விக்ரம் மற்றும் சனந்தா விக்ரம் வீட்டின் மாடியில், விக்ரம் மடியில் சனந்தா அமர்ந்து கொண்டு அவன் தோளில் சாய்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
“இப்போ எனக்கு கிடைக்கிற இந்த ஒரு ஃபீல் இருக்குல்லப்பா இத நான் ரொம்ப மிஸ் பண்ணேன்… அதுவும் பிரச்சனை எல்லாம் நடந்து என்னென்னவோ எனக்கு சொல்லும் போது எனக்கு ஞாபகமே இல்லாத விஷயங்கள் எல்லாத்தையும் பேசும் போது என் பக்கத்துல நீங்க இல்லவே இல்ல விக்ரம்…. அவ்ளோ கடந்து தவிச்சேன் உங்களுக்காக அன்னிக்கு… எனக்கு உங்க மேல கோபம் வெறுப்பு நீங்க என் பக்கத்துல இல்லன்றதுனால தான் நிறைய இருந்திருக்கு எனக்கு” என்று சனந்தா அவன் தோளில் சாய்ந்து கொண்டே பேசினாள்.
சனந்தா அவளின் வருத்தத்தை கூறவும் அவளை மேலும் அவன் மடியில் இறுக்கமாக கட்டிக் கொண்டான் விக்ரம். “அன்னிக்கு எப்படி தெரியுமா நான் கஷ்டப்பட்டேன்…. எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துது தெரியுமா” என்று சனந்தா போன வருடம் பூஜையின் ஐந்தாவது நாள் நடந்த விஷயங்களை கூற ஆரம்பித்தாள்.
ஐந்தாம் நாள் பூஜை அன்று காலையில் அனு மற்றும் அனுவின் அப்பா ராஜ்மோகன் வந்து விக்ரம் வீட்டில் அனைத்தும் பேசிவிட்டு சென்ற பின் அனைவரின் முகமும் சற்று வாட்டமாக இருந்ததை சனந்தா உணர்ந்தாள். என்ன என்று விக்ரமிடம் சைகையில் கேட்கவும் பிறகு சொல்வதாக கூறி விட்டான்.
பின் மதிய வேளையில் அனைவரும் உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க செல்லும் போது விக்ரம் மற்றும் சரவணனுக்கு ஊட்டியில் ஆஃபீஸ்லிருந்து ஃபோன் செய்து உடனடியாக வருமாறு அழைக்கவும் அவர்கள் இருவரும் கூறிவிட்டு சென்றனர்.
அவர்கள் சென்றதிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் காளி அவர்களின் ஆட்களுடன் ஊருக்குள் வந்தார். அபிலாஷ் எவ்வளவோ முயற்சி செய்தாலும் சரவணன் அல்லது விக்ரமை தொடர்பு கொள்ளவே இயலவில்லை.
காளி வந்தது தெரிவிக்க முயற்சி செய்தாலும் அதில் தோற்று தான் போனான் அபிலாஷ். “என்ன ஸ்ரீனிவாசன் ரொம்ப சிறப்பா நடத்துறீங்க போல பூஜைய???” என்று காளி கேட்கவும், ஸ்ரீனிவாசன் புன்னகையுடன், “எல்லா வருஷமும் நடக்கிற மாதிரி தான் நடத்திட்டு இருக்கோம்” என்று மட்டும் கூறினார்.
ஆனால் சனந்தாவுக்கோ காளியை பார்த்ததும் ஏனோ சற்று தலை வலிப்பது போலவே உணர்ந்து ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள். அபிலாஷ் அவள் அருகில் வந்து என்ன ஆச்சு?? என்று கேட்க, “தெரியல டாக்டர் ஒரு மாதிரி இருக்கு அதுவும் இவரை பார்த்ததுல இருந்து இன்னும் ஒரு மாதிரி இருக்கு” என்று சனந்தா கூறினாள்.
