குளித்துவிட்டு தனது ஈர கூந்தலை துண்டுடன் சேர்த்து கட்டியிருந்த சுவாதி நைட்டி ஒன்றை அணிந்து கொண்டு பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள். பின் தனது ரூமிற்கு சென்று சுடிதார் ஒன்றை எடுத்து மாட்டிக்கொண்டு அப்படியே தலையில் கட்டி இருந்த துண்டை, அவிழ்க்காமல் நேராக கிச்சனுக்கு சென்று சமைக்க தொடங்கினாள். அவள் அங்கே இருந்த பொருட்களை துளவி பார்த்ததில் ஒரு டப்பாவில் கோதுமை மாவு இருப்பது தெரிந்தது. அதனால் சப்பாத்தி செய்யலாம் என்ற முடிவிற்கு வந்த சுவாதி அதற்கான பொருட்களை தேடி எடுக்க தொடங்கினாள். கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே அவள் சரியாக உறங்காததால் அவளுக்கு அதிக தலைவலி ஏற்பட, “ஒரு டீ குடிச்சா நல்லா இருக்குமே..!! பட் பாலுக்கு எங்க போறது..?? அதுவும் மணி இப்பதான் ஏழாகுது. அதுக்குள்ள பால் கிடைக்குமா?” என்று யோசித்துக் கொண்டு இருக்க, வாஷிங்மெஷினில் அவள் போட்டிருந்த துணி துவைத்து அலசி தயாராக இருந்தது.
அதனால் வாஷிங் மெஷின் பீப் என்ற சத்தத்தை எழுப்ப, உடனே பால்கனிக்கு சென்ற சுவாதி அனைத்து துணிகளையும் எடுத்து அங்கே இருந்த கொடிகளில் காய வைத்துவிட்டு வந்தாள். அப்போது தனது அருகில் உள்ள அலாரம் அடுத்ததால் அதை ஆஃப் செய்துவிட்டு தூங்கி எழுந்து வெளியே வந்த சங்கர் அப்போதே சுவாதி எழுந்து குளித்து ப்பிரஸ்ஸாக அனைத்து வேலைகளையும் பார்க்க தொடங்கிவிட்டதை கண்டு ஆச்சரியப்பட்டான். அவன் தன்னை பார்ப்பதை கவனித்த சுவாதி “குட் மார்னிங்.” என்றாள்.
“குட் மார்னிங். ரொம்ப சீக்கிரமா எந்திரிச்சிட்ட போல?” என்று சங்கர் சோம்பல் முறித்தபடி கேட்க, “ம்ம்.. புது இடம்ல சரியாவே தூக்கம் வரல. தலை வேற செமையா வலிக்குது. அதான் எவ்ளோ நேரம் அப்படியே படுத்து இருக்கிறதுன்னு எந்திரிச்சு வந்துட்டேன்.” என்றாள் சுவாதி. “எனக்கும் தலை வலிக்குது. நான் போய் பால் வாங்கிட்டு வரேன். காலையில எந்திரிச்ச உடனே டீ குடிச்சா தான் நமக்கு வேலையே ஓடும்.” என்ற சங்கர் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு பால் வாங்குவதற்காக கீழே சென்றான். அவன் வருவதற்குள் ஒரு பக்கம் அரிசியை ஊற வைத்துவிட்டு சப்பாத்தி மாவை பிசைந்து வைத்த ஸ்வாதி குருமாவிற்க்கு தேவையான பொருட்களை தேடிக் கொண்டு இருந்தாள்.
