அவள் முகம் ஒரு நொடி வாடியதை பார்த்தவுடன் அவன் மனம் தாங்கவில்லை. அதனால் அடுத்த கணமே அவனது கோபம் எல்லாம் காணாமல் போய்விட, தரையில் அமர்ந்து இருந்த யாழினியின் கையைப் பிடித்து அவளை மேலே எழுப்பி கட்டிலில் அமர வைத்து “சரி விடு, இதுக்கெல்லாம் மூஞ்சியை இப்படி சோகமா வச்சுக்காத. உன்னை இப்படி பார்க்கவே நல்லா இல்ல. டிரஸ் தானே.. அதை அப்புறமா மடிச்சு வச்சுக்கலாம். இனிமே உனக்கு ஏதாவது வேணும்னா என்னை கேளு. நான் பக்கத்துல இல்லைன்னாலும் வர வரைக்கும் வெயிட் பண்ணு. நீயா எதுவும் பண்ணாத. ஓகேவா?” என்று சங்கர் அன்புடன் மெல்லிய குரலில் கேட்க, சரி என்று தலையாட்டிய யாழினி அமைதியாக சமத்துப் பிள்ளையாக அமர்ந்து கொண்டாள்.
அவள் கலைத்து கீழே போட்ட ஆடைகளை எல்லாம் எடுத்து பிறகு மடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஒரு ஓரமாக வைத்த ஷங்கர் அவள் தேடிக் கொண்டு இருந்த ஸ்கை ப்ளூ சர்ட்டை இரண்டே நிமிடத்தில் கண்டுபிடித்து அவளிடம் எடுத்துக் கொடுத்து விட்டான். அதனால் மகிழ்ந்த யாழினி உடனே அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு “தேங்க்யூ” என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள். வெளியில் உள்ள பாத்ரூம் ஃப்ரீயாக இருந்தால் அங்கே சென்று தானும் குளித்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்த சங்கர் அவனது உடைகளை தேடிக் கொண்டு இருக்க, பாத்ரூமில் இருந்து “ஒய்.. என் சோப்பு தீர்ந்துடுச்சு. எடுத்துட்டு வா.” என்று கத்தினாள் யாழினி.
“குளிக்க போறதுக்கு முன்னாடி சோப்பு இருக்கா இல்லையான்னு கூட பார்க்க மாட்டியா நீ?” என்று அவன் கேட்க, “ச்ச்.. உன் கிட்ட பேசுறதுக்கு எல்லாம் எனக்கு டைம் இல்ல சங்கர். சீக்கிரம் சோப் எடுத்துட்டு வா. ஆபீஸ் போகணும் லேட் ஆகுது.” என்று அவள் உள்ளே இருந்து தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததால் “அட வரேன் இரு டி கத்தாத.” என்ற சங்கர் அலமாரியில் இருந்த அவளது சோப்பை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்க்கு சென்று கதவை தட்டினான். சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த யாழினி வேகமாக வந்து கதவை திறக்க, தரை ஈரமாக இருந்ததால் டைல்ஸ் வழுக்கி கீழே விழச் சென்றாள்.
அதை கவனித்து சுதாரித்துக் கொண்ட சங்கர் “ஏய்... விழுந்திராத..!!” என்றபடி தன் இரு கைகளாலும் அவளது இடுப்பை வளைத்து பிடித்து அப்படியே அவளை ஏந்தி கொண்டான். பயத்தில் அவனது தோள்களை இறுக்கமாக பிடித்துக்கொண்ட யாழினி தன் கண்களையும் இறுக முடிக் கொண்டாள். அவளை அப்படி பார்க்க ஒரு அழகிய பூனைக்குட்டி பயத்தில் தன் கைகளில் தஞ்சம் புகுந்ததை போல அவனுக்குள் ஒரு உணர்வு ஏற்பட, நேற்று இரவு அவளை பார்த்து தன் மனதிற்குள் எடுத்துக் கொண்ட சபதம் அனைத்தையும் ஒரே நொடியில் மறந்து போன சங்கர் அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூமிற்க்குள் நுழைந்தான்.
அதுவரை ஏதோ ஒரு யோசனையில் இருந்த யாழினி திடீரென அவன் உள்ளே வருவதை கண்டு பயந்து போய் “இப்ப நீ எதுக்கு உள்ள வர? ஒழுங்கு மரியாதையா வெளிய போயிடு. நான் தான் இன்னும் ஒரு மாசத்துக்கு நமக்குள்ள எதுவும் இல்லைன்னு சொன்னேன்ல? அப்புறம் எதுக்கு நீ ஆடிட்டு உள்ள வர்ற? முதல்ல என்ன கீழே இறக்கி விடு.” என்று கத்தினாள். அவளை கீழே இறக்கிவிட்டு பாத்ரூம் கதவை லாக் செய்த சங்கர் பின்னே இருந்து அவளை அணைத்துக் கொண்டு அவள் பேச வாயை திறப்பதற்குள் அவள் வாயை தன் கையால் மூடி “ஷூ.. நீ எதுவும் சொல்ல வேண்டாம். நீ சொல்றது எல்லாமே ஓகே தான். எனக்கு புரியுது. உன்னை sex torture பண்றதுக்காக ஒன்னும் நான் உன்னை ஆசை ஆசையா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இப்படி உன்ன குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டு இருக்கல. புரியுதா?