“ஆனா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தான் ஸ்ரீனிவாசன்…. உங்க பொண்ண கூட்டிட்டு போய் சாவடிச்சு அந்த பொண்ணையே உங்க ஊருக்கு வர வெச்சு வாலன்டியரா ஒரு வேலையும் கொடுத்து.. வீட்ல உட்கார வெச்சு சோறும் போடுறீங்களே” என்று சனந்தாவை காட்டி காளி பேசவும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அபிலாஷுக்கு தான் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். சனந்தாவோ உறைந்து நின்று கொண்டிருந்தாள். ஸ்ரீனிவாசனுக்கும் வள்ளிக்கும் என்ன பேசுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
“ஓ!!! உங்களுக்கு விஷயம் தெரியாதா… நம்ம பொண்ணு அபர்ணாவ கூட்டிட்டு போனது இந்த பொண்ணு தான்…. அதிலும் இந்த பொண்ண தான் இந்த ஊருக்கு வந்து வேலை செய்யனும்னு அடம் புடிச்சு உங்க பையன் தான் கூட்டிட்டு வந்தான்”….
“எங்க அவன்??? அவனுக்கு எல்லாம் விஷயம் தெரியுமே ஆளையே காணோமே… ரொம்ப பழிவாங்குற எண்ணம் எல்லாம் செட் ஆகாது ஸ்ரீனிவாசன் உங்க பையனுக்கு சொல்லி வைங்க….. என்ன இருந்தாலும் அவளும் ஒரு பொண்ணு தான் அவள பழி வாங்கி என்ன ஆகப் போகுது உங்களுக்கு…. ஆனா எப்படியோ பழி வாங்குற எண்ணத்தோட கூட்டிட்டு வந்துட்டு அந்தப் பொண்ணு கூட ஊர்ல சுத்திட்டு இருக்கானாமே…. ரெண்டு பேரும் விரும்புறாங்களாமே” என்று காளி அனைத்து வன்மத்தையும் கக்கி விட்டார்.
அவ்வளவு நேரம் சனந்தா தலைவலியில் இருந்து காளி பேசியதில் அவள் சற்று மயக்க நிலையில் செல்லவும், அபிலாஷ் அவளை தாங்கிப் பிடித்து தட்டி தண்ணீர் கொடுத்து, “இங்க பாரு இப்ப நீ முழிச்சு ஏதாவது பேசு” என்று கூறவும் சனந்தா கண்களில் கண்ணீர் மட்டுமே நிறைந்திருந்தது.
ஸ்ரீனிவாசனும் வள்ளியும் இன்னும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்க என்ன பேசுவது என்று தெரியாமல் திரும்பி சனந்தாவை பார்க்கவோ அவளின் நிலையும் அப்படியே தான் இருந்தது.
அபிலாஷ் ஸ்ரீனிவாசனிடம் வந்து, “அப்பா நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க சரவணனையும் விக்ரமையும் என்னால தொடர்பு கொள்ளவே முடியல…. சனந்தா மேல எந்த தப்பும் இல்லப்பா” என்று அபிலாஷ் பேசிக் கொண்டிருக்க,
ஸ்ரீனிவாசன் அவனை நிறுத்தி, “அபர்ணா போன கார ஓட்டுனது இந்த பொண்ணு தானா?? அபர்ணா தன்னுடைய உடல் உறுப்பை கொடுக்கணும்னு சொன்னது சனந்தாக்கு தானா??? அந்த கோவத்துல தான் விக்ரம் அவளை ஊருக்கு கூட்டிட்டு வந்தானா??? அப்ப விக்ரமுக்கு இது எல்லாம் தெரியுமா?? இது எல்லாத்துக்கும் மேல விக்ரமும் சனந்தாவும் விரும்புறாங்களா???? எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று ஸ்ரீனிவாசன் வரிசையாக கேட்டார்.
அனைத்துக்கும் ஆமா என்று பதில் அளித்தான் அபிலாஷ். இது சனந்தாவுக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி யாரிடமும் எதையும் பேசிக் கொள்ளாமல் வீட்டிற்கு சென்று விட்டனர்.
அங்கு இருந்த மக்களோ அவர்களுக்குள்ளே அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கவும் அது சனந்தாவிற்கு பெரும் அவமானமாகவே உணர்ந்தாள். வந்த வேலை முடிந்தது என்று காளியும் புறப்பட்டு விட்டார் அவர்களின் ஆட்களுடன்.
“என்ன இருந்தாலும் நீயாவது உண்மையை சொல்லி இருக்கலாம்ல சனா” என்ற கூட்டத்தில் ஒருவர் கூறவும், “உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல சனா மேல எந்த தப்பும் இல்ல கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று அபிலாஷ் பேசவும், அவனுடைய பேச்சு யாரு காதிலும் விழுந்த மாதிரியே தெரியவில்லை.