அதை கவனித்தபடி கையில் பால் பாக்கெட் உடன் கிச்சனுக்குள் நுழைந்த சங்கர் “பரவால்லையே... நான் நினைச்சதை விட நீ ஸ்பீடா வேலை செய்ற..!! அதுக்குள்ள சப்பாத்தி மாவு ரெடியா? குருமா வைக்க vegetables தேடிட்டு இருக்கியா?” என்று கேட்டுவிட்டு தானே அவளுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொடுத்தான். பின் அங்கே எந்தெந்த பொருட்கள் எங்கே இருக்கிறது என்று அவளுக்கு சொல்லிக் கொடுத்தான். அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்ட சுவாதி ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து குருமா வைக்க தேவையான பொருட்களை எல்லாம் போட்டு கொதிக்க வைத்துவிட்டு, மற்றொரு அடுப்பில் தோசை கல்லை வைத்து சப்பாத்தி கட்டையை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அந்த த்ரீ பர்னர் ஸ்டவ்வின் மூன்றாவது பர்னரின் மீது டீ கப்பை வைத்த சங்கர் அதில் பாலை ஊற்றினான். “நீங்க டீ போட போறீங்களா?” என்று சுவாதி ஆச்சரியமாக கேட்க, “ஆமா, ஏன் அப்படி கேக்குற? நான் போடுற டீ அவ்வளவு ஒன்றும் மோசமா இருக்காது. நீ இதுக்கு முன்னாடி குடிச்சிருக்கியே அப்புறம் என்ன..??” என்று கேட்டான் ஷங்கர்.
“இல்லை இல்லை.. இங்க நீங்க தான் சமைப்பீங்கன்னு எனக்கு தெரியும். பட் பொதுவாவே எல்லா வீட்லயும் பொண்ணுங்க தான் சமைப்பாங்களா.. நீங்க வேலை செய்றதை பார்க்கும்போது கொஞ்சம் டிப்ஃபரண்டா இருக்கு. நான் இதையெல்லாம் பார்த்து பழகுறதுக்கு டைம் ஆகும்ல்ல.. அதான் அப்படி கேட்டுட்டேன். நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க சங்கர்.” என்ற சுவாதி சப்பாத்தி மாவை தேய்த்து தோசை கல்லில் போட்டாள்.
“புரியுது புரியுது, பட் பொண்ணுங்க மட்டும் தான் எப்பவுமே சமைச்சிட்டு இருக்கணும்னு எதுவும் இல்லையே... எனக்கு மேரேஜ் ஆகுறதுக்கு முன்னாடி பெருசா எனக்கு சமைக்க தெரியாது. முதல்ல யாழினிக்காக ஆசைப்பட்டு கத்துக்கிட்டேன். இப்போ நம்ம சமைச்சு மத்தவங்களுக்கு கொடுக்கும் போது அவங்க முகத்துல வர்ற சந்தோஷத்தை பார்த்து என் மனசுக்கு கிடைக்கிற சந்தோஷத்துக்காக நான் இன்னும் சந்தோஷமா சமைக்க ஆரம்பிச்சிட்டேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்த சங்கர் டீயை வைத்து அதை ஒரு கப்பில் ஊற்றி அவளிடம் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்பில் ஊற்றி குடித்தான்.
பின் அவன் ஒரு பக்கம் அவள் ஏற்கனவே அரிசி ஊற வைத்து விட்டதால் மதியம் லஞ்சுக்கு தேவையானவற்றை செய்ய தொடங்கிவிட்டு இன்னொரு கப்பில் யாழினிக்காக டீயை லேசாக சூடு படுத்தி ஊற்றி எடுத்துக்கொண்டு அவளை எழுப்புவதற்காக சென்றுவிட்டான். அதை பார்த்த பிறகு தான் சுவாதிக்கு தினேஷை பற்றிய ஞாபகமே வந்தது. அதற்கு முன்பு வரை ஷங்கருடன் பேசியபடி அவனுடன் சேர்ந்து கிச்சனில் நின்று சமைப்பதனால் ஏதோ புதிதாக திருமணமாகி அவனுடன் அவள் சேர்ந்து வாழ இந்த வீட்டிற்கு வந்ததைப் போல அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு. ஆனால் அது அவளுக்கே புரியவில்லை. இருப்பினும் இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை என்பதால் அவசர அவசரமாக சாம்பார் வைத்து அதை சிம்மில் வைத்துவிட்டு தட்டை போட்டு மூடினாள். பின் ஏற்கனவே போடப்பட்டு தயாராக இருந்த டீயை லேசாக சூடு செய்து ஒரு கப்பில் ஊற்றிக்கொண்டு தனது ரூமிற்கு சென்றாள்.
