அவர்கள் ஏறியவுடன் தினேஷ் தனது காரை ஸ்டார்ட் செய்துவிட, சுவாதியின் வாடிய முகத்தை கவனித்த யாழினி “ஏண்டி நீ போய் முன்னாடி தினேஷ் பக்கத்துல உட்காராம இங்க வந்து உட்கார்ந்து இருக்க?” என்று கேட்க, “எனக்கு இங்க தான் comfortableஆ இருக்கு அதான். ஏன்.. உங்களுக்கும் நான் இங்க உட்கார்ந்து இருக்கிறது இடைஞ்சலா இருக்கா?” என்று உடைந்த குரலில் கேட்டாள் அவள். “நான் எப்ப டி அப்படி சொன்னேன்? என்ன நீ லூசுத் தனமா பேசிட்டு இருக்க?” என்று யாழினி குழப்பமாக கேட்க, “ஆமா யாழினி அவ காலையில இருந்து அப்படித்தான் பேசிட்டு இருக்கா. நம்ம சொல்ல வர்றதை அவளுக்கு புரிஞ்சுக்கிற கெப்பாசிட்டி இல்ல. நீ அவ கிட்ட ஏதாவது கேட்டு பேசுனினா உனக்கு தான் டென்ஷன் ஆகும். நீ அவளை விடு.” என்றான் தினேஷ்.
அப்போது யாழினி ஏதோ பேசுவதற்காக தன் வாயை திறக்க, அவள் கையைப் பிடித்து வேண்டாம் என்று சைகை செய்த சங்கர் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அவங்களுக்குள்ள ஏதோ சண்டைனு நினைக்கிறேன். நம்ம அவங்க பிரச்சினைகுள்ள போக வேண்டாம். அவங்க என்னமோ சொல்லிட்டு போறாங்க நீ கம்முனு இரு.” என்றான். அதனால் யாழினி தன் வாயை மூடிக் கொண்டாள். தினேஷின் ஒவ்வொரு சிறிய செயலும் சுவாதியின் மனதை மெல்ல காயப்படுத்தி குத்தி கிழித்தது. அதனால் பீறிட்டு வந்த அழுகையை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
தனக்கு திருமணம் ஆகிவிட்டால் அவளது இல்லற வாழ்க்கை எப்படி எப்படியோ எல்லாம் இருக்கும் என்று தனது தோழிகளின் வாழ்க்கையை பார்த்து கற்பனை கோட்டை கட்டி வைத்து கொண்டு இருந்தவளுக்கு, இப்போது தினேஷ் அதற்கு அப்படியே நேர்மாறாக நடந்து கொள்வதால் “அவ்ளோ தான்ல.. என் வாழ்க்கையே போன மாதிரி இருக்கு. இதுக்கு மேல நான் என்ன பண்ணி எல்லாத்தையும் சரி பண்றது? பண்ணனும்னு நினைச்சாலும் பண்ண முடியுமா?” என்று நினைக்கும் போதே துக்கம் அவள் தொண்டையை அடைத்தது.
சுவாதி அமைதியாக வெளியில் வேடிக்கை பார்த்தபடி இருக்க, தினேஷ் கடமையே கண்ணாக தன் காரை ஓட்டிக்கொண்டு இருக்க, யாழினியும் சங்கரும் தங்களுக்குள் குசு குசுவென பேசிக்கொண்டே வந்தார்கள். அது அரைகுறையாக சுவாதியின் காதுகளிலும் விழுந்தது. அதனால் ஓர கண்ணால் அவர்களைப் பார்த்த சுவாதி “யாழினி சங்கர் கிட்ட அவ்ளோ குறை கண்டுபிடிக்கிறா.. நேத்து கூட அவர் பக்கத்துல வர கூட வேண்டாம்னு அவரை பார்த்து அப்படி பயந்தா.. இப்ப என்ன எதுவுமே நடக்காத மாதிரி இவங்க ரெண்டு பேரும் இவ்ளோ ஜாலியா இருக்காங்க? எனக்கும் தினேஷுக்கும் நடுவுல பெருசா எந்த பிரச்சினையுமே இல்ல.