அனைவரும் ஒவ்வொரு விதமாக பேச ஆரம்பித்து சனந்தாவை குறை கூறிக் கொண்டிருந்தார்கள். “இங்க இருந்தா இப்படி தான் பேசிட்டு இருப்பாங்க நீ வா போலாம்” என்று அபிலாஷ் சனந்தாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லவும் அவளோ, “நான் அத்தை மாமாவை பார்த்திட்டு வரேன்” என்று சனந்தா கூறவும், “உனக்கு புரியல சனா கொஞ்சம் பொறுமையா இரு அவங்க கிட்ட அப்புறம் கூட பேசிக்கலாம்” என்று அபிலாஷ் கூறினான்.
அவளை ஒரு வழியாக சமாதானம் செய்த அவளது அறைக்குள் விட்டு விட்டு ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளியை காண சென்றான் அபிலாஷ். ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி இருவரும் அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தனர்.
அபிலாஷ் வந்து, “அப்பா அம்மா கொஞ்சம் பொறுமையா கேளுங்க இப்ப நடந்தது எல்லாமே ஒரு பகுதி தான் இதோட உண்மையான காரணங்கள் எல்லாம் என்னன்னு நமக்கு தெரியாது அது எல்லாம் போக சனாவுக்கு இப்படி ஒரு ஆக்சிடென்ட் நடந்ததுன்னே தெரியாது அவ தனியா போனப்ப ஏதோ ஆக்சிடென்ட் ஆச்சுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்கா இவ்வளவு நாளா” என்று அபிலாஷ் கூறினான். இருவரும் பதில் பேசாமல் அமைதியாகவே இருந்தனர்.
சனந்தாவுக்கோ மனம் பொறுக்காமல் வீட்டுக்குள் வந்து வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் அருகில் கீழே அமர்ந்து கொண்டு, “அத்தை நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க” என்று கூறவும் வள்ளியோ முகத்தையும் காட்டாமல் திருப்பிக் கொண்டார். ஸ்ரீனிவாசனும் கண்களை மூடி தலை சாய்த்து கொண்டார்.
அவள் எவ்வளவு பேச முயற்சித்தாலும் இருவரும் பிடி கொடுக்கவே இல்லை. அவள் அழுதும் பார்த்து விட்டாள் இருப்பினும் அவர்கள் அப்படியே இருக்கவும் அபிலாஷ் தான் அவளை சமாதானம் செய்து அவளது அறையில் விட்டு வந்தான்.
அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டே கழித்து விட்டனர் அனைவரும். ஆனால் விக்ரம் மற்றும் சரவணனிடமிருந்து எந்த தகவலும் இல்லாமலே இருந்தது.
சனந்தா காலையில் எழுந்து அவளுடைய உடைமைகள் அனைத்தையும் பேக் செய்து விட்டு சந்திரசேகருக்கு ஃபோன் செய்து வண்டி அனுப்புமாறு கூறிவிட்டு வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசனை அவர்களின் வீட்டு வாசலில் நின்று, அத்த… ஆன்ட்டி அங்கிள் என்று அழைக்கவும் இருவரும் வெளியே வந்தனர்.
“இது ரூமோட சாவி நான் கிளம்புறேன்” என்று சனந்தா கூறவும் இருவரும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தனர்.
காலையில் அபிலாஷுக்கு ஃபோன் செய்து விட்டதால் அவனும் வந்து விடவும், “சனா விக்ரம் வந்திடட்டும் அதுக்கப்புறம் பேசிட்டு போ சனா” என்று அபிலாஷ் கூறவும், “உண்மை என்னன்னு தெரியாதப்ப யார் வந்து பேசினா என்ன டாக்டர்… பரவால்ல” என்று சனந்தா கூறி விட்டு, பின் ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளியை நோக்கி, “ரொம்ப தேங்க்ஸ் அத்த…. ஆன்ட்டி அங்கிள் ரெண்டு பேருக்கும்…. என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டிங்க… ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டு போனும்னு ஆசைப்படுகிறேன்…. உண்மை என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் கண்டிப்பா நான் உங்களை வந்து பார்த்துட்டு சொல்லிட்டு போவேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டாள் சனந்தா.