யாழினியை எழுப்பிய சங்கர் அவளை டீ குடிக்க சொல்லிவிட்டு கிச்சனுக்கு வந்து மீதம் இருந்த வேலைகளை கவனித்துக் கொண்டான். தினேஷை எழுப்பிய சுவாதி அவனை கிளம்பச் சொல்லிவிட்டு தனது ஈர கூந்தலை உளர்த்துவதற்காக கையில் துண்டுடன் பால்கனி பக்கம் வெயில் அடித்ததால் அங்கே சென்றாள். சமைத்து முடித்திருந்த சங்கர் நேரம் 8 மணியை கடந்திருந்ததால் அனைவரையும் சாப்பிட அழைப்பதற்காக கிச்சனை விட்டு வெளியே வந்தான். அப்போது அந்த அழகான காலை நேரத்தின் மிதமான வெயில் மேலே பட, தனது கூந்தலை அந்தப் பக்கமும் இந்த பக்கமும் திருப்பி போட்டு துவட்டி கொண்டிருந்த சுவாதி அவன் கண்களில் பட்டாள்.
ஸ்வாதி எப்போதுமே பெரிதாக மேக்கப் எல்லாம் போட்டு hi-fiஆக இருப்பவள் இல்லை. வழக்கம்போல இப்போதும் அவள் சாதாரண சுடிதார் தான் அணிந்திருந்தாள். ஆனால் அந்த சூரியன் கதிர்களின் ஒளி அவள் மீது பட்டு தெரித்ததில், ஒப்பனை இல்லா பேரழகியாக மின்னிக் கொண்டிருந்தாள் அவள். அவள் அவனைவிட ஹைட் கம்மி என்பதால், பார்ப்பதற்கு குட்டியாக டின் பீரை போல சரியான வளைவு நெளிவுகளுடன் இருந்த சுவாதியை ஏனோ அவன் மனம் ரசித்தது. அப்போது யாழினி அவர்களது அறையில் இருந்து “சங்கர்.. ஏய் சங்கர்.. எங்க டா போன..?? இங்க வா.. என் ப்ளூ சர்ட்டை காணோம். வந்து எடுத்து குடு.” என்று சத்தமாக குரல் கொடுக்க, “இவளை நான் எப்ப குளிக்க சொன்னேன்.. இப்பதான் சட்டையை காணோம்.. பேண்டை காணோம்னு தொலைவிட்டு இருக்கா..!!” என்று நினைத்து மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டு தனது அறைக்கு சென்றான் சங்கர்.
அங்கே அவள் தேடிய அந்த ஒரு ப்ளூ நிற சட்டை கிடைக்காததால் அலமாரியில் உள்ள அனைத்து ஆடைகளையும் களைத்து கீழே போட்டு அதைத் தேடிக் கொண்டு இருந்தாள் யாழினி. அதனால் கடுப்பான சங்கர் “ஏண்டி உனக்கு அதே சட்டைய தான் போட்டாகனுமா? அது ஒன்னை தேடி எடுக்குறதுக்கு எத்தனை டிரஸ்சை எடுத்து கலைச்சு போட்டுருக்க.. நான் வர்றதுக்குள்ள அப்படி என்ன அவசரம் உனக்கு?” என்று உரத்த குரலில் கேட்க, அவனை பாவமாக திரும்பிப் பார்த்த யாழினி “என்ன நீ காலங்காத்தால என்ன திட்டுற? இப்ப என்ன..?? இதை நான் கலைச்சு போட்டது தான் தப்பா? பரவால்ல.. இது இப்படியே இருக்கட்டும். ஈவினிங் வந்து நான் எடுத்து வச்சுக்கிறேன். நீ என் ப்ளூ ஷர்ட் எங்க இருக்குதுன்னு மட்டும் சொல்லு. நான் எப்ப எத போடுவேன்னு உனக்கு நல்லா தெரியும். தெரிஞ்சும், நீ அதை கொண்டு போய் எங்கயோ உள்ள மறைச்சு வச்சிட்டா நான் என்ன பண்றது? ஏதாவது ஒன்னை எடுத்தா.. அடியில இருக்கிறது எல்லாம் கீழ விழுகுது. நீ அந்த மாதிரி மடிச்சு வச்சிட்டு, நான்தான் கலச்சிட்டேன்னு என்னை திட்டுற..!!” என்றாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