நீ என் பொண்டாட்டி டி. உனக்கு ஒன்னு பிடிக்கலன்னா, உன்னை ஃபோர்ஸ் பண்ணி மறுபடியும் மறுபடியும் அத செய்யுற அளவுக்கு நான் என்ன sadistஆ? இனிமே நான் உன்னை எவ்ளோ softஆ handle பண்றேன்னு பாரு. பட் ப்ளீஸ்.. என்னை அவாய்ட் பண்ணாத. நான் ஏதாவது பண்ணிடுவனோன்னு நினைச்சு பயந்து ஓடாத. எனக்கு கஷ்டமா இருக்கு டி.” என்று உடைந்த குரலில் சொன்னான் சங்கர்.
அதனால் அவள் திரும்பி அவனை பார்க்க, அவன் கண்கள் கலங்கி இருந்தது. தனது நிராகரிப்பு அவனை இந்த அளவுக்கு யோசிக்க வைத்து காயப்படுத்தும் என்று யாழினி கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை. ஒருவேளை சுவாதி சொன்னதைப்போல தனக்கு தான் தனது கணவனை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தெரியவில்லையோ என்றெல்லாம் கூட யோசிக்க தொடங்கிய யாழினி உடனே அவனை கட்டியணைத்து “I am sorry. நான் உன்னை தப்பா சொல்லல. இதுக்காக எல்லாம் ஃபீல் பண்ணிட்டு இருக்காத டா ப்ளீஸ். நீ ரொம்ப sensitiveன்னு நீ எனக்கு தெரியும். ச்சே.. தெரிஞ்சே இப்படி பேசிட்டேன். இனிமே இப்படி பண்ண மாட்டேன். Sorry...” என்றாள்.
“ம்ம்.. பரவால்ல. நான் எவ்ளோ சேஞ்ச் ஆகிருக்கேன்னு இப்பவே உனக்கு ப்ரூவ் பண்றேன் பாரு!” என்ற சங்கர் மெல்ல அவளது ஆடைகளை கலட்ட தொடங்கினான். அவன் எமோஷனலாக பேசியதால் என்னதான் செய்கிறான் காத்திருந்து பார்ப்போம் என்ற நிலையில் யாழினி அமைதியாக இருக்க, தனது ஆடைகளையும் கலைந்த சங்கர் குழந்தை போல அவளை தூக்கி கொண்டு போய் bathtubஇல் அமர வைத்து குளிக்க வைத்தான். அவர்களது வழக்கத்தில் இப்படி எல்லாம் நடந்தால், முதலில் இங்கே தொடங்கி எங்கெங்கயோ சென்று அது முடிந்துவிடும். இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் பாத்ரூமை விட்டு வெளியேறுவார்கள்.
அதனால் யாழினி “இவனெல்லாம் திருந்தவே மாட்டான்.” என்ற ரீதியில் அவனை எரிச்சலுடன் பார்க்க, அவள் நினைத்ததற்கு மாறாக அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் கடமையே கண்ணாக ஒரு குழந்தை போல அவளை பாவித்து பொறுமையாக அவளை குளிக்க வைத்து ஒரு டவலில் சுற்றி வெளியே தூக்கி சென்றான். இவை அனைத்தும் நடந்து முடிய வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். அதனால் நடக்கும் அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த யாழினி “நெஜமாவே இவன் மாறிட்டானா?” என்று யோசித்துக் கொண்டிருக்க, “ரொம்ப யோசிக்காத போய் டிரஸ் சேஞ்ச் பண்ணு. நான் குளிச்சிட்டு வரேன். சாப்பாடு ரெடியா இருக்கு சாப்பிடலாம்.” என்று சொல்லிவிட்டு சென்றான் சங்கர்.
அவள் சங்கருடன் பழகிய இத்தனை வருடங்களில் அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவன் இந்த விஷயத்தில் மட்டும் இதுபோல எப்போதும் நடந்ததில்லை. அதனால் தனது நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறிவிட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்த யாழினி “எனக்கு உன்னோட இந்த நியூ வர்ஷன் ரொம்ப பிடிச்சிருக்கு சங்கர். இனிமே எப்பயும் இப்படியே இரு. ஐ லவ் யூ டா புருஷா..!!” என்று தன் மனதிற்குள் சொன்னவள், துள்ளி குதித்து எழுந்து ஆடை மாற்றுவதற்காக சென்றாள்.