சந்திரசேகர் வண்டி அனுப்பி இருக்கவும் வீட்டிற்கு சென்று விட்டு நடந்த அனைத்தையும் கூறவும் சந்திரசேகரும், “ஆமாம் எனக்கு இது தெரியும்” என்று ஒத்துக் கொள்ளவும் அவரிடமும் பேச மனமின்றி பல நாள் பேசாமலே இருந்து விட்டாள் சனந்தா.
இது லக்ஷ்மிக்கு அதிர்ச்சியாக இருக்கவும் லக்ஷ்மி சனந்தாவிடம் பொறுமையாக பேசவும் அவள் விக்ரமை விரும்புவதும் அவளுக்கு தெரிந்த கலவரங்கள் அனைத்தையும் மெதுவாக கூறினாள்.
சந்திரசேகரிடம் அதைப் பற்றி பேசவும், “எனக்கு ரெண்டு பேரும் விரும்புறது பிரச்சனை இல்லம்மா… ஆனா இருக்கிற பிரச்சினை எல்லாம் சரி பண்ணிட்டாலே போதும்…. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கூட பண்ணி வெச்சுருவேன் நானே… ஏன்னா சனா அவ்வளவு சந்தோஷமா இருந்தா அவங்க கூட” என்று சந்திரசேகர் கூறினார்.
“ம்ம்.. சரி அப்ப கொஞ்ச நாள் ஆறட்டும் அதுக்கு அப்புறமா வள்ளி கிட்ட நான் பேசுறேன்” என்று லக்ஷ்மி கூறினார். அவர் கூறியதை போலவே ஒரு வாரத்திற்கு பிறகு வள்ளியை அழைத்து பேசவும். “அந்த சூழ்நிலையில எங்களால சனா கிட்ட பேசவே முடியல எங்கள மன்னிச்சிடுங்க… விக்ரம் வந்து சில விஷயங்களை சொன்னதும் சனாவ கஷ்டப்படுத்திட்டோமோன்னு எனக்கு வருத்தமா இருக்கு” என்று வள்ளி கூறினார்.
“உங்க நிலைமை எனக்கு புரியாம இல்ல.. எனக்கும் பொண்ணு இருக்கா… அந்த பொண்ணுக்கு இப்படி நடந்து இருந்ததுன்னு நான் கேள்விப்பட்டனாலும் என் கோபம் தானா உங்க பொண்ணு மேல தானே வரும் அதனால புரிஞ்சுக்க முடியுது… நான் இல்லைன்னு சொல்லல… ஆனா, உண்மை என்னன்னு தெரியல… சனா ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்கள் தான் கிராமத்தில இருந்த நாட்கள்… அதிலும் விக்ரமை விரும்புறான்னு அவ வாயாலேயே தெரிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு சந்தோஷம் தான்…. அதனால கொஞ்சம் டைம் மட்டும் குடுங்க… சனா கண்டிப்பா சரியாயிருவா” என்று லக்ஷ்மி கூறினார்.
“என்ன லக்ஷ்மி இப்படி பேசுறீங்க நானே சனாவை காயப்படுத்திட்டேனு ரொம்ப வருத்தத்தில இருக்கேன்…. ரெண்டு நாளா பித்து புடிச்ச மாதிரி இருந்துது…. அதுக்கு அப்புறம் சனாவை காணோம்னு தேட ஆரம்பிச்சிட்டேன்…. அந்த அளவுக்கு அவ என் கூடவே ஒட்டிட்டா…. ஆனா என்னால எப்படி அவகிட்ட பேசறதுன்னு தெரியல” என்று வள்ளி வருத்தத்துடன் கூறினார்.