அதனால் வாஷிங் மெஷின் பீப் என்ற சத்தத்தை எழுப்ப, உடனே பால்கனிக்கு சென்ற சுவாதி அனைத்து துணிகளையும் எடுத்து அங்கே இருந்த கொடிகளில் காய வைத்துவிட்டு வந்தாள். அப்போது தனது அருகில் உள்ள அலாரம் அடுத்ததால் அதை ஆஃப் செய்துவிட்டு தூங்கி எழுந்து வெளியே வந்த சங்கர் அப்போதே சுவாதி எழுந்து குளித்து ப்பிரஸ்ஸாக அனைத்து வேலைகளையும் பார்க்க தொடங்கிவிட்டதை கண்டு ஆச்சரியப்பட்டான். அவன் தன்னை பார்ப்பதை கவனித்த சுவாதி “குட் மார்னிங்.” என்றாள்.
“குட் மார்னிங். ரொம்ப சீக்கிரமா எந்திரிச்சிட்ட போல?” என்று சங்கர் சோம்பல் முறித்தபடி கேட்க, “ம்ம்.. புது இடம்ல சரியாவே தூக்கம் வரல. தலை வேற செமையா வலிக்குது. அதான் எவ்ளோ நேரம் அப்படியே படுத்து இருக்கிறதுன்னு எந்திரிச்சு வந்துட்டேன்.” என்றாள் சுவாதி. “எனக்கும் தலை வலிக்குது. நான் போய் பால் வாங்கிட்டு வரேன். காலையில எந்திரிச்ச உடனே டீ குடிச்சா தான் நமக்கு வேலையே ஓடும்.” என்ற சங்கர் ரெஃப்ரெஷ் ஆகிவிட்டு பால் வாங்குவதற்காக கீழே சென்றான். அவன் வருவதற்குள் ஒரு பக்கம் அரிசியை ஊற வைத்துவிட்டு சப்பாத்தி மாவை பிசைந்து வைத்த ஸ்வாதி குருமாவிற்க்கு தேவையான பொருட்களை தேடிக் கொண்டு இருந்தாள்.
அதை கவனித்தபடி கையில் பால் பாக்கெட் உடன் கிச்சனுக்குள் நுழைந்த சங்கர் “பரவால்லையே... நான் நினைச்சதை விட நீ ஸ்பீடா வேலை செய்ற..!! அதுக்குள்ள சப்பாத்தி மாவு ரெடியா? குருமா வைக்க vegetables தேடிட்டு இருக்கியா?” என்று கேட்டுவிட்டு தானே அவளுக்கு தேவையான அனைத்தையும் எடுத்துக் கொடுத்தான். பின் அங்கே எந்தெந்த பொருட்கள் எங்கே இருக்கிறது என்று அவளுக்கு சொல்லிக் கொடுத்தான். அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்ட சுவாதி ஒரு அடுப்பில் பாத்திரத்தை வைத்து குருமா வைக்க தேவையான பொருட்களை எல்லாம் போட்டு கொதிக்க வைத்துவிட்டு, மற்றொரு அடுப்பில் தோசை கல்லை வைத்து சப்பாத்தி கட்டையை எடுத்துக் கொண்டு வந்தாள்.
அந்த த்ரீ பர்னர் ஸ்டவ்வின் மூன்றாவது பர்னரின் மீது டீ கப்பை வைத்த சங்கர் அதில் பாலை ஊற்றினான். “நீங்க டீ போட போறீங்களா?” என்று சுவாதி ஆச்சரியமாக கேட்க, “ஆமா, ஏன் அப்படி கேக்குற? நான் போடுற டீ அவ்வளவு ஒன்றும் மோசமா இருக்காது. நீ இதுக்கு முன்னாடி குடிச்சிருக்கியே அப்புறம் என்ன..??” என்று கேட்டான் ஷங்கர்.
