அப்போது தினேஷின் நம்பருக்கு ஏதோ ஒரு கால் வர, அதை அட்டென்ட் செய்து “சொல்லுங்க.. சொல்லுங்க சார்..!! நீங்க சொன்ன workஐ நான் ஆல்மோஸ்ட் கம்ப்ளைன்ட் பண்ணிட்டேன். நாளைக்கு நான் ஆபீஸ் வந்துருவேன். So don't worry.” என்று ஃபோனில் பேசியபடி எழுந்து வெளியே சென்று விட்டான். ஸ்வாதி சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் தனது அம்மாவுடன் சேர்ந்து மதிய உணவையே தயார் செய்ய தொடங்கி இருந்தாள். அப்போது தான் அங்கே தூங்கி எழுந்து குளித்து கிளம்பி யாழினியும் சங்கரும் ஜோடியாக வந்தார்கள்.
அவர்களை பார்த்தவுடன் கிண்டலாக ஒரு மாதிரி சிரித்த சுவாதியின் அம்மா “என்ன யாழினி மா.. நல்ல தூக்கமா? நைட்டு இரண்டு பேரும் சரியாவே தூங்கல போல!” என்று கேட்க, “நம்ம போட்ட சத்தம் வெளிய கேட்டுருச்சோ! அதான் இவங்க இப்படி கிண்டலா தூங்கலையான்னு கேக்குறாங்க போல!” என்று நினைத்த யாழினி கூச்சத்தில் நெளிந்தவாறு “ம்ம்.. ஆமா ஆன்ட்டி, புது இடம்ல்ல! சோ எங்க ரெண்டு பேருக்குமே சரியா தூக்கமே வரல. நைட்டு ரொம்ப நேரம் பேய் படம் பார்த்துட்டு இருந்தோம். விடியும் போது தான் தூங்குனோம்.” என்று சொல்லி சமாளிக்க பார்த்தாள்.
அதனால் இம்முறை சத்தமாகவே சிரித்த சுவாதியின் அம்மா “ம்ம்.. ம்ம்.. படம் நல்லா இருந்துச்சா?” என்று நக்கலாக கேட்க, “நல்லா இருந்துச்சாவா? ஏன் ஆன்ட்டி நீங்க வேற.. டெரரா இருந்துச்சு ஆன்ட்டி. இனிமே எப்பவும் அந்த படத்தை பார்க்கவே மாட்டேன்.” என்று பயந்த குரலில் யாழினி சொல்ல, “இவளுக்கு ரசனையே இல்ல மா. அந்த படம் செமையா இருந்துச்சு. எத்தனை தடவை வேணாலும் பார்க்கலாம். போரே அடிக்காது. எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு. Chance கிடைச்சா இன்னொரு தடவை கூட பார்ப்பேன்.” என்ற சங்கர் குறும்பாக யாழினியை பார்த்து சிரித்தான். “பாப்பா டா பாப்ப.. உனக்கென்ன.. நீ தைரியமான ஆளு. நீ எத்தனை தடவை வேணும்னாலும் பாப்ப. பட் இதுக்கு மேல என்னால முடியாது. உனக்கு வேணும்னா நீ தனியா பாத்துக்கோ.” என்ற யாழினி அவனை பார்த்து முறைத்தாள்.
அவர்கள் பேசுவது எதுவுமே புரியாமல் திருத்திருவென சுவாதி விழித்துக் கொண்டு இருக்க, “என்னமோ சின்னஞ்சிறுசுங்க. உங்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல நல்ல படமா பார்த்து சந்தோசமா இருந்தா சரி தான். அதெல்லாம் அந்தந்த வயசுல தானே பார்த்து அனுபவிச்சு ஜாலியா இருக்க முடியும்! வாய்ப்பு கிடைக்கும் போதே சந்தோசமா இருக்கணும் யாழினி. என்ன.. நீங்க படம் பார்க்கும்போது, கொஞ்சம் சவுண்ட் மட்டும் கம்மியா வச்சு பார்த்திருக்கலாம். சுத்தி அமைதியா இருக்கறதுனால, வெளிய நல்லா கேக்கும்ல! அதான் சொல்றேன்” என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னார் சுவாதியின் அம்மா.