“அதெல்லாம் சரி ஆகும் நீங்க கொஞ்சம் டைம் மட்டும் குடுங்க அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்துவிடும்… வந்ததுக்கு அப்புறம் நம்ம பேசிக்கலாம்” என்று லக்ஷ்மியும் ஆறுதல் கூறி ஃபோனை வைத்தார்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
“இப்போ எனக்கு கிடைக்கிற இந்த ஒரு ஃபீல் இருக்குல்லப்பா இத நான் ரொம்ப மிஸ் பண்ணேன்… அதுவும் பிரச்சனை எல்லாம் நடந்து என்னென்னவோ எனக்கு சொல்லும் போது எனக்கு ஞாபகமே இல்லாத விஷயங்கள் எல்லாத்தையும் பேசும் போது என் பக்கத்துல நீங்க இல்லவே இல்ல விக்ரம்…. அவ்ளோ கடந்து தவிச்சேன் உங்களுக்காக அன்னிக்கு… எனக்கு உங்க மேல கோபம் வெறுப்பு நீங்க என் பக்கத்துல இல்லன்றதுனால தான் நிறைய இருந்திருக்கு எனக்கு” என்று சனந்தா அவன் தோளில் சாய்ந்து கொண்டே பேசினாள்.
சனந்தா அவளின் வருத்தத்தை கூறவும் அவளை மேலும் அவன் மடியில் இறுக்கமாக கட்டிக் கொண்டான் விக்ரம். “அன்னிக்கு எப்படி தெரியுமா நான் கஷ்டப்பட்டேன்…. எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துது தெரியுமா” என்று சனந்தா போன வருடம் பூஜையின் ஐந்தாவது நாள் நடந்த விஷயங்களை கூற ஆரம்பித்தாள்.
ஐந்தாம் நாள் பூஜை அன்று காலையில் அனு மற்றும் அனுவின் அப்பா ராஜ்மோகன் வந்து விக்ரம் வீட்டில் அனைத்தும் பேசிவிட்டு சென்ற பின் அனைவரின் முகமும் சற்று வாட்டமாக இருந்ததை சனந்தா உணர்ந்தாள். என்ன என்று விக்ரமிடம் சைகையில் கேட்கவும் பிறகு சொல்வதாக கூறி விட்டான்.
பின் மதிய வேளையில் அனைவரும் உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்க செல்லும் போது விக்ரம் மற்றும் சரவணனுக்கு ஊட்டியில் ஆஃபீஸ்லிருந்து ஃபோன் செய்து உடனடியாக வருமாறு அழைக்கவும் அவர்கள் இருவரும் கூறிவிட்டு சென்றனர்.
அவர்கள் சென்றதிலிருந்து ஒரு மணி நேரத்திற்குள் காளி அவர்களின் ஆட்களுடன் ஊருக்குள் வந்தார். அபிலாஷ் எவ்வளவோ முயற்சி செய்தாலும் சரவணன் அல்லது விக்ரமை தொடர்பு கொள்ளவே இயலவில்லை.
காளி வந்தது தெரிவிக்க முயற்சி செய்தாலும் அதில் தோற்று தான் போனான் அபிலாஷ். “என்ன ஸ்ரீனிவாசன் ரொம்ப சிறப்பா நடத்துறீங்க போல பூஜைய???” என்று காளி கேட்கவும், ஸ்ரீனிவாசன் புன்னகையுடன், “எல்லா வருஷமும் நடக்கிற மாதிரி தான் நடத்திட்டு இருக்கோம்” என்று மட்டும் கூறினார்.
ஆனால் சனந்தாவுக்கோ காளியை பார்த்ததும் ஏனோ சற்று தலை வலிப்பது போலவே உணர்ந்து ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தாள். அபிலாஷ் அவள் அருகில் வந்து என்ன ஆச்சு?? என்று கேட்க, “தெரியல டாக்டர் ஒரு மாதிரி இருக்கு அதுவும் இவரை பார்த்ததுல இருந்து இன்னும் ஒரு மாதிரி இருக்கு” என்று சனந்தா கூறினாள்.
“ஆனா உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு தான் ஸ்ரீனிவாசன்…. உங்க பொண்ண கூட்டிட்டு போய் சாவடிச்சு அந்த பொண்ணையே உங்க ஊருக்கு வர வெச்சு வாலன்டியரா ஒரு வேலையும் கொடுத்து.. வீட்ல உட்கார வெச்சு சோறும் போடுறீங்களே” என்று சனந்தாவை காட்டி காளி பேசவும் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அபிலாஷுக்கு தான் என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். சனந்தாவோ உறைந்து நின்று கொண்டிருந்தாள். ஸ்ரீனிவாசனுக்கும் வள்ளிக்கும் என்ன பேசுவது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.
