடன் சேர்ந்து அவளது கண்களும், அவளது காற்றிலே லேசாக அசைந்தாடிய கூந்தலும் கூட சேர்ந்து அழகாக பேசியது.



அதை கவனித்த தினேஷ் தன்னையே மிஞ்சும் அளவிற்கு யாழினி presentation கொடுக்கிறாள் என்று நினைத்து பெருமைப்பட்டான். அப்போது அவளது அழகிய தோற்றமும், அவள் தன்னை ப்ரெசென்ட் செய்யும் விதமும், அவளது ஒவ்வொரு செய்கையும் என அனைத்தும் அவனை ஈர்க்கும்படியாக இருக்க, “வாவ்.‌.. பொண்ணுன்னா இப்படி இருக்கணும். She is so beautiful, bold and also talented. என்ன இல்ல இவ கிட்ட... எல்லாமே இருக்கு. இவளை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கறதுக்கு சங்கர் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்.” என்று நினைத்தான்.



அதனால் அவன் கண்கள் தானாக ஷங்கரை பார்க்க, அவன் அருகில் அமர்ந்து இருந்த சுவாதியையும் அவன் பார்க்க வேண்டியதாகிற்று. அங்கே அவளையும் யாழினியையும் சேர்த்து கிட்டதட்ட 10 பெண்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவருடனும் ஒப்பிடும்போது சுவாதி தான் கொஞ்சம் டல்லாக தெரிந்தாள். அவள் அணிந்திருந்த ஆடைகளும், அவளது சிதை அலங்காரமும் அப்படி அவளை காட்டியது. அதனால் ஒரு நொடி “இங்க இந்த ஆபீஸ்ல எத்தனையோ அழகான டேலெண்டெட் ஆன பொண்ணுங்க இருக்கும்போது, ஸ்வாதி தான் எனக்குன்னு கடவுள் என் தலையில ஏன் எழுதி வச்சிருக்கார்ன்னு தெரியல.

நான் காலையில வரும்போது அவளுக்காக தானே பேசினேன்! ஆனா அத கூட புரிஞ்சுக்காம என்னமோ என் மேல மட்டும் தான் தப்பு இருக்கிற மாதிரி என்னையே குறை சொல்லிட்டு இருக்கா அவ. யாழினியும் அவளும் சின்ன வயசுல இருந்தே ஒன்னாவே இருந்திருக்காங்க. அப்படி இருந்தும், அவ கிட்ட இருக்கிற மெச்சூரிட்டில கொஞ்சம் கூட இவ கிட்ட இல்ல. என்ன பண்றது எப்படி இருந்தாலும், அவ தான் என் வைஃப். இனிமே அதை மாத்த முடியாது. அவளை நமக்கு தகுந்த மாதிரி சேஞ்ச் பண்ண முடியுதான்னு பார்க்கலாம்.” என்று நினைத்து பெருமூச்சு விட்டான்.



பின் யாழினியின் இனிமையான குரலில் அவளது ஆங்கில புலமையை கேட்கும் போது மீண்டும் அவனது எண்ணம் யாழினியின் பக்கம் செல்ல, அவன் கண்களும் அவளைத் தான் இமைக்க மறந்து பார்த்தது. அதனால் உடனே தனது கடந்த கால ஞாபகங்களை நோக்கி பயணித்தான் தினேஷ். இரண்டு வருடங்களுக்கு முன்பு, சங்கர் யாழினி இருவரும் இங்கே இன்டர்வியூ அட்டென்ட் செய்ய வந்திருந்தார்கள். அப்போது மேனேஜர் வெளியே சென்று இருந்ததால், அங்கே இருப்பவர்களில் தினேஷ் சீனியர் என்பதால் அவர்களை இன்டர்வியூ எடுக்கும் பொறுப்பு அவனிடம் சென்றது.