ஆனா அடிக்கடி சண்டை வர்ற மாதிரியே இருக்கு. இவங்க ரெண்டு பேரும் எப்ப பாத்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்குற மாதிரி இருக்காங்க. ஆனா எப்பயும் ஒண்ணாவே இருக்காங்க. அதுதான் எப்படின்னு தெரியல.” என்று யோசித்துக் கொண்டே இருந்த சுவாதிக்கு “ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணதுனால தான் இப்படி இருக்காங்க போல.. என்னதான் எனக்கு தினேஷை பிடிக்கும் என்றாலும், நானா ஒன்னும் அவரை சூஸ் பண்ணி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலயே..!! அவருக்கும் அப்படித்தான். அதான் எங்களுக்குள்ள இன்னும் ஒரு understanding வர மாட்டேங்குது. பாக்கலாம்.. காலப்போக்கில எல்லாம் சரியாயிடும்ன்னு நம்புவோம்.” என்று நினைத்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
சில நிமிட பயணத்திற்கு பிறகு தினேஷின் கார் அவர்கள் வேலை பார்க்கும் ஆஃபீஸ் வாசலில் சென்று நின்றது. அவன் அதை பார்க்கிங் ஏரியாவில் கொண்டு சென்று நிறுத்த, காரில் இருந்த மற்ற மூவரும் கீழே இறங்கினார்கள். அதை கவனித்த ஒரு சிலர் “என்ன நீங்க நாலு பேரும் ஒண்ணா வரீங்க?” என்று கேட்க, தினேஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் சங்கரை பார்த்தான். “அது ஒன்னும் இல்ல.. நாங்க நாலு பேரும் ஒரே அபார்ட்மெண்ட்ல தான் தங்கி இருக்கோம். கிளம்பி கீழே வரும்போது தினேஷ் பார்க்கிங்கில இருந்தாரு. அதான் ஒன்னாவே கிளம்பி வந்துட்டோம்.” என்று சங்கர் சொல்லி சமாளிக்க, “ஓஹோ என்ன ஸ்வாதி வீடு மாத்திட்டியா? எப்பயும் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் யாழினி கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டு இப்ப ரெண்டு பேரும் ஒண்ணா வீடு எடுத்து தங்கி இருக்கீங்களா?” என்று சுவாதியிடம் கேட்டாள் ஒரு பெண்.
“ஆமா நான் ஸ்டே பண்ணி இருந்த PGல ரெண்ட் அதிகமா கேட்டாங்க. அதான் நாங்க தனியா வீடு எடுத்து தங்கிருக்கோம்.” என்று தினேஷை ஓரக் கண்ணால் பார்த்தபடி பொய் சொன்னாள் சுவாதி. தொடர்ந்து அந்த பெண் அவளிடம் ஏதோ கேள்வி கேட்க வர, “ஆல்ரெடி லேட்டாயிடுச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்கேன். தேவையில்லாம இங்க நின்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காதீங்க. இன்னைக்கு ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷன் இருக்கு. Keep it in your mind.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து சென்றுவிட்டான் தினேஷ். அதனால் மற்ற மூவரும் அந்த பெண்ணிடம் தாங்கள் பிறகு பேசுவதாக சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