யாழினிக்கு ஒரே பப்பி ஷேமாக இருக்க, மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டு அவள் அருகில் இருந்த ஷங்கரின் காலை மிதித்து “எல்லாம் உன்னால தானா டா badu.. சரியான காஜி புடிச்சவன் டா நீ! இப்ப பாரு உன்னால அவங்க முன்னாடி நான்தான் அசிங்கப்பட்டு நிற்கிறேன். இவங்க மட்டும் தான் அதை நோட் பண்ணாங்களா, இல்ல எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சான்னு தெரியல. உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் படுற அவஸ்தை.. கொஞ்ச நஞ்சம் இல்லை. என் உயிரை வாங்குறதுக்குன்னே உன்னை பெத்து விட்டு இருக்காங்க டா பொறுக்கி.” என்று அவனது காதுகளில் கிசுகிசுத்தாள்.
அதை கவனித்த சுவாதி “அவங்க படம் பார்த்தா உனக்கு என்ன மா? சவுண்ட் கேட்டுச்சுன்னு அத போய் அவங்க கிட்ட எதுக்கு சொல்லிட்டு இருக்க? இப்ப பாரு அவங்க ரெண்டு பேரும் கோச்சிக்கிட்டு அவங்களுக்குள்ள என்னமோ குசுகுசுன்னு பேசிட்டு இருக்காங்க. வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?” என்று மெல்லிய குரலில் கேட்க, “அட போடி கூறுகெட்டவளே! நேத்து உனக்கும் மாப்பிள்ளைக்கும் தானே முதலிரவு! நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா? எல்லாம் நல்லபடியா நடக்குதான்னு சும்மா தெரிஞ்சுக்கலாம்னு நைட்டு உங்க ரூம் பக்கம் வந்தேன்.
ஆனா உங்க ரூம்ல ஃபேன் ஓடுற சத்தத்தை தவிர வேற எதுவுமே வெளிய கேக்கல. சரி என்னன்னு உன் கிட்ட காலைல விசாரிச்சுக்கலாம்னு விட்டுட்டேன். அப்ப இவங்க ரூம் பக்கமா வந்தேன். என்னா.. சத்தம் தெரியுமா? உங்க ரூம்ல இருந்து வர வேண்டிய சத்தம் எல்லாம் அவங்க ரூம்ல இருந்து வந்துட்டு இருந்துச்சு. அவங்களுக்கு கல்யாணம் ஆகி 2 வருஷத்துக்கு மேல ஆகுது. இப்ப கூட ரெண்டு பேரும் புதுசா கல்யாணமான மாதிரி எவ்ளோ அன்யூனியமா இருக்காங்கன்னு பாரு!
நீயும் தான் இருக்கியே.. ஒண்ணுத்துக்கும் உதவாதவ.. சரியான தத்தி. உனக்கு ஒரு மண்ணும் தெரியலைனா, அந்த யாழினி புள்ளை கிட்ட புருஷனை எப்படி கைக்குள்ள போட்டு கிட்டு முந்தானைல முடிஞ்சு வச்சுக்கறதுன்னு கத்துக்கோ. புதுசா கல்யாணம் பண்ணுன நீ ஊருக்கு முன்னாடியே தூங்கி எப்பயும் போல எந்திரிச்சு வர்ற! அதிலேயே உங்க ரெண்டு பேரோட லட்சணம் என்னன்னு நல்லா தெரியுது. கல்யாண வாழ்க்கையில பிரச்சனை வராம இருக்கணும்னா, கட்டில்ல நடக்க வேண்டியது எல்லாம் நல்லபடியா நடந்தாலே போதும் டி. உன்னை பெத்தவளா என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்.
உனக்கு கல்யாணம் ஆன பிள்ளைங்க எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்கு! அவங்க கிட்ட எல்லாம் கேட்டு கத்துக்கோ! இல்லைனா உன் வாழ்க்கை சந்தி சிரிச்சிடும் டி. மனசுல வச்சுக்கோ. கட்டுன புருசன நம்ம கைக்குள்ள வச்சிக்கிறதுக்கு இதுதான் முக்கியமான விஷயமே! இதிலேயே ஒன்னும் இல்லன்னா, மத்ததுல எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. உன்ன பார்த்தா.. நேத்து உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் நடுவுல எதுவும் நடந்த மாதிரியே தெரியல. உன்ன ரூமுக்குள்ள எப்படி அனுப்பி வச்சமோ அப்படியே தான் இருக்க. உன் வாழ்க்கையை நினைச்சாலே எனக்கு கவலையா இருக்கு டி.” என்று உடனே புலம்ப தொடங்கிவிட்டாள் அவளது அம்மா.