தொடரும்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
facebook.com
அவள் கலைத்து கீழே போட்ட ஆடைகளை எல்லாம் எடுத்து பிறகு மடித்துக் கொள்ளலாம் என்று நினைத்து ஒரு ஓரமாக வைத்த ஷங்கர் அவள் தேடிக் கொண்டு இருந்த ஸ்கை ப்ளூ சர்ட்டை இரண்டே நிமிடத்தில் கண்டுபிடித்து அவளிடம் எடுத்துக் கொடுத்து விட்டான். அதனால் மகிழ்ந்த யாழினி உடனே அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டு அவன் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு “தேங்க்யூ” என்று சந்தோஷமாக சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்தாள். வெளியில் உள்ள பாத்ரூம் ஃப்ரீயாக இருந்தால் அங்கே சென்று தானும் குளித்துவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்த சங்கர் அவனது உடைகளை தேடிக் கொண்டு இருக்க, பாத்ரூமில் இருந்து “ஒய்.. என் சோப்பு தீர்ந்துடுச்சு. எடுத்துட்டு வா.” என்று கத்தினாள் யாழினி.
“குளிக்க போறதுக்கு முன்னாடி சோப்பு இருக்கா இல்லையான்னு கூட பார்க்க மாட்டியா நீ?” என்று அவன் கேட்க, “ச்ச்.. உன் கிட்ட பேசுறதுக்கு எல்லாம் எனக்கு டைம் இல்ல சங்கர். சீக்கிரம் சோப் எடுத்துட்டு வா. ஆபீஸ் போகணும் லேட் ஆகுது.” என்று அவள் உள்ளே இருந்து தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததால் “அட வரேன் இரு டி கத்தாத.” என்ற சங்கர் அலமாரியில் இருந்த அவளது சோப்பை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்க்கு சென்று கதவை தட்டினான். சீக்கிரமாக கிளம்ப வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த யாழினி வேகமாக வந்து கதவை திறக்க, தரை ஈரமாக இருந்ததால் டைல்ஸ் வழுக்கி கீழே விழச் சென்றாள்.
அதை கவனித்து சுதாரித்துக் கொண்ட சங்கர் “ஏய்... விழுந்திராத..!!” என்றபடி தன் இரு கைகளாலும் அவளது இடுப்பை வளைத்து பிடித்து அப்படியே அவளை ஏந்தி கொண்டான். பயத்தில் அவனது தோள்களை இறுக்கமாக பிடித்துக்கொண்ட யாழினி தன் கண்களையும் இறுக முடிக் கொண்டாள். அவளை அப்படி பார்க்க ஒரு அழகிய பூனைக்குட்டி பயத்தில் தன் கைகளில் தஞ்சம் புகுந்ததை போல அவனுக்குள் ஒரு உணர்வு ஏற்பட, நேற்று இரவு அவளை பார்த்து தன் மனதிற்குள் எடுத்துக் கொண்ட சபதம் அனைத்தையும் ஒரே நொடியில் மறந்து போன சங்கர் அவளை தூக்கிக்கொண்டு பாத்ரூமிற்க்குள் நுழைந்தான்.
அதுவரை ஏதோ ஒரு யோசனையில் இருந்த யாழினி திடீரென அவன் உள்ளே வருவதை கண்டு பயந்து போய் “இப்ப நீ எதுக்கு உள்ள வர? ஒழுங்கு மரியாதையா வெளிய போயிடு. நான் தான் இன்னும் ஒரு மாசத்துக்கு நமக்குள்ள எதுவும் இல்லைன்னு சொன்னேன்ல? அப்புறம் எதுக்கு நீ ஆடிட்டு உள்ள வர்ற? முதல்ல என்ன கீழே இறக்கி விடு.” என்று கத்தினாள். அவளை கீழே இறக்கிவிட்டு பாத்ரூம் கதவை லாக் செய்த சங்கர் பின்னே இருந்து அவளை அணைத்துக் கொண்டு அவள் பேச வாயை திறப்பதற்குள் அவள் வாயை தன் கையால் மூடி “ஷூ.. நீ எதுவும் சொல்ல வேண்டாம். நீ சொல்றது எல்லாமே ஓகே தான். எனக்கு புரியுது. உன்னை sex torture பண்றதுக்காக ஒன்னும் நான் உன்னை ஆசை ஆசையா லவ் பண்ணி கல்யாணம் பண்ணி இப்படி உன்ன குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டு இருக்கல. புரியுதா?