காலையிலேயே தினேஷ் வேலை வேலை என்று கரராராக பேச தொடங்கி விட்டதால் சீக்கிரம் இருக்கும் வேலைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் அதிக பிரஷருடன் பிஸியாக கொஞ்சம் கூட மற்றதை யோசிக்க நேரம் இன்றி வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இதற்கு முன் இருந்ததை விட “நம்ம செய்ற வேலையில எந்த தப்பும் பண்ணி எரர் வாங்கி போய் நின்னு அவன் கிட்ட திட்டு வாங்கிட கூடாது. ஏற்கனவே அவன் என்னை மட்டமா தான் நினைக்கிறான். இதுல வேலை விஷயத்திலும் சொதப்புனேன்னா, மிச்சம் மீதி இருக்கிற மானம் மரியாதை எல்லாம் போயிடும்.” என்று நினைத்த ஸ்வாதி மற்ற இருவரையும் விட தனது டீம் மெம்பர்களுடன் சேர்ந்து தீயாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
யாழினி தான் அவர்களது ப்ராஜெக்ட் பற்றிய பிரசன்டேஷனை கொடுக்கப் போகிறாள் என்பதால் தன் தலையில் கை வைத்துக் கொண்டு அவள் இமைக்க மறந்து கம்ப்யூட்டர் ஸ்கிரீனோடு ஒட்டி போய் வேலை பார்த்துக் கொண்டு இருக்க, அதை கவனித்த சங்கர் தனது வேலைகளை முடித்துவிட்டு யாழினிக்கு ஒரு கப் காஃபியும், சுவாதிக்கு ஒரு டீயும் வாங்கிக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தான். அவனுக்கு இப்படி அடிக்கடி எல்லாம் தேவையில்லாத செலவு வைக்கக்கூடாது என்று நினைத்த சுவாதி “இல்ல பரவால்ல எனக்கு வேண்டாம் நீங்க குடிங்க.” என்று சொல்ல, தன் முன்னே இருந்த காபியை எடுத்து குடிக்க தொடங்கிய யாழினி “அட பரவாயில்ல குடி. எனக்கு திடீர்னு தல செமயா வலிக்குது. நான் மனசுல நினைச்சா கூட அது என் ஆளுக்கு நல்லா கேட்டுவிடும் போல. அதான் சார் எனக்கு காஃபி வாங்கிட்டு உனக்கு டீ வாங்கிட்டு வந்திருக்காரு.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
தானும் அவளை பார்த்து புன்னகைத்த சங்கர் தனது வேலையை பார்க்க தொடங்கிவிட, டீ குடிக்க தொடங்கிய சுவாதி மெல்லிய குரலில் யாழினியிடம் “என்னடி நேத்துதான் அவரை பார்த்து அப்படி பயந்துட்டு இருந்த! இன்னைக்கு என்னனா அவரை உன் ஆளுன்னு உரிமையா பேசுற...!! அதுக்குள்ள பயம் போயிடுச்சா? இல்ல, அவருக்கு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா?” என்று என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க, “சேச்சே.. இந்த விஷயத்துல மட்டும் நான் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். ஏன்னா இதுல அதிகமா பாதிக்கப்பட்டது நான்தான். சோ நான் எடுக்கிறதுதான் டெசிஷன்.” என்றாள் அவள்.
“அப்புறம் எப்படி முன்ன மாதிரி அவர் கிட்ட நார்மலா பேச ஆரம்பிச்சுட்ட?” என்று சுவாதி கேட்க, “அது ஒன்னும் இல்லடி, நேத்து என்ன அப்படி டயர்டா பார்த்த உடனே அவனே ஃபீல் ஆயிட்டான். சோ இனிமே எனக்கு புடிச்ச மாதிரி இருக்கிறதுன்னு டிசைட் பண்ணிட்டானாம். இன்னைக்கு காலையில என்னை குளிக்க வச்சதே அவன் தான் தெரியுமா..?? இதுக்கு முன்னாடி எல்லாம் இப்படி ஒரு சம்பவம் நடந்தா, அவன் அதவே சாக்க வச்சு என்னென்னமோ பண்ணி இருப்பான். நானும் அவனெல்லாம் எங்க மாற போறான்னு நினைச்சேன்.