ஏற்கனவே அவள் அம்மா சொன்னதுதான் சுவாதியின் தலைக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்தது. இதில் அவள் அம்மா வேறு இன்னும் அவளை பயமுறுத்தி விட்டதால், வாடிய முகத்துடன் தலை குனிந்த சுவாதி “நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்லம்மா. நேத்து நடக்க வேண்டியது எல்லாம் எங்களுக்குள்ள கரெக்டா தான் நடந்துச்சு. எல்லாருமே ஒரே மாதிரி இருப்பாங்களா? நீ எங்களை யார் கூடயும் compare பண்ணாத. அவர் என் ஹஸ்பண்ட். எனக்கு அவரை பிடிச்சிருக்கு. அவருக்கு என்னை பிடிச்சிருக்கு. எனக்கு அது போதும்.” என்றாள். “உன் வாழ்க்கை நல்லா இருந்தா, முதல்ல உனக்காக சந்தோஷப்படப்போறது நான் தாண்டி. வெளில இருந்து பாக்குறவங்களுக்கு எப்படி தெரிஞ்சாலும் அது பெரிய விஷயம் இல்ல. அந்த நாலு செவத்துக்குள்ள நீயும் மாப்பிள்ளையும் சந்தோசமா இருந்தா சரி. போய் சங்கருக்கும் யாழினிக்கும் சாப்பாடு போடு போ.” என்று அவளது அம்மா சொல்ல, அரை மனதாக சரி என்று தலையாட்டிய சுவாதி அவர்களுக்கு உணவு பரிமாற சென்றாள்.
யாழினியும் சங்கரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஃபோன் பேசிவிட்டு உள்ளே வந்த தினேஷ் மீண்டும் சென்று சோஃபாவில் அமர, “மேனேஜர் உங்களுக்கு கால் பண்ணானா? அந்த ஆளு நேத்துல இருந்து எனக்கும் இவளுக்கும் மாத்தி மாத்தி ஃபோன் போட்டுக்கிட்டே இருக்கான் ப்ரோ. அத நாங்க ரெண்டு பேருமே எடுக்கல. நம்ம ongoing projectல இருந்த pending workஐ எல்லாம் நாங்க இங்க கிளம்பி வர்றத்துக்கு முன்னாடியே ஓரளவுக்கு முடிச்சிட்டு தான் வந்தோம். அதையும் இன்ஃபார்ம் பண்ணி தான் அவன் கிட்ட லீவ் கேட்டோம். லீவு கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு, இப்ப சும்மா கால் பண்ணி இரிடேட் பண்ணிட்டே இருக்கான் மங்கூஸ் மண்டையன். அவனைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வருது.” என்று அவனைப் பார்த்து சொன்னான் சங்கர்.
“எனக்கும் சும்மா அவர் கால் பண்ணிட்டே தான் இருந்தாரு சங்கர். இப்ப கூட அவர் கிட்ட தான் பேசிட்டு வர்றேன். Superiorஆ இருந்தாலே நமக்கு கீழ இருக்கிறவங்க கிட்ட சும்மா எதாவது சொல்லிக்கிட்டே இருந்தா தான் நல்லா இருக்கும்னு அவர மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு எண்ணம் இருக்கு. எல்லாரும் என்ன மாதிரியே இருப்பாங்களா ப்ரோ? விடுங்க பாத்துக்கலாம்.” என்று தினேஷ் சொல்ல, “ஆமா, உங்கள மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க தினேஷ். அதான் சீக்கிரம் நீங்க மேனேஜர் ஆயிட்டா நல்லா இருக்கும்னு நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.” என்று சாப்பிட்டுக் கொண்டு இருந்த யாழினி அவனை பார்த்து சொன்னாள்.
அப்போது அவர்களுக்காக சூடாக பூரியை சுட்டு கொண்டு வந்து அவர்களது தட்டில் போட்ட சுவாதி “ஆமாமா.. இவரை மாதிரியெல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க. எனக்குன்னு இவரை அந்த கடவுள் ஸ்பெஷலா manufacture பண்ணி அனுப்பி விட்டுருக்காரு.” என்று கிண்டலாக சொல்ல, அதைக் கூட புரிந்து கொள்ளாமல் தன்னை அவள் பாராட்டுகிறாள் என்று நினைத்து அவளைப் பார்த்து சிரித்தான் தினேஷ். ஆனால் மற்ற இருவருக்கும் அவள் சொன்னது புரிய, ஷங்கரும் யாழினியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
facebook.com
அவர்களை பார்த்தவுடன் கிண்டலாக ஒரு மாதிரி சிரித்த சுவாதியின் அம்மா “என்ன யாழினி மா.. நல்ல தூக்கமா? நைட்டு இரண்டு பேரும் சரியாவே தூங்கல போல!” என்று கேட்க, “நம்ம போட்ட சத்தம் வெளிய கேட்டுருச்சோ! அதான் இவங்க இப்படி கிண்டலா தூங்கலையான்னு கேக்குறாங்க போல!” என்று நினைத்த யாழினி கூச்சத்தில் நெளிந்தவாறு “ம்ம்.. ஆமா ஆன்ட்டி, புது இடம்ல்ல! சோ எங்க ரெண்டு பேருக்குமே சரியா தூக்கமே வரல. நைட்டு ரொம்ப நேரம் பேய் படம் பார்த்துட்டு இருந்தோம். விடியும் போது தான் தூங்குனோம்.” என்று சொல்லி சமாளிக்க பார்த்தாள்.