“ஓ!!! உங்களுக்கு விஷயம் தெரியாதா… நம்ம பொண்ணு அபர்ணாவ கூட்டிட்டு போனது இந்த பொண்ணு தான்…. அதிலும் இந்த பொண்ண தான் இந்த ஊருக்கு வந்து வேலை செய்யனும்னு அடம் புடிச்சு உங்க பையன் தான் கூட்டிட்டு வந்தான்”….
“எங்க அவன்??? அவனுக்கு எல்லாம் விஷயம் தெரியுமே ஆளையே காணோமே… ரொம்ப பழிவாங்குற எண்ணம் எல்லாம் செட் ஆகாது ஸ்ரீனிவாசன் உங்க பையனுக்கு சொல்லி வைங்க….. என்ன இருந்தாலும் அவளும் ஒரு பொண்ணு தான் அவள பழி வாங்கி என்ன ஆகப் போகுது உங்களுக்கு…. ஆனா எப்படியோ பழி வாங்குற எண்ணத்தோட கூட்டிட்டு வந்துட்டு அந்தப் பொண்ணு கூட ஊர்ல சுத்திட்டு இருக்கானாமே…. ரெண்டு பேரும் விரும்புறாங்களாமே” என்று காளி அனைத்து வன்மத்தையும் கக்கி விட்டார்.
அவ்வளவு நேரம் சனந்தா தலைவலியில் இருந்து காளி பேசியதில் அவள் சற்று மயக்க நிலையில் செல்லவும், அபிலாஷ் அவளை தாங்கிப் பிடித்து தட்டி தண்ணீர் கொடுத்து, “இங்க பாரு இப்ப நீ முழிச்சு ஏதாவது பேசு” என்று கூறவும் சனந்தா கண்களில் கண்ணீர் மட்டுமே நிறைந்திருந்தது.
ஸ்ரீனிவாசனும் வள்ளியும் இன்னும் அதிர்ச்சியில் நின்று கொண்டிருக்க என்ன பேசுவது என்று தெரியாமல் திரும்பி சனந்தாவை பார்க்கவோ அவளின் நிலையும் அப்படியே தான் இருந்தது.
அபிலாஷ் ஸ்ரீனிவாசனிடம் வந்து, “அப்பா நாங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க சரவணனையும் விக்ரமையும் என்னால தொடர்பு கொள்ளவே முடியல…. சனந்தா மேல எந்த தப்பும் இல்லப்பா” என்று அபிலாஷ் பேசிக் கொண்டிருக்க,
ஸ்ரீனிவாசன் அவனை நிறுத்தி, “அபர்ணா போன கார ஓட்டுனது இந்த பொண்ணு தானா?? அபர்ணா தன்னுடைய உடல் உறுப்பை கொடுக்கணும்னு சொன்னது சனந்தாக்கு தானா??? அந்த கோவத்துல தான் விக்ரம் அவளை ஊருக்கு கூட்டிட்டு வந்தானா??? அப்ப விக்ரமுக்கு இது எல்லாம் தெரியுமா?? இது எல்லாத்துக்கும் மேல விக்ரமும் சனந்தாவும் விரும்புறாங்களா???? எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்று ஸ்ரீனிவாசன் வரிசையாக கேட்டார்.
அனைத்துக்கும் ஆமா என்று பதில் அளித்தான் அபிலாஷ். இது சனந்தாவுக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி யாரிடமும் எதையும் பேசிக் கொள்ளாமல் வீட்டிற்கு சென்று விட்டனர்.
அங்கு இருந்த மக்களோ அவர்களுக்குள்ளே அவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கவும் அது சனந்தாவிற்கு பெரும் அவமானமாகவே உணர்ந்தாள். வந்த வேலை முடிந்தது என்று காளியும் புறப்பட்டு விட்டார் அவர்களின் ஆட்களுடன்.
“என்ன இருந்தாலும் நீயாவது உண்மையை சொல்லி இருக்கலாம்ல சனா” என்ற கூட்டத்தில் ஒருவர் கூறவும், “உங்களுக்கு எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னே தெரியல சனா மேல எந்த தப்பும் இல்ல கொஞ்சம் பொறுமையா இருங்க” என்று அபிலாஷ் பேசவும், அவனுடைய பேச்சு யாரு காதிலும் விழுந்த மாதிரியே தெரியவில்லை.