பட் எனக்காக என் சங்கர் மாறிட்டான் டி. நினைச்சு பார்க்கவே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? That's my man. என்ன குழந்த மாதிரி குளிக்க வச்சான். நிஜமாவே intimacyல கிடைக்கிற feelஐ விட அது ரொம்ப நல்லா இருந்துச்சு. புதுசா இருந்துச்சு.” என்று வெட்கம் கலந்த கூச்சத்துடன் சொன்ன யாழினிக்கு அவனது கைகள் அவளது அங்கங்களை மெல்ல தடவியதும், அது அவளை உச்சத்திற்கு கொண்டு சென்று வதைத்ததும், அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் அவளது உடல் சிலிர்த்து அடங்கியதும், அவனது வெற்று உடலில் தன்னால் ஏற்பட்ட மாற்றங்களையும், அவன் தம்பி தலையை தூக்கி அவளை பார்த்ததையும் என்று அனைத்தையும் நினைத்துப் பார்க்கும்போது அவளுக்கு ஏதோ போல் இருந்தது.
அந்த தருணத்தில் சங்கர் அவனை எத்தனை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி இருப்பான் என்று அவளுக்கு நன்றாக தெரியும். ஆனால் அதை அவன் அவளுக்காக செய்திருக்கிறான் என்று யோசித்துப் பார்க்கும்போது, அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அவள் சொல்வதை கேட்கும் போதே அந்த தருணத்தை யாழினி எப்படி எல்லாம் என்ஜாய் செய்து இருப்பாள் என்று சுவாதியால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. அந்த இன்ப வேதனையை தானும் அனுபவித்து பார்க்க வேண்டும் என்று அவளது மனமும் இளமையும் ஏங்கி தவிக்க, அவள் கண்கள் அவளுக்குள் தினேஷின் மீது இருந்த கோபத்தையும் மீறி எதிரில் உள்ள கேபினில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த அவனை பார்த்தது.
பின் சீரியஸான முகத்துடன் தனக்கு அருகில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷங்கரை பார்த்தாள். அவனது கம்பீரமான ஆண்மை பொருந்திய தோற்றம் அவளை அதிகம் ஈர்த்தது. அதனால் எல்லாவற்றிலும் கண்டிப்பாக சங்கர் தான் சிறந்தவன் என்று நினைத்தாள் சுவாதி.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
அப்போது யாழினி ஏதோ பேசுவதற்காக தன் வாயை திறக்க, அவள் கையைப் பிடித்து வேண்டாம் என்று சைகை செய்த சங்கர் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் “அவங்களுக்குள்ள ஏதோ சண்டைனு நினைக்கிறேன். நம்ம அவங்க பிரச்சினைகுள்ள போக வேண்டாம். அவங்க என்னமோ சொல்லிட்டு போறாங்க நீ கம்முனு இரு.” என்றான். அதனால் யாழினி தன் வாயை மூடிக் கொண்டாள். தினேஷின் ஒவ்வொரு சிறிய செயலும் சுவாதியின் மனதை மெல்ல காயப்படுத்தி குத்தி கிழித்தது. அதனால் பீறிட்டு வந்த அழுகையை சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்து இருந்தாள்.
தனக்கு திருமணம் ஆகிவிட்டால் அவளது இல்லற வாழ்க்கை எப்படி எப்படியோ எல்லாம் இருக்கும் என்று தனது தோழிகளின் வாழ்க்கையை பார்த்து கற்பனை கோட்டை கட்டி வைத்து கொண்டு இருந்தவளுக்கு, இப்போது தினேஷ் அதற்கு அப்படியே நேர்மாறாக நடந்து கொள்வதால் “அவ்ளோ தான்ல.. என் வாழ்க்கையே போன மாதிரி இருக்கு. இதுக்கு மேல நான் என்ன பண்ணி எல்லாத்தையும் சரி பண்றது? பண்ணனும்னு நினைச்சாலும் பண்ண முடியுமா?” என்று நினைக்கும் போதே துக்கம் அவள் தொண்டையை அடைத்தது.