“இல்லை இல்லை.. இங்க நீங்க தான் சமைப்பீங்கன்னு எனக்கு தெரியும். பட் பொதுவாவே எல்லா வீட்லயும் பொண்ணுங்க தான் சமைப்பாங்களா.. நீங்க வேலை செய்றதை பார்க்கும்போது கொஞ்சம் டிப்ஃபரண்டா இருக்கு. நான் இதையெல்லாம் பார்த்து பழகுறதுக்கு டைம் ஆகும்ல்ல.. அதான் அப்படி கேட்டுட்டேன். நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க சங்கர்.” என்ற சுவாதி சப்பாத்தி மாவை தேய்த்து தோசை கல்லில் போட்டாள்.
“புரியுது புரியுது, பட் பொண்ணுங்க மட்டும் தான் எப்பவுமே சமைச்சிட்டு இருக்கணும்னு எதுவும் இல்லையே... எனக்கு மேரேஜ் ஆகுறதுக்கு முன்னாடி பெருசா எனக்கு சமைக்க தெரியாது. முதல்ல யாழினிக்காக ஆசைப்பட்டு கத்துக்கிட்டேன். இப்போ நம்ம சமைச்சு மத்தவங்களுக்கு கொடுக்கும் போது அவங்க முகத்துல வர்ற சந்தோஷத்தை பார்த்து என் மனசுக்கு கிடைக்கிற சந்தோஷத்துக்காக நான் இன்னும் சந்தோஷமா சமைக்க ஆரம்பிச்சிட்டேன்.” என்று சொல்லிவிட்டு சிரித்த சங்கர் டீயை வைத்து அதை ஒரு கப்பில் ஊற்றி அவளிடம் கொடுத்துவிட்டு தானும் ஒரு கப்பில் ஊற்றி குடித்தான்.
பின் அவன் ஒரு பக்கம் அவள் ஏற்கனவே அரிசி ஊற வைத்து விட்டதால் மதியம் லஞ்சுக்கு தேவையானவற்றை செய்ய தொடங்கிவிட்டு இன்னொரு கப்பில் யாழினிக்காக டீயை லேசாக சூடு படுத்தி ஊற்றி எடுத்துக்கொண்டு அவளை எழுப்புவதற்காக சென்றுவிட்டான். அதை பார்த்த பிறகு தான் சுவாதிக்கு தினேஷை பற்றிய ஞாபகமே வந்தது. அதற்கு முன்பு வரை ஷங்கருடன் பேசியபடி அவனுடன் சேர்ந்து கிச்சனில் நின்று சமைப்பதனால் ஏதோ புதிதாக திருமணமாகி அவனுடன் அவள் சேர்ந்து வாழ இந்த வீட்டிற்கு வந்ததைப் போல அவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு. ஆனால் அது அவளுக்கே புரியவில்லை. இருப்பினும் இதையெல்லாம் யோசிக்க நேரமில்லை என்பதால் அவசர அவசரமாக சாம்பார் வைத்து அதை சிம்மில் வைத்துவிட்டு தட்டை போட்டு மூடினாள். பின் ஏற்கனவே போடப்பட்டு தயாராக இருந்த டீயை லேசாக சூடு செய்து ஒரு கப்பில் ஊற்றிக்கொண்டு தனது ரூமிற்கு சென்றாள்.