முதலில் தினேஷ் ஷங்கரை உள்ளே அழைத்து அவனிடம் பேசினான். சங்கருக்கு ஆங்கிலத்தில் பேசுவது கொஞ்சம் எட்டாக்கனியாக இருந்தாலும், அவன் அதிக technical knowledge உடன் இருந்ததால், “போகப்போக எல்லாத்தையும் கத்துக்குவான். இவனுக்கு ஒரு சான்ஸ் கொடுத்து பார்க்கலாம்.” என்று நினைத்து அவனை செலக்ட் செய்து அவனது communication and interpersonal skillsஐ டெவலப் செய்யச் சொல்லி அறிவுரை வழங்கி வெளியே அனுப்பினான். ‌ தனக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தில் சிரித்த முகமாக தினேஷுக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே சென்ற ஷங்கர் யாழினியை பார்த்து “உள்ள இருக்கிறவன் ரொம்ப நல்லவன் போல. நான் பேசுன இங்கிலீஷ்க்கு அவன் என்னையே செலக்ட் பண்ணிட்டான். உன்னை எல்லாம் கண்டிப்பா செலக்ட் பண்ணுவான். நீ பயப்படாம போ. இன்னைக்கு நமக்கு வேலை கன்ஃபார்ம். All the best.” என்று சொல்லி அவளை உள்ளே அனுப்பினான்.



அதனால் அதீத நம்பிக்கையுடன் “may I come in sir!” என்று கேட்டபடி இன்டர்வியூ நடக்கும் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள் யாழினி. அப்போது அவள் ஒரு கருப்பு நிற குர்த்தாவும், ஜீன்ஸ் பேண்ட்டும் போட்டு இருக்க, அவளது கூந்தல் காற்றில் பறந்து கொண்டிருந்தது. அவளைப் பார்த்த அந்த நொடியே தினேஷ் அவளிடம் விழுந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.‌ அவளது ஒவ்வொரு அசைவிலும் அத்தனை நளினம் தெரிய, அது அவனை வெகுவாக கவர்ந்தது. அதற்கு முன் வந்தவர்களை எல்லாம் ஐந்து நிமிடத்தில் பேசி முக்கியமானவற்றை மட்டும் கேட்டு வெளியே அனுப்பி இருந்த தினேஷ், அவளுடன் பேச வேண்டும் என்ற ஆசையிலேயே வேண்டுமென்றே அவளிடம் ஏராளமான கேள்விகள் கேட்டு அரை மணி நேரம் வரை அவளை இன்டர்வியூ எடுத்தான்‌.



ஏதோ ஒரு வேகத்தில் காதலித்து சென்னைக்கு கிளம்பி வந்து வேலை கிடைத்த பின் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் சங்கருடன் அங்கே வந்திருந்த யாழினிக்கு அந்த வேலை மிகவும் முக்கியமானதாக இருந்தது. அதனால் சலிக்காமல் அவளும் சரளமான ஆங்கிலத்தில் தனக்கு தெரிந்த அனைத்தையும் அவனிடம் சொன்னாள். அதனால் “இவ அழகா மட்டும் இல்ல. இந்த ஜாபுக்கு தேவையான எல்லா ஸ்கில்ஸ் ஓடவும் இருக்கா. இவள மாதிரி ஒரு பொண்ணு நம்ம டீம்ல இருந்தா சூப்பரா இருக்கும்.” என்று நினைத்து அவளை அப்போதே செலக்ட் செய்த தினேஷ் அவளை தனது டீமில் சேர்த்துக் கொண்டான்.



பின்பு அவள் மூலம் அவனுக்கு சங்கர் அவள் நண்பன் என்று தெரிய வர, அவனையும் தனது டீமில் இணைத்தான். அவர்களுக்கு பிறகு தான் சுவாதி அங்கே வேலைக்கு வந்தாள். அப்படியே காலம் செல்ல, தினேஷ் யாழினி மீது ஒரு குட்டி கிரஸ்ஷயும் வளர்த்துக் கொண்டான். ஆனால் வேலை என்று வரும்போது அவன் மிகவும் professionalஆக இருப்பான் என்பதால், தன்னுடன் சேர்ந்து வேலை பார்க்கும் பெண்ணுடன் காதலை வளர்த்துக் கொண்டு பிற்காலத்தில் அதனால் ஏதாவது பிரச்சனை வந்தால் என்ன செய்வது என்று நினைத்து கொஞ்சம் அடக்கியே வாசித்தான். ஆனால் சங்கரும் யாழினியும் அதற்குள் அவனுக்கு தெரியாமல் திருமணமே செய்து கொண்டு ஆஃபீஸில் தங்களது காதலை வளர்த்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்..‌

அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:

இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN

எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:

 

Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-25
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.