அதனால் இம்முறை சத்தமாகவே சிரித்த சுவாதியின் அம்மா “ம்ம்.. ம்ம்.. படம் நல்லா இருந்துச்சா?” என்று நக்கலாக கேட்க, “நல்லா இருந்துச்சாவா? ஏன் ஆன்ட்டி நீங்க வேற.. டெரரா இருந்துச்சு ஆன்ட்டி. இனிமே எப்பவும் அந்த படத்தை பார்க்கவே மாட்டேன்.” என்று பயந்த குரலில் யாழினி சொல்ல, “இவளுக்கு ரசனையே இல்ல மா. அந்த படம் செமையா இருந்துச்சு. எத்தனை தடவை வேணாலும் பார்க்கலாம். போரே அடிக்காது. எனக்கு ரொம்ப புடிச்சி இருந்துச்சு. Chance கிடைச்சா இன்னொரு தடவை கூட பார்ப்பேன்.” என்ற சங்கர் குறும்பாக யாழினியை பார்த்து சிரித்தான். “பாப்பா டா பாப்ப.. உனக்கென்ன.. நீ தைரியமான ஆளு. நீ எத்தனை தடவை வேணும்னாலும் பாப்ப. பட் இதுக்கு மேல என்னால முடியாது. உனக்கு வேணும்னா நீ தனியா பாத்துக்கோ.” என்ற யாழினி அவனை பார்த்து முறைத்தாள்.
அவர்கள் பேசுவது எதுவுமே புரியாமல் திருத்திருவென சுவாதி விழித்துக் கொண்டு இருக்க, “என்னமோ சின்னஞ்சிறுசுங்க. உங்களுக்கு புடிச்ச மாதிரி நல்ல நல்ல படமா பார்த்து சந்தோசமா இருந்தா சரி தான். அதெல்லாம் அந்தந்த வயசுல தானே பார்த்து அனுபவிச்சு ஜாலியா இருக்க முடியும்! வாய்ப்பு கிடைக்கும் போதே சந்தோசமா இருக்கணும் யாழினி. என்ன.. நீங்க படம் பார்க்கும்போது, கொஞ்சம் சவுண்ட் மட்டும் கம்மியா வச்சு பார்த்திருக்கலாம். சுத்தி அமைதியா இருக்கறதுனால, வெளிய நல்லா கேக்கும்ல! அதான் சொல்றேன்” என்று இரட்டை அர்த்தத்தில் சொன்னார் சுவாதியின் அம்மா.
யாழினிக்கு ஒரே பப்பி ஷேமாக இருக்க, மானசிகமாக தன் தலையில் அடித்துக் கொண்டு அவள் அருகில் இருந்த ஷங்கரின் காலை மிதித்து “எல்லாம் உன்னால தானா டா badu.. சரியான காஜி புடிச்சவன் டா நீ! இப்ப பாரு உன்னால அவங்க முன்னாடி நான்தான் அசிங்கப்பட்டு நிற்கிறேன். இவங்க மட்டும் தான் அதை நோட் பண்ணாங்களா, இல்ல எல்லாருக்கும் தெரிஞ்சிடுச்சான்னு தெரியல. உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் படுற அவஸ்தை.. கொஞ்ச நஞ்சம் இல்லை. என் உயிரை வாங்குறதுக்குன்னே உன்னை பெத்து விட்டு இருக்காங்க டா பொறுக்கி.” என்று அவனது காதுகளில் கிசுகிசுத்தாள்.