யாழினியை எழுப்பிய சங்கர் அவளை டீ குடிக்க சொல்லிவிட்டு கிச்சனுக்கு வந்து மீதம் இருந்த வேலைகளை கவனித்துக் கொண்டான். தினேஷை எழுப்பிய சுவாதி அவனை கிளம்பச் சொல்லிவிட்டு தனது ஈர கூந்தலை உளர்த்துவதற்காக கையில் துண்டுடன் பால்கனி பக்கம் வெயில் அடித்ததால் அங்கே சென்றாள். சமைத்து முடித்திருந்த சங்கர் நேரம் 8 மணியை கடந்திருந்ததால் அனைவரையும் சாப்பிட அழைப்பதற்காக கிச்சனை விட்டு வெளியே வந்தான். அப்போது அந்த அழகான காலை நேரத்தின் மிதமான வெயில் மேலே பட, தனது கூந்தலை அந்தப் பக்கமும் இந்த பக்கமும் திருப்பி போட்டு துவட்டி கொண்டிருந்த சுவாதி அவன் கண்களில் பட்டாள்.
ஸ்வாதி எப்போதுமே பெரிதாக மேக்கப் எல்லாம் போட்டு hi-fiஆக இருப்பவள் இல்லை. வழக்கம்போல இப்போதும் அவள் சாதாரண சுடிதார் தான் அணிந்திருந்தாள். ஆனால் அந்த சூரியன் கதிர்களின் ஒளி அவள் மீது பட்டு தெரித்ததில், ஒப்பனை இல்லா பேரழகியாக மின்னிக் கொண்டிருந்தாள் அவள். அவள் அவனைவிட ஹைட் கம்மி என்பதால், பார்ப்பதற்கு குட்டியாக டின் பீரை போல சரியான வளைவு நெளிவுகளுடன் இருந்த சுவாதியை ஏனோ அவன் மனம் ரசித்தது. அப்போது யாழினி அவர்களது அறையில் இருந்து “சங்கர்.. ஏய் சங்கர்.. எங்க டா போன..?? இங்க வா.. என் ப்ளூ சர்ட்டை காணோம். வந்து எடுத்து குடு.” என்று சத்தமாக குரல் கொடுக்க, “இவளை நான் எப்ப குளிக்க சொன்னேன்.. இப்பதான் சட்டையை காணோம்.. பேண்டை காணோம்னு தொலைவிட்டு இருக்கா..!!” என்று நினைத்து மானசீகமாக தன் தலையில் அடித்துக் கொண்டு தனது அறைக்கு சென்றான் சங்கர்.
அங்கே அவள் தேடிய அந்த ஒரு ப்ளூ நிற சட்டை கிடைக்காததால் அலமாரியில் உள்ள அனைத்து ஆடைகளையும் களைத்து கீழே போட்டு அதைத் தேடிக் கொண்டு இருந்தாள் யாழினி. அதனால் கடுப்பான சங்கர் “ஏண்டி உனக்கு அதே சட்டைய தான் போட்டாகனுமா? அது ஒன்னை தேடி எடுக்குறதுக்கு எத்தனை டிரஸ்சை எடுத்து கலைச்சு போட்டுருக்க.. நான் வர்றதுக்குள்ள அப்படி என்ன அவசரம் உனக்கு?” என்று உரத்த குரலில் கேட்க, அவனை பாவமாக திரும்பிப் பார்த்த யாழினி “என்ன நீ காலங்காத்தால என்ன திட்டுற? இப்ப என்ன..?? இதை நான் கலைச்சு போட்டது தான் தப்பா? பரவால்ல.. இது இப்படியே இருக்கட்டும். ஈவினிங் வந்து நான் எடுத்து வச்சுக்கிறேன். நீ என் ப்ளூ ஷர்ட் எங்க இருக்குதுன்னு மட்டும் சொல்லு. நான் எப்ப எத போடுவேன்னு உனக்கு நல்லா தெரியும். தெரிஞ்சும், நீ அதை கொண்டு போய் எங்கயோ உள்ள மறைச்சு வச்சிட்டா நான் என்ன பண்றது? ஏதாவது ஒன்னை எடுத்தா.. அடியில இருக்கிறது எல்லாம் கீழ விழுகுது. நீ அந்த மாதிரி மடிச்சு வச்சிட்டு, நான்தான் கலச்சிட்டேன்னு என்னை திட்டுற..!!” என்றாள்.
தொடரும்...
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-20
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-20
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.