Chapter 23

Bhavani Varun

Member
Jan 23, 2025
45
0
6
சனந்தா எதுவும் பேசாமல், விக்ரமை நிமிர்ந்து கூட பார்க்காமல் அவள் உணவருந்தி விட்டு சரவணனுடன் சிறிது நேரம் வெளியில் நடந்து வருவதாக கூறி அவர்கள் இருவரும் மட்டும் நடக்க சென்றனர்.

“என்ன சனா, என்ன ஆச்சு?? ஏதாவது பேசணுமா?? இல்ல விக்ரம் அப்படி நடந்துக்கிட்டானே ஏதாவது வருத்தமா??” என்று சரவணன் கேட்க, “அய்யோ அதெல்லாம் இல்ல நீங்க வேற…. அவரு என்னிக்கு என்கிட்ட கோவமா இல்லாம இருந்திருக்காரு…. நான் அத பத்தி பேச கூப்பிடல…. நான் கொஞ்சம் பர்சனலா ஒரு விஷயம் சொல்லணும்னு நினைக்கிறேன்…. அதை எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல…. அது உங்களுக்கு எப்படி புரியும்னு கூட எனக்கு தெரியல சரவணன்…. ஆனா, நான் சொல்லாம விட்டேன்னா அது தப்பா ஆயிருமோன்னு எனக்கு தோணுது” என்று சனந்தா தயக்கத்தடனே அவள் கூற வந்ததை கூறி முடித்தாள்.

சரவணன் அவளை அமைதியாக பார்த்தான் எதுவும் பேசாமல். “என்ன சரவணன் பதிலே சொல்ல மாட்டேங்கிறீங்க??” என்று சனந்தா கேட்க, “எப்படி உங்க வீட்ல இதை சொன்னீங்க…. எப்படி அவங்களும் ஒத்துக்கிட்டாங்க” என்று சரவணன் ஆச்சர்யத்துடன் கேட்க, “அது தெரிஞ்சு பல சண்டைகள் எல்லாமே வந்தது…. ஆனா, அதுக்கு அப்புறமா அப்பா தான் இத முதல்ல புரிஞ்சுக்க ஆரம்பிச்சாரு…. அதுக்கு அப்புறம் அம்மாவுக்கும் புரிய வெச்சாரு…. அம்மாக்கு பெருசா இதுல விருப்பம் இல்லேனனாலும் இதை மாத்த முடியாது அப்படிங்கிறது அவங்க புரிஞ்சுகிட்டதுக்கு அப்புறம் அவங்க பெருசா கண்டுக்கல” என்று சனந்தா கூறினாள்.

“பரவாயில்லையே இத புரிஞ்சுக்குற அளவுக்கு அவங்களுக்கு பக்குவம் இருக்கே” என்று சரவணன் கூற, “அதுக்கு நிறைய போராடினோம் நானும் தம்பியும், சும்மா கிடையாது” என்று சனந்தா கூறினாள்.

“ம்ம்… இத எல்லாம் எனக்கு தெரிஞ்சு நான் சொல்லாம விட்டேன்னா தப்பா ஆயிருமோன்னு தான் உங்க கிட்ட சொல்லிடனும் எனக்கு தோணுச்சு…. அதான் சொல்லிட்டேன்” என்று சனந்தா கூற, சரவணன் அவனுடைய ரகசியத்தை போட்டு உடைத்தான்.

சனந்தா ஆச்சரியமாக அவனை பார்த்து அப்படியா!!!! என்று கேட்டாள். “என்ன இவ்ளோ ஆச்சரியப்படுற??” என்று சரவணன் கேட்க, “இல்ல இப்படித் தான் எனக்கும் முதல்ல விஷயம் தெரியும் போது ஆச்சரியமா இருந்தது… இப்ப நீங்க சொல்லும் போதும் எனக்கு அப்படி தான் இருந்துது வேற ஒன்னும் இல்ல” என்று சனந்தா கூற, “அதுக்கு தான் கேட்டேன் வீட்ல எப்படி சொன்னீங்கன்னு… எங்க வீட்ல இன்னும் தெரியாது” என்று சரவணன் கூறினான்.

“முதல்ல ஷாக் இருக்கும், ஆனா கண்டிப்பா புரிஞ்சிக்குவாங்க சரவணன்…. நீங்க அதை பத்தி கவலையே படாதீங்க… ஏன்னா கடைசில பசங்க தான் முக்கியம் அப்படின்னு யோசிப்பாங்க அப்ப கண்டிப்பா உங்கள புரிஞ்சிப்பாங்க…. நீங்க வருத்தப்படாதீங்க ரொம்பவும் குழப்பிக்காதீங்க” என்று சனந்தா கூறவும், “அப்படித் தான் நானும் எதிர்பார்க்கிறேன் பார்க்கலாம்” என்று சரவணன் கூறினான்.