அதை கவனித்த சுவாதி “அவங்க படம் பார்த்தா உனக்கு என்ன மா? சவுண்ட் கேட்டுச்சுன்னு அத போய் அவங்க கிட்ட எதுக்கு சொல்லிட்டு இருக்க? இப்ப பாரு அவங்க ரெண்டு பேரும் கோச்சிக்கிட்டு அவங்களுக்குள்ள என்னமோ குசுகுசுன்னு பேசிட்டு இருக்காங்க. வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படி தான் பேசுவியா?” என்று மெல்லிய குரலில் கேட்க, “அட போடி கூறுகெட்டவளே! நேத்து உனக்கும் மாப்பிள்ளைக்கும் தானே முதலிரவு! நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா? எல்லாம் நல்லபடியா நடக்குதான்னு சும்மா தெரிஞ்சுக்கலாம்னு நைட்டு உங்க ரூம் பக்கம் வந்தேன்.
ஆனா உங்க ரூம்ல ஃபேன் ஓடுற சத்தத்தை தவிர வேற எதுவுமே வெளிய கேக்கல. சரி என்னன்னு உன் கிட்ட காலைல விசாரிச்சுக்கலாம்னு விட்டுட்டேன். அப்ப இவங்க ரூம் பக்கமா வந்தேன். என்னா.. சத்தம் தெரியுமா? உங்க ரூம்ல இருந்து வர வேண்டிய சத்தம் எல்லாம் அவங்க ரூம்ல இருந்து வந்துட்டு இருந்துச்சு. அவங்களுக்கு கல்யாணம் ஆகி 2 வருஷத்துக்கு மேல ஆகுது. இப்ப கூட ரெண்டு பேரும் புதுசா கல்யாணமான மாதிரி எவ்ளோ அன்யூனியமா இருக்காங்கன்னு பாரு!
நீயும் தான் இருக்கியே.. ஒண்ணுத்துக்கும் உதவாதவ.. சரியான தத்தி. உனக்கு ஒரு மண்ணும் தெரியலைனா, அந்த யாழினி புள்ளை கிட்ட புருஷனை எப்படி கைக்குள்ள போட்டு கிட்டு முந்தானைல முடிஞ்சு வச்சுக்கறதுன்னு கத்துக்கோ. புதுசா கல்யாணம் பண்ணுன நீ ஊருக்கு முன்னாடியே தூங்கி எப்பயும் போல எந்திரிச்சு வர்ற! அதிலேயே உங்க ரெண்டு பேரோட லட்சணம் என்னன்னு நல்லா தெரியுது. கல்யாண வாழ்க்கையில பிரச்சனை வராம இருக்கணும்னா, கட்டில்ல நடக்க வேண்டியது எல்லாம் நல்லபடியா நடந்தாலே போதும் டி. உன்னை பெத்தவளா என்னால இவ்வளவுதான் சொல்ல முடியும்.
உனக்கு கல்யாணம் ஆன பிள்ளைங்க எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்கு! அவங்க கிட்ட எல்லாம் கேட்டு கத்துக்கோ! இல்லைனா உன் வாழ்க்கை சந்தி சிரிச்சிடும் டி. மனசுல வச்சுக்கோ. கட்டுன புருசன நம்ம கைக்குள்ள வச்சிக்கிறதுக்கு இதுதான் முக்கியமான விஷயமே! இதிலேயே ஒன்னும் இல்லன்னா, மத்ததுல எல்லாம் ஒன்னும் பண்ண முடியாது. உன்ன பார்த்தா.. நேத்து உனக்கும் உன் வீட்டுக்காரருக்கும் நடுவுல எதுவும் நடந்த மாதிரியே தெரியல. உன்ன ரூமுக்குள்ள எப்படி அனுப்பி வச்சமோ அப்படியே தான் இருக்க. உன் வாழ்க்கையை நினைச்சாலே எனக்கு கவலையா இருக்கு டி.” என்று உடனே புலம்ப தொடங்கிவிட்டாள் அவளது அம்மா.