சுவாதி அமைதியாக வெளியில் வேடிக்கை பார்த்தபடி இருக்க, தினேஷ் கடமையே கண்ணாக தன் காரை ஓட்டிக்கொண்டு இருக்க, யாழினியும் சங்கரும் தங்களுக்குள் குசு குசுவென பேசிக்கொண்டே வந்தார்கள். அது அரைகுறையாக சுவாதியின் காதுகளிலும் விழுந்தது. அதனால் ஓர கண்ணால் அவர்களைப் பார்த்த சுவாதி “யாழினி சங்கர் கிட்ட அவ்ளோ குறை கண்டுபிடிக்கிறா.. நேத்து கூட அவர் பக்கத்துல வர கூட வேண்டாம்னு அவரை பார்த்து அப்படி பயந்தா.. இப்ப என்ன எதுவுமே நடக்காத மாதிரி இவங்க ரெண்டு பேரும் இவ்ளோ ஜாலியா இருக்காங்க? எனக்கும் தினேஷுக்கும் நடுவுல பெருசா எந்த பிரச்சினையுமே இல்ல.
ஆனா அடிக்கடி சண்டை வர்ற மாதிரியே இருக்கு. இவங்க ரெண்டு பேரும் எப்ப பாத்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருக்குற மாதிரி இருக்காங்க. ஆனா எப்பயும் ஒண்ணாவே இருக்காங்க. அதுதான் எப்படின்னு தெரியல.” என்று யோசித்துக் கொண்டே இருந்த சுவாதிக்கு “ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணதுனால தான் இப்படி இருக்காங்க போல.. என்னதான் எனக்கு தினேஷை பிடிக்கும் என்றாலும், நானா ஒன்னும் அவரை சூஸ் பண்ணி லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலயே..!! அவருக்கும் அப்படித்தான். அதான் எங்களுக்குள்ள இன்னும் ஒரு understanding வர மாட்டேங்குது. பாக்கலாம்.. காலப்போக்கில எல்லாம் சரியாயிடும்ன்னு நம்புவோம்.” என்று நினைத்து தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்.
சில நிமிட பயணத்திற்கு பிறகு தினேஷின் கார் அவர்கள் வேலை பார்க்கும் ஆஃபீஸ் வாசலில் சென்று நின்றது. அவன் அதை பார்க்கிங் ஏரியாவில் கொண்டு சென்று நிறுத்த, காரில் இருந்த மற்ற மூவரும் கீழே இறங்கினார்கள். அதை கவனித்த ஒரு சிலர் “என்ன நீங்க நாலு பேரும் ஒண்ணா வரீங்க?” என்று கேட்க, தினேஷ் என்ன சொல்வது என்று தெரியாமல் சங்கரை பார்த்தான். “அது ஒன்னும் இல்ல.. நாங்க நாலு பேரும் ஒரே அபார்ட்மெண்ட்ல தான் தங்கி இருக்கோம். கிளம்பி கீழே வரும்போது தினேஷ் பார்க்கிங்கில இருந்தாரு. அதான் ஒன்னாவே கிளம்பி வந்துட்டோம்.” என்று சங்கர் சொல்லி சமாளிக்க, “ஓஹோ என்ன ஸ்வாதி வீடு மாத்திட்டியா? எப்பயும் உன் பெஸ்ட் ஃப்ரெண்ட் யாழினி கூடவே இருக்கணும்னு ஆசைப்பட்டு இப்ப ரெண்டு பேரும் ஒண்ணா வீடு எடுத்து தங்கி இருக்கீங்களா?” என்று சுவாதியிடம் கேட்டாள் ஒரு பெண்.