அனைவரும் ஒவ்வொரு விதமாக பேச ஆரம்பித்து சனந்தாவை குறை கூறிக் கொண்டிருந்தார்கள். “இங்க இருந்தா இப்படி தான் பேசிட்டு இருப்பாங்க நீ வா போலாம்” என்று அபிலாஷ் சனந்தாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு செல்லவும் அவளோ, “நான் அத்தை மாமாவை பார்த்திட்டு வரேன்” என்று சனந்தா கூறவும், “உனக்கு புரியல சனா கொஞ்சம் பொறுமையா இரு அவங்க கிட்ட அப்புறம் கூட பேசிக்கலாம்” என்று அபிலாஷ் கூறினான்.
அவளை ஒரு வழியாக சமாதானம் செய்த அவளது அறைக்குள் விட்டு விட்டு ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளியை காண சென்றான் அபிலாஷ். ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளி இருவரும் அமைதியாக ஹாலில் அமர்ந்திருந்தனர்.
அபிலாஷ் வந்து, “அப்பா அம்மா கொஞ்சம் பொறுமையா கேளுங்க இப்ப நடந்தது எல்லாமே ஒரு பகுதி தான் இதோட உண்மையான காரணங்கள் எல்லாம் என்னன்னு நமக்கு தெரியாது அது எல்லாம் போக சனாவுக்கு இப்படி ஒரு ஆக்சிடென்ட் நடந்ததுன்னே தெரியாது அவ தனியா போனப்ப ஏதோ ஆக்சிடென்ட் ஆச்சுன்னு தான் நினைச்சுகிட்டு இருக்கா இவ்வளவு நாளா” என்று அபிலாஷ் கூறினான். இருவரும் பதில் பேசாமல் அமைதியாகவே இருந்தனர்.
சனந்தாவுக்கோ மனம் பொறுக்காமல் வீட்டுக்குள் வந்து வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் அருகில் கீழே அமர்ந்து கொண்டு, “அத்தை நான் சொல்றது கொஞ்சம் கேளுங்க” என்று கூறவும் வள்ளியோ முகத்தையும் காட்டாமல் திருப்பிக் கொண்டார். ஸ்ரீனிவாசனும் கண்களை மூடி தலை சாய்த்து கொண்டார்.
அவள் எவ்வளவு பேச முயற்சித்தாலும் இருவரும் பிடி கொடுக்கவே இல்லை. அவள் அழுதும் பார்த்து விட்டாள் இருப்பினும் அவர்கள் அப்படியே இருக்கவும் அபிலாஷ் தான் அவளை சமாதானம் செய்து அவளது அறையில் விட்டு வந்தான்.
அன்று இரவு முழுவதும் முழித்துக் கொண்டே கழித்து விட்டனர் அனைவரும். ஆனால் விக்ரம் மற்றும் சரவணனிடமிருந்து எந்த தகவலும் இல்லாமலே இருந்தது.
சனந்தா காலையில் எழுந்து அவளுடைய உடைமைகள் அனைத்தையும் பேக் செய்து விட்டு சந்திரசேகருக்கு ஃபோன் செய்து வண்டி அனுப்புமாறு கூறிவிட்டு வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசனை அவர்களின் வீட்டு வாசலில் நின்று, அத்த… ஆன்ட்டி அங்கிள் என்று அழைக்கவும் இருவரும் வெளியே வந்தனர்.
“இது ரூமோட சாவி நான் கிளம்புறேன்” என்று சனந்தா கூறவும் இருவரும் அமைதியாகவே நின்று கொண்டிருந்தனர்.
காலையில் அபிலாஷுக்கு ஃபோன் செய்து விட்டதால் அவனும் வந்து விடவும், “சனா விக்ரம் வந்திடட்டும் அதுக்கப்புறம் பேசிட்டு போ சனா” என்று அபிலாஷ் கூறவும், “உண்மை என்னன்னு தெரியாதப்ப யார் வந்து பேசினா என்ன டாக்டர்… பரவால்ல” என்று சனந்தா கூறி விட்டு, பின் ஸ்ரீனிவாசன் மற்றும் வள்ளியை நோக்கி, “ரொம்ப தேங்க்ஸ் அத்த…. ஆன்ட்டி அங்கிள் ரெண்டு பேருக்கும்…. என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டிங்க… ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டு போனும்னு ஆசைப்படுகிறேன்…. உண்மை என்னன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் கண்டிப்பா நான் உங்களை வந்து பார்த்துட்டு சொல்லிட்டு போவேன்” என்று கூறிவிட்டு புறப்பட்டாள் சனந்தா.