“அப்புறம் நான் சொன்னது உங்களுக்கு….” என்று சனந்தா பேசவும், சரவணன் புன்னகைத்து, “அது….. எனக்கு இப்போதைக்கு பதில் சொல்ல தெரியல…. பார்க்கலாம்…. போகப் போக பிடிச்சா பார்க்கலாம்” என்று சரவணன் கூறவும், “உங்க சிரிப்பு புதுசா இருக்கே இப்ப தான் அப்படி நான் பார்க்கிறேன்” என்று சனந்தா கேலியாக கூறினாள்.

“ஐயோ!!! நீ வேற ஓட்டாத…. எனக்கு ஏதோ ஒரு மாதிரி ரிலீஃப்பா இருக்கு….
ஏன்னா இது விக்ரமுக்கு மட்டும் தான் இப்ப வரைக்கும் தெரியும்… வேற யாருக்கும் தெரியாது அவனுக்கு தெரிஞ்ச அப்பவும் அவன் பெருசா அதுக்கு ரியாக்ட பண்ணல…. ஒரு சின்ன ஷாக் இருந்துது அவ்ளோ மட்டும் தான்… அதுக்கப்புறம் எல்லாமே நார்மலா இருந்துச்சு…. இப்ப நீ ஷாக் ஆனல அந்த மாதிரி ஷாக் ஆனான் அப்புறம் அத பத்தி பெருசா பேசினது கூட இல்ல…. அதனால தான் அன்னிக்கு ஃபிரண்ட்ஷிப் பத்தி பேசும் போது கூட என்னை என்னையாவே அக்செப்ட் பண்ணிகிட்டது முதல்ல விக்ரம் தான்… அதனாலயோ என்னமோ தெரியல அவன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும், கூட பிறக்காத உடன்பிறப்பு மாதிரி” என்று சரவணன் கூறினான்.

“ம்ம்….. சரி அதெல்லாம் விடுங்க நான் இப்ப அண்ணான்னு கூப்பிடவா உங்கள” என்று கேலியாக சனந்தா கூற, “இப்போதைக்கு வேண்டாம்…. சரவணன்னே கூப்பிடு” என்று சரவணன் கூறவும், “ஓஹோ அப்படி போகுதா கதை…. ரைட்டு ரைட்டு” என்று சனந்தா அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

இவை அனைத்தும் விக்ரம் மொட்டை மாடியில் இருந்து கடுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான். “என்ன பேசுறாங்க இவங்க… ஒன்னுமே கேட்கலையே” என்று விக்ரம் அவனுக்குள் புலம்பிக் கொண்டிருந்தான்.

“சரி நான் உன்கிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்று சரவணன் கேட்க, “ம்ம்…. கேளுங்க” என்று சனந்தா கூறவும், “ஒன்னும் இல்ல…. விக்ரம் அவ்வளவு கோவப்படுறான் அதுலயும் இன்னிக்கு ரொம்ப கோவப்பட்டான் என்ன எதுக்குன்னு கூட உனக்கு தெரியல…. அப்படி இருந்தும் எப்படி நீ அமைதியா எல்லாத்தையும் எடுத்துக்கிற??” என்று சரவணன் கேட்டான்.

“எனக்கும் தெரியல நான் அப்படி எல்லாம் எடுத்துக்குற ஆள் இல்ல… நான் தப்பு பண்ணி இருக்கேன்னா நான் வாயை மூடிடுவேன் எதுவும் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்…. நான் தப்பு பண்ணலன்னா கண்டிப்பா திருப்பி பேசக்கூடிய ஆள் தான்…. ஆனா, ஏன்னு தெரியல பேசாம நான் அமைதியாகவே இருக்கேன் அவர் கிட்ட” என்று சனந்தா கூறினாள்.

சரவணன் புன்னகைத்து, “பார்ப்போம் அவனும் எவ்ளோ நாள் கோபப்படுறான்னு…. அதே மாதிரி நீயும் எவ்வளவு பொறுத்துக்கறேன்னு பார்ப்போம்” என்று சரவணன் கூறவும், சனந்தா தலையை மட்டும் அசைத்தாள். சனந்தா சிறிது நேரம் சரவணனுடன் பேசிவிட்டு அவளது அறைக்கு சென்று உறங்கினாள்.