“ஆமா நான் ஸ்டே பண்ணி இருந்த PGல ரெண்ட் அதிகமா கேட்டாங்க. அதான் நாங்க தனியா வீடு எடுத்து தங்கிருக்கோம்.” என்று தினேஷை ஓரக் கண்ணால் பார்த்தபடி பொய் சொன்னாள் சுவாதி. தொடர்ந்து அந்த பெண் அவளிடம் ஏதோ கேள்வி கேட்க வர, “ஆல்ரெடி லேட்டாயிடுச்சு. இன்னும் ஒரு மணி நேரத்துல மீட்டிங் அரேஞ்ச் பண்ணிருக்கேன். தேவையில்லாம இங்க நின்னு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்காதீங்க. இன்னைக்கு ப்ராஜெக்ட் ப்ரெசெண்டேஷன் இருக்கு. Keep it in your mind.” என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து சென்றுவிட்டான் தினேஷ். அதனால் மற்ற மூவரும் அந்த பெண்ணிடம் தாங்கள் பிறகு பேசுவதாக சொல்லி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
காலையிலேயே தினேஷ் வேலை வேலை என்று கரராராக பேச தொடங்கி விட்டதால் சீக்கிரம் இருக்கும் வேலைகள் அனைத்தையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அனைவரும் அதிக பிரஷருடன் பிஸியாக கொஞ்சம் கூட மற்றதை யோசிக்க நேரம் இன்றி வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இதற்கு முன் இருந்ததை விட “நம்ம செய்ற வேலையில எந்த தப்பும் பண்ணி எரர் வாங்கி போய் நின்னு அவன் கிட்ட திட்டு வாங்கிட கூடாது. ஏற்கனவே அவன் என்னை மட்டமா தான் நினைக்கிறான். இதுல வேலை விஷயத்திலும் சொதப்புனேன்னா, மிச்சம் மீதி இருக்கிற மானம் மரியாதை எல்லாம் போயிடும்.” என்று நினைத்த ஸ்வாதி மற்ற இருவரையும் விட தனது டீம் மெம்பர்களுடன் சேர்ந்து தீயாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள்.
யாழினி தான் அவர்களது ப்ராஜெக்ட் பற்றிய பிரசன்டேஷனை கொடுக்கப் போகிறாள் என்பதால் தன் தலையில் கை வைத்துக் கொண்டு அவள் இமைக்க மறந்து கம்ப்யூட்டர் ஸ்கிரீனோடு ஒட்டி போய் வேலை பார்த்துக் கொண்டு இருக்க, அதை கவனித்த சங்கர் தனது வேலைகளை முடித்துவிட்டு யாழினிக்கு ஒரு கப் காஃபியும், சுவாதிக்கு ஒரு டீயும் வாங்கிக் கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்தான். அவனுக்கு இப்படி அடிக்கடி எல்லாம் தேவையில்லாத செலவு வைக்கக்கூடாது என்று நினைத்த சுவாதி “இல்ல பரவால்ல எனக்கு வேண்டாம் நீங்க குடிங்க.” என்று சொல்ல, தன் முன்னே இருந்த காபியை எடுத்து குடிக்க தொடங்கிய யாழினி “அட பரவாயில்ல குடி. எனக்கு திடீர்னு தல செமயா வலிக்குது. நான் மனசுல நினைச்சா கூட அது என் ஆளுக்கு நல்லா கேட்டுவிடும் போல. அதான் சார் எனக்கு காஃபி வாங்கிட்டு உனக்கு டீ வாங்கிட்டு வந்திருக்காரு.” என்று சொல்லிவிட்டு சிரித்தாள்.
தானும் அவளை பார்த்து புன்னகைத்த சங்கர் தனது வேலையை பார்க்க தொடங்கிவிட, டீ குடிக்க தொடங்கிய சுவாதி மெல்லிய குரலில் யாழினியிடம் “என்னடி நேத்துதான் அவரை பார்த்து அப்படி பயந்துட்டு இருந்த! இன்னைக்கு என்னனா அவரை உன் ஆளுன்னு உரிமையா பேசுற...!! அதுக்குள்ள பயம் போயிடுச்சா? இல்ல, அவருக்கு அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிடலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா?” என்று என்ன நடந்தது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க, “சேச்சே.. இந்த விஷயத்துல மட்டும் நான் எதுக்காகவும் காம்ப்ரமைஸ் ஆக மாட்டேன். ஏன்னா இதுல அதிகமா பாதிக்கப்பட்டது நான்தான். சோ நான் எடுக்கிறதுதான் டெசிஷன்.” என்றாள் அவள்.