நீ என் பொண்டாட்டி டி. உனக்கு ஒன்னு பிடிக்கலன்னா, உன்னை ஃபோர்ஸ் பண்ணி மறுபடியும் மறுபடியும் அத செய்யுற அளவுக்கு நான் என்ன sadistஆ? இனிமே நான் உன்னை எவ்ளோ softஆ handle பண்றேன்னு பாரு. பட் ப்ளீஸ்.. என்னை அவாய்ட் பண்ணாத. நான் ஏதாவது பண்ணிடுவனோன்னு நினைச்சு பயந்து ஓடாத. எனக்கு கஷ்டமா இருக்கு டி.” என்று உடைந்த குரலில் சொன்னான் சங்கர்.
அதனால் அவள் திரும்பி அவனை பார்க்க, அவன் கண்கள் கலங்கி இருந்தது. தனது நிராகரிப்பு அவனை இந்த அளவுக்கு யோசிக்க வைத்து காயப்படுத்தும் என்று யாழினி கொஞ்சம் கூட எதிர்பார்த்து இருக்கவில்லை. ஒருவேளை சுவாதி சொன்னதைப்போல தனக்கு தான் தனது கணவனை சந்தோஷமாக வைத்துக்கொள்ள தெரியவில்லையோ என்றெல்லாம் கூட யோசிக்க தொடங்கிய யாழினி உடனே அவனை கட்டியணைத்து “I am sorry. நான் உன்னை தப்பா சொல்லல. இதுக்காக எல்லாம் ஃபீல் பண்ணிட்டு இருக்காத டா ப்ளீஸ். நீ ரொம்ப sensitiveன்னு நீ எனக்கு தெரியும். ச்சே.. தெரிஞ்சே இப்படி பேசிட்டேன். இனிமே இப்படி பண்ண மாட்டேன். Sorry...” என்றாள்.
“ம்ம்.. பரவால்ல. நான் எவ்ளோ சேஞ்ச் ஆகிருக்கேன்னு இப்பவே உனக்கு ப்ரூவ் பண்றேன் பாரு!” என்ற சங்கர் மெல்ல அவளது ஆடைகளை கலட்ட தொடங்கினான். அவன் எமோஷனலாக பேசியதால் என்னதான் செய்கிறான் காத்திருந்து பார்ப்போம் என்ற நிலையில் யாழினி அமைதியாக இருக்க, தனது ஆடைகளையும் கலைந்த சங்கர் குழந்தை போல அவளை தூக்கி கொண்டு போய் bathtubஇல் அமர வைத்து குளிக்க வைத்தான். அவர்களது வழக்கத்தில் இப்படி எல்லாம் நடந்தால், முதலில் இங்கே தொடங்கி எங்கெங்கயோ சென்று அது முடிந்துவிடும். இறுதியில் அவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு பிறகு தான் பாத்ரூமை விட்டு வெளியேறுவார்கள்.
அதனால் யாழினி “இவனெல்லாம் திருந்தவே மாட்டான்.” என்ற ரீதியில் அவனை எரிச்சலுடன் பார்க்க, அவள் நினைத்ததற்கு மாறாக அவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் கடமையே கண்ணாக ஒரு குழந்தை போல அவளை பாவித்து பொறுமையாக அவளை குளிக்க வைத்து ஒரு டவலில் சுற்றி வெளியே தூக்கி சென்றான். இவை அனைத்தும் நடந்து முடிய வெறும் 15 நிமிடங்கள் தான் ஆகியிருக்கும். அதனால் நடக்கும் அனைத்தையும் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த யாழினி “நெஜமாவே இவன் மாறிட்டானா?” என்று யோசித்துக் கொண்டிருக்க, “ரொம்ப யோசிக்காத போய் டிரஸ் சேஞ்ச் பண்ணு. நான் குளிச்சிட்டு வரேன். சாப்பாடு ரெடியா இருக்கு சாப்பிடலாம்.” என்று சொல்லிவிட்டு சென்றான் சங்கர்.
அவள் சங்கருடன் பழகிய இத்தனை வருடங்களில் அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவன் இந்த விஷயத்தில் மட்டும் இதுபோல எப்போதும் நடந்ததில்லை. அதனால் தனது நீண்ட நாள் ஆசை இப்போது நிறைவேறிவிட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்த யாழினி “எனக்கு உன்னோட இந்த நியூ வர்ஷன் ரொம்ப பிடிச்சிருக்கு சங்கர். இனிமே எப்பயும் இப்படியே இரு. ஐ லவ் யூ டா புருஷா..!!” என்று தன் மனதிற்குள் சொன்னவள், துள்ளி குதித்து எழுந்து ஆடை மாற்றுவதற்காக சென்றாள்.
தொடரும்..
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-21
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-21
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.