சந்திரசேகர் வண்டி அனுப்பி இருக்கவும் வீட்டிற்கு சென்று விட்டு நடந்த அனைத்தையும் கூறவும் சந்திரசேகரும், “ஆமாம் எனக்கு இது தெரியும்” என்று ஒத்துக் கொள்ளவும் அவரிடமும் பேச மனமின்றி பல நாள் பேசாமலே இருந்து விட்டாள் சனந்தா.
இது லக்ஷ்மிக்கு அதிர்ச்சியாக இருக்கவும் லக்ஷ்மி சனந்தாவிடம் பொறுமையாக பேசவும் அவள் விக்ரமை விரும்புவதும் அவளுக்கு தெரிந்த கலவரங்கள் அனைத்தையும் மெதுவாக கூறினாள்.
சந்திரசேகரிடம் அதைப் பற்றி பேசவும், “எனக்கு ரெண்டு பேரும் விரும்புறது பிரச்சனை இல்லம்மா… ஆனா இருக்கிற பிரச்சினை எல்லாம் சரி பண்ணிட்டாலே போதும்…. அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் கூட பண்ணி வெச்சுருவேன் நானே… ஏன்னா சனா அவ்வளவு சந்தோஷமா இருந்தா அவங்க கூட” என்று சந்திரசேகர் கூறினார்.
“ம்ம்.. சரி அப்ப கொஞ்ச நாள் ஆறட்டும் அதுக்கு அப்புறமா வள்ளி கிட்ட நான் பேசுறேன்” என்று லக்ஷ்மி கூறினார். அவர் கூறியதை போலவே ஒரு வாரத்திற்கு பிறகு வள்ளியை அழைத்து பேசவும். “அந்த சூழ்நிலையில எங்களால சனா கிட்ட பேசவே முடியல எங்கள மன்னிச்சிடுங்க… விக்ரம் வந்து சில விஷயங்களை சொன்னதும் சனாவ கஷ்டப்படுத்திட்டோமோன்னு எனக்கு வருத்தமா இருக்கு” என்று வள்ளி கூறினார்.
“உங்க நிலைமை எனக்கு புரியாம இல்ல.. எனக்கும் பொண்ணு இருக்கா… அந்த பொண்ணுக்கு இப்படி நடந்து இருந்ததுன்னு நான் கேள்விப்பட்டனாலும் என் கோபம் தானா உங்க பொண்ணு மேல தானே வரும் அதனால புரிஞ்சுக்க முடியுது… நான் இல்லைன்னு சொல்லல… ஆனா, உண்மை என்னன்னு தெரியல… சனா ரொம்ப சந்தோஷமா இருந்த நாட்கள் தான் கிராமத்தில இருந்த நாட்கள்… அதிலும் விக்ரமை விரும்புறான்னு அவ வாயாலேயே தெரிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு சந்தோஷம் தான்…. அதனால கொஞ்சம் டைம் மட்டும் குடுங்க… சனா கண்டிப்பா சரியாயிருவா” என்று லக்ஷ்மி கூறினார்.
“என்ன லக்ஷ்மி இப்படி பேசுறீங்க நானே சனாவை காயப்படுத்திட்டேனு ரொம்ப வருத்தத்தில இருக்கேன்…. ரெண்டு நாளா பித்து புடிச்ச மாதிரி இருந்துது…. அதுக்கு அப்புறம் சனாவை காணோம்னு தேட ஆரம்பிச்சிட்டேன்…. அந்த அளவுக்கு அவ என் கூடவே ஒட்டிட்டா…. ஆனா என்னால எப்படி அவகிட்ட பேசறதுன்னு தெரியல” என்று வள்ளி வருத்தத்துடன் கூறினார்.
“அதெல்லாம் சரி ஆகும் நீங்க கொஞ்சம் டைம் மட்டும் குடுங்க அவளுக்கு எல்லாம் ஞாபகம் வந்துவிடும்… வந்ததுக்கு அப்புறம் நம்ம பேசிக்கலாம்” என்று லக்ஷ்மியும் ஆறுதல் கூறி ஃபோனை வைத்தார்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 114
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 114
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.