ஏற்கனவே அவள் அம்மா சொன்னதுதான் சுவாதியின் தலைக்குள்ளும் ஓடிக் கொண்டிருந்தது. இதில் அவள் அம்மா வேறு இன்னும் அவளை பயமுறுத்தி விட்டதால், வாடிய முகத்துடன் தலை குனிந்த சுவாதி “நீ நினைக்கிற அளவுக்கு எல்லாம் ஒன்னும் இல்லம்மா. நேத்து நடக்க வேண்டியது எல்லாம் எங்களுக்குள்ள கரெக்டா தான் நடந்துச்சு. எல்லாருமே ஒரே மாதிரி இருப்பாங்களா? நீ எங்களை யார் கூடயும் compare பண்ணாத. அவர் என் ஹஸ்பண்ட். எனக்கு அவரை பிடிச்சிருக்கு. அவருக்கு என்னை பிடிச்சிருக்கு. எனக்கு அது போதும்.” என்றாள். “உன் வாழ்க்கை நல்லா இருந்தா, முதல்ல உனக்காக சந்தோஷப்படப்போறது நான் தாண்டி. வெளில இருந்து பாக்குறவங்களுக்கு எப்படி தெரிஞ்சாலும் அது பெரிய விஷயம் இல்ல. அந்த நாலு செவத்துக்குள்ள நீயும் மாப்பிள்ளையும் சந்தோசமா இருந்தா சரி. போய் சங்கருக்கும் யாழினிக்கும் சாப்பாடு போடு போ.” என்று அவளது அம்மா சொல்ல, அரை மனதாக சரி என்று தலையாட்டிய சுவாதி அவர்களுக்கு உணவு பரிமாற சென்றாள்.
யாழினியும் சங்கரும் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். ஃபோன் பேசிவிட்டு உள்ளே வந்த தினேஷ் மீண்டும் சென்று சோஃபாவில் அமர, “மேனேஜர் உங்களுக்கு கால் பண்ணானா? அந்த ஆளு நேத்துல இருந்து எனக்கும் இவளுக்கும் மாத்தி மாத்தி ஃபோன் போட்டுக்கிட்டே இருக்கான் ப்ரோ. அத நாங்க ரெண்டு பேருமே எடுக்கல. நம்ம ongoing projectல இருந்த pending workஐ எல்லாம் நாங்க இங்க கிளம்பி வர்றத்துக்கு முன்னாடியே ஓரளவுக்கு முடிச்சிட்டு தான் வந்தோம். அதையும் இன்ஃபார்ம் பண்ணி தான் அவன் கிட்ட லீவ் கேட்டோம். லீவு கொடுக்கிற மாதிரி கொடுத்துட்டு, இப்ப சும்மா கால் பண்ணி இரிடேட் பண்ணிட்டே இருக்கான் மங்கூஸ் மண்டையன். அவனைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வருது.” என்று அவனைப் பார்த்து சொன்னான் சங்கர்.
“எனக்கும் சும்மா அவர் கால் பண்ணிட்டே தான் இருந்தாரு சங்கர். இப்ப கூட அவர் கிட்ட தான் பேசிட்டு வர்றேன். Superiorஆ இருந்தாலே நமக்கு கீழ இருக்கிறவங்க கிட்ட சும்மா எதாவது சொல்லிக்கிட்டே இருந்தா தான் நல்லா இருக்கும்னு அவர மாதிரி ஆளுங்களுக்கு எல்லாம் ஒரு எண்ணம் இருக்கு. எல்லாரும் என்ன மாதிரியே இருப்பாங்களா ப்ரோ? விடுங்க பாத்துக்கலாம்.” என்று தினேஷ் சொல்ல, “ஆமா, உங்கள மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க தினேஷ். அதான் சீக்கிரம் நீங்க மேனேஜர் ஆயிட்டா நல்லா இருக்கும்னு நாங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்.” என்று சாப்பிட்டுக் கொண்டு இருந்த யாழினி அவனை பார்த்து சொன்னாள்.
அப்போது அவர்களுக்காக சூடாக பூரியை சுட்டு கொண்டு வந்து அவர்களது தட்டில் போட்ட சுவாதி “ஆமாமா.. இவரை மாதிரியெல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க. எனக்குன்னு இவரை அந்த கடவுள் ஸ்பெஷலா manufacture பண்ணி அனுப்பி விட்டுருக்காரு.” என்று கிண்டலாக சொல்ல, அதைக் கூட புரிந்து கொள்ளாமல் தன்னை அவள் பாராட்டுகிறாள் என்று நினைத்து அவளைப் பார்த்து சிரித்தான் தினேஷ். ஆனால் மற்ற இருவருக்கும் அவள் சொன்னது புரிய, ஷங்கரும் யாழினியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.
தொடரும்..
அமேசானில் முழு புத்தகத்தையும் படிக்க:
இதழ் அமுதங்களால் நிறைந்தேன் | Idhal Amuthangalal Nirainthen by SNK Books [Tamil Edition] : Tamil adult Romantic novel https://amzn.in/d/9PbpXaN
எங்களது பேஸ்புக் குரூப்பில் இணைய:
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.