விக்ரம் சனந்தா அவளுடைய அறைக்கு சென்றதும் சரவணன் வீட்டிற்கு ஓடி சென்று, இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அறிந்து கொண்டான். “நான் கூட வேற ஏதோ, இல்லனா என்னை பத்தி பேசுவாளோனு நினைச்சேன்…. இது தானா” என்று விக்ரம் சலித்துக் கொள்ள, “உன்ன பத்தி இல்லன்ன உடனே இவ்வளவு தானான்னு கேக்குற பார்த்தியா நீ” என்று சரவணன் கூறினான். “இதுக்கா நான் முழிச்சு இருந்தேன்… நான் போய் தூங்குறேன்” என்று கூறி விக்ரம் சென்றான்.

மறுநாள் சனந்தா அவள் பறித்து வந்த இலை பூக்களை பேக் செய்து சரவணனிடம் கொடுக்க, அவன் ஊட்டிக்கு சென்று கொடுத்துவிட்டு அவனது பெற்றோரை சந்தித்து வந்தான்.

அன்றைக்கு பள்ளியில் அனைவரும் மதிய உணவு கொண்டு வரவும் அனைவருடன் சேர்ந்து சனந்தாவும் உணவருந்தினாள். அப்படியே பல பாடங்களையும் கற்றுக் கொடுத்தாள். இப்படி தினமும் பள்ளிக்கு செல்வது சிறிது நேரம் சரவணனுடன் பேசுவது வள்ளியுடன் சேர்ந்து சமைப்பது….. ஸ்ரீனிவாசனுடன் பேசி அவ்வூரை பற்றி தெரிந்து கொள்வது…. அவ்வப்போது திலோ பாட்டியை பார்த்து பேசுவது…. காரணமின்றி விக்ரமின் கோபத்துக்கு ஆளாவது என அனைத்தும் நடந்து கொண்டு இருந்தது.

விக்ரமும் முடிந்த அளவிற்கு கோபத்தை காட்டாமல் அமைதியாக இருக்க முயற்சி செய்து கொண்டு தான் இருந்தான். இருப்பினும் சில நேரங்களில் அவனையும் மீறி கோபப்பட்டுவிடுவான். இவ்வாறே பல நாட்கள் கழிந்தது, ஒரு நாள் பள்ளியில் சனந்தாவின் வேலையை முடித்துக் கொண்டிருக்க சரவணன் ஃபோன் செய்து கீழே ஆபீஸ்க்கு வருமாறு கூறினான்.

சனந்தாவும் அங்கு சென்று பார்க்க, ரோகிணி வந்திருந்தாள். “அக்கா நீங்க இங்க என்ன பண்றீங்க??? எப்படி இருக்கீங்க??? எவ்வளவு நாளாச்சு உங்கள பார்த்து” என்று சனந்தா உற்சாகத்தில் ரோகிணியை நலம் விசாரித்தாள்.

“என்ன சனா, எப்படி இருக்க?? ரொம்ப நாளாச்சு பார்த்து…. நானும் கல்யாண வேலையில எல்லாம் பிஸி ஆயிட்டேன் அதனால தான் உன்ன பத்தி விசாரிக்காமலே இருந்துட்டேன்” என்று ரோகிணி கூறினாள்.

“அது எல்லாம் இருக்கட்டும் இப்ப இங்க என்ன பண்றீங்க??” என்று சனா கேட்க, “கல்யாணத்துக்கு இன்வைட் பண்ண வந்திருக்கேன்…. என்னுடைய ஃபியான்சேயோட ஃபிரெண்ட்ஸ் தான் சரவணன், விக்ரம் அவங்கள அழைக்கலாம்னு தான் வந்தேன்… அப்போ சரவணன் தான் சொன்னாரு நீ இங்க இருக்கேன்னு அதான் ஃபோன் பண்ணி வர சொன்னாரு” என்று ரோகிணி கூறினாள்.

“சரவணன் சொன்னாரா…. ஒரு நிமிஷம் இருங்க, “சரவணன், உங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு ரோகிணி அக்காவ தெரியும்ன்னு” என்று குழப்பத்துடன் சனா கேட்க, “முதல்ல அவங்க கிட்ட பேசு… நீ ஏதோ குழப்பத்தில இருக்க… அத அப்புறமா பேசிக்கலாம்” என்று சரவணன் சமாளித்தான்.

சனந்தா குழப்பத்துடனே இருக்க, “என்ன யோசிச்சிட்டு இருக்க சனா?” என்று ரோகிணி கேட்க, “ஒன்னும் இல்ல அக்கா…. ஆங் அப்புறம் உங்க வேலை எல்லாம் எப்படி போகுது?” என்று ரோகிணியின் வேலையை பற்றி சிறிது நேரம் பேசினர்.