“அப்புறம் எப்படி முன்ன மாதிரி அவர் கிட்ட நார்மலா பேச ஆரம்பிச்சுட்ட?” என்று சுவாதி கேட்க, “அது ஒன்னும் இல்லடி, நேத்து என்ன அப்படி டயர்டா பார்த்த உடனே அவனே ஃபீல் ஆயிட்டான். சோ இனிமே எனக்கு புடிச்ச மாதிரி இருக்கிறதுன்னு டிசைட் பண்ணிட்டானாம். இன்னைக்கு காலையில என்னை குளிக்க வச்சதே அவன் தான் தெரியுமா..?? இதுக்கு முன்னாடி எல்லாம் இப்படி ஒரு சம்பவம் நடந்தா, அவன் அதவே சாக்க வச்சு என்னென்னமோ பண்ணி இருப்பான். நானும் அவனெல்லாம் எங்க மாற போறான்னு நினைச்சேன்.
பட் எனக்காக என் சங்கர் மாறிட்டான் டி. நினைச்சு பார்க்கவே எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? That's my man. என்ன குழந்த மாதிரி குளிக்க வச்சான். நிஜமாவே intimacyல கிடைக்கிற feelஐ விட அது ரொம்ப நல்லா இருந்துச்சு. புதுசா இருந்துச்சு.” என்று வெட்கம் கலந்த கூச்சத்துடன் சொன்ன யாழினிக்கு அவனது கைகள் அவளது அங்கங்களை மெல்ல தடவியதும், அது அவளை உச்சத்திற்கு கொண்டு சென்று வதைத்ததும், அவனது ஒவ்வொரு தொடுகைக்கும் அவளது உடல் சிலிர்த்து அடங்கியதும், அவனது வெற்று உடலில் தன்னால் ஏற்பட்ட மாற்றங்களையும், அவன் தம்பி தலையை தூக்கி அவளை பார்த்ததையும் என்று அனைத்தையும் நினைத்துப் பார்க்கும்போது அவளுக்கு ஏதோ போல் இருந்தது.
அந்த தருணத்தில் சங்கர் அவனை எத்தனை சிரமப்பட்டு கட்டுப்படுத்தி இருப்பான் என்று அவளுக்கு நன்றாக தெரியும். ஆனால் அதை அவன் அவளுக்காக செய்திருக்கிறான் என்று யோசித்துப் பார்க்கும்போது, அவளுக்கு அது மிகவும் பிடித்திருந்தது. அவள் சொல்வதை கேட்கும் போதே அந்த தருணத்தை யாழினி எப்படி எல்லாம் என்ஜாய் செய்து இருப்பாள் என்று சுவாதியால் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. அந்த இன்ப வேதனையை தானும் அனுபவித்து பார்க்க வேண்டும் என்று அவளது மனமும் இளமையும் ஏங்கி தவிக்க, அவள் கண்கள் அவளுக்குள் தினேஷின் மீது இருந்த கோபத்தையும் மீறி எதிரில் உள்ள கேபினில் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த அவனை பார்த்தது.
பின் சீரியஸான முகத்துடன் தனக்கு அருகில் அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த ஷங்கரை பார்த்தாள். அவனது கம்பீரமான ஆண்மை பொருந்திய தோற்றம் அவளை அதிகம் ஈர்த்தது. அதனால் எல்லாவற்றிலும் கண்டிப்பாக சங்கர் தான் சிறந்தவன் என்று நினைத்தாள் சுவாதி.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter- 24
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter- 24
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.