“ஆமா ஒரு நிமிஷம் இருங்க… உங்களுக்கு நிச்சயம் ஆயிடுச்சா??? கல்யாணம்னு சொல்றீங்களே??” என்று சனந்தா மறுபடியும் குழப்பத்துடன் கேட்கவும், விக்ரம், சரவணன் மற்றும் அபிலாஷ் அனைவரும் அதை கவனித்தும் பெரிதாக கண்டு கொள்ளாதது போல் அவர்களின் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

“ஏய் சனா!!! என்ன ஆச்சு உனக்கு? எங்கேஜ்மென்ட் ஆயிருச்சு மா…. ரொம்ப க்ளோஸ் ஃபேமிலியோட நடந்து முடிஞ்சுது… ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் கூப்பிடனும்னு நாங்க விருப்பப்பட்டதுனால தனியா பார்ட்டி அரேஞ்ச் பண்ணோம்…. அப்ப தான நீ வந்த…. எல்லாம் மறந்துட்டியா நீ?? என்ன ஆச்சு உனக்கு???” என்று ரோகிணி கேட்க, “அப்படியா எனக்கு அப்படி நடந்த மாதிரி ஞாபகமே இல்லையே” என்று சனந்தா முணுமுணுத்துக் கொண்டாள்.

என்ன சொன்ன?? என்று ரோகிணி கேட்க, “ஒன்னும் இல்ல அக்கா வேற ஏதோ குழப்பத்துல இருந்துட்டேன் போல” என்று சனந்தா சமாளிக்கவும், “ஆமா பார்ட்டிக்கு வந்துட்டு போகும் போது தானே உனக்கு ஆக்சிடென்ட் கூட ஆச்சு” என்று ரோகிணி கூறவும், “என்னது பார்ட்டிக்கு வந்துட்டு போகும் போதா!!!” என்று சமந்தா உரைந்து நின்றாள்.

“நான் ஊட்டி ஸ்கூலுக்கு வந்துட்டு போகும் போது தானே ஆக்சிடென்ட் ஆச்சுன்னு நினைச்சுட்டு இருந்தேன்… எனக்கு ஒண்ணுமே புரியலையே ஒரே குழப்பமா இருக்கே…தலை வேற வலிக்குதே” என்று சனா அவளுக்குள் பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, அதை விக்ரம், சரவணன் மற்றும் அபிலாஷ் கவனித்துக் கொண்டு தான் இருந்தனர்.

“முதல்ல ரோகிணி அக்கா கிட்ட பேசி அனுப்புவோம் அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்” என்று சனா மனதிற்குள் நினைத்துக் கொண்டு, இருவரும் அவர்களின் வேலையை சார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். ரோகிணி மற்றும் அவளது வருங்கால கணவர் புறப்பட்டவுடன், சனந்தாவுக்கு அவளது மண்டையே வெடித்து விடும் அளவிற்கு குழப்பத்துடன் இருந்ததனால் சனந்தா ஆஃபிஸை விட்டு பக்கத்தில் நீர் தொட்டி இருக்கும் இடத்தில் வந்து, உடனே கௌதமுக்கு ஃபோன் செய்தாள்.

கௌதம் ஃபோன் எடுக்காததனால் திரும்பத் திரும்ப அழைக்க, கௌதம் கடுப்புடன் வீடியோ காலை அட்டென்ட் செய்து, “எத்தனை வாட்டி டி பண்ணுவ… இங்க என்ன டைம் தெரியுமா… இன்னும் விடியவே இல்ல ஏன் இப்படி பண்ற சனா??” என்று கௌதம் கடுப்புடன் பேச, “கௌதம் முதல்ல கண்ணை திறந்து பாரு நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு” என்று சனந்தா அதட்டலுடன் கூறினாள்.

“உனக்கு ஏதாவது கேக்கனும்ன்னா உன் தம்பிக்கு பண்ண வேண்டியது தானே… ஏன் எனக்கு பண்ண??” என்று கௌதம் கடுப்புடன் கேட்க, “நான் கேட்டா அவன் பதில் சொல்ல மாட்டான்… அதுவும் இல்லாம என்னை ஹேண்டில் பண்ண அவனுக்கு நல்லாவே தெரியும்… நீ தான் என்கிட்ட உளறுவ… நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு” என்று சனந்தா கோபத்துடன் கூறினாள்.

“நீ இங்க லீவுக்கு வந்தப்ப தான் நீயும் நானும் ஊட்டிக்கு போனோம் கரெக்டா??” என்று சனா கேட்க, “ஆமாம் டி அதை கேட்கவா பண்ண??” என்று கெளதம் கேட்க, “நான் சொல்றத மட்டும் கேளு” என்று சனந்தா கூறவும், “சொல்லி தொல!!!” என்றான் கௌதம் கடுப்புடன்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
 

Author: Bhavani Varun
Article Title: Chapter 23
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.