அனைவரும் பூஜைக்காக வண்ணம் கிராமத்திற்கு வந்தடைந்தனர். விகாஷ் எவ்வளவு தைரியம் கூறினாலும் சனந்தாவின் படபடப்பு மட்டும் குறையவே இல்லை. சனந்தா பெரும் தயக்கத்துடன் விகாஷுடன் நடந்து கோவிலை நோக்கி சென்றாள்.
விக்ரம் அப்பொழுது தான் குளித்து தயாராகி வரவும் அனைவரையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு சனந்தா இல்லை என்ற ஏமாற்றம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதை கண்ட லக்ஷ்மி, “அவ விகாஷ் கூட கோயிலுக்கு போய் இருக்கா” என்று கூறவும் விக்ரம் கண் இமைக்கும் நொடியில் பறந்து விட்டான்.
“சனாவுக்கு இவ்வளவு தயக்கம் இவ்ளோ கஷ்டம் கூட இல்லாம எப்படிமா இருக்கும்…. அதுவும் எல்லார் முன்னாடியும் ஏற்பட்டது அவளுக்கு அவமானம் தானே…. அப்ப அந்த சூழ்நிலையில அவளுக்கே உண்மை என்னன்னு தெரியாம அவ என்ன பேசுறதுன்னு தெரியாம ரொம்ப தவிச்சு போயிட்டா… அப்போ அந்த தவிப்பு எங்களுக்கு புரியவே இல்ல” என்று ஸ்ரீனிவாசன் வருத்தத்துடன் கூறினான்.
“அதெல்லாம் போன வருஷம் நடந்துது இப்ப அத பத்தி எல்லாம் நீங்க யோசிக்காதீங்க….. எல்லாம் நல்லதே தான் நடக்கும் நினைச்சுக்கோங்க” என்று சந்திரசேகர் கூறினார். “அப்படித் தான் அண்ணா நாங்களும் இந்த வருஷம் பூஜைய ரொம்ப நம்பியிருக்கோம்… சனா கண்டிப்பா வருவான்னு எனக்கு தோணுச்சு… அதே மாதிரி வந்துட்டா எனக்கு அதுவே பெரிய சந்தோஷம் தான்” என்று வள்ளி கூறினார்.
“ஆனா அவ எல்லா நாளும் இங்க இருப்பாளான்னு தெரியல அவளுக்கு வேலை இருக்குன்னு சொன்னா” என்று லக்ஷ்மி தயக்கத்துடன் கூறவும், “அவ முதல்ல இங்க வந்ததே எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருசு தான் லக்ஷ்மி… அதனால அவ இங்க தங்குறாளா இல்லாயான்னு எல்லாம் எதுவும் தேவையில்லை அவ வந்து எங்களை எல்லாரையும் பார்த்தது இந்த ஊரை பார்த்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று மனதார கூறினார் வள்ளி.
சனந்தா தயக்கத்துடன் கோயிலை நெருங்காவும் அவள் மனதெல்லாம் படபடத்தது. முதலில் அவளை கண்டு கொண்டது குழந்தைகள் தான்.
குழந்தைகள் அனைவரும் அவளை சுற்றி நின்று அணைத்து கொண்டனர். விகாஷ் மெதுவாக அவளின் கையை விடுவிக்க சனந்தா குழந்தைகளை அணைத்துக் கொண்டாள் கண்கள் கலங்கி. ஊரில் இருந்த அனைவரும் ஒவ்வொருவராக வந்த சனந்தாவிடம் நலம் விசாரித்தும் மன்னிப்பும் கேட்டும் சென்றனர்.
பாட்டி வந்து சனந்தாவின் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டு, “சீக்கிரம் வந்துடுடா நடந்ததெல்லாம் மறந்துரும் இங்க வந்துட்டா” என்று கூறவும், சனந்தா இன்னும் கண்களில் கண்ணீருடன் தலையை மட்டும் அசைத்தாள்.
ரம்யா வந்து சனந்தாவை இறுக்கமாக அணைத்து கொண்டு, “ரொம்ப சாரி சனா” என்று கூறவும், “நீ எதுக்கு ரம்யா சாரி கேக்குற” என்று சனந்தா கேட்கவும், “இல்லை என்னால அப்போ உங்களுக்காக பேசக் கூட முடியாத நிலைமையில இருந்துட்டேன் அதனால தான்” என்று ரம்யா கூறவும்,
“அதெல்லாம் ஒன்னும் பரவாயில்லை இப்போ எங்க படிக்கிற எப்படி இருக்க??” என்று சனந்தா நலம் விசாரிக்க, “நல்லா இருக்கேன் கோயம்புத்தூர்ல தான் படிச்சிட்டு இருக்கேன்…. உங்களை எப்படி வந்து பார்க்கணும்னு கூட எனக்கு தெரியல கஷ்டமா இருந்துது அதனால தான் வரல அதுக்கும் சாரி” என்று ரம்யா கூறவும், “அதெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு உன்னோட காலேஜ் அட்ரஸ் அனுப்பு நானே வந்து உன்னை பார்க்குறேன்” என்று சனந்தா கூறினாள்.
பின் கார்த்திக்கும் வந்து சனந்தாவை பார்த்து சனந்தாவின் கையை பிடித்துக் கொண்டு, “ரொம்ப சாரி சனா என்னாலையும் பேச முடியாம போனதுக்கு” என்று கூறவும், “அதெல்லாம் ஒன்னும் பரவாயில்லை எப்படி இருக்கீங்க காலேஜ் எல்லாம் எப்படி போகுது??” என்று சனந்தா புன்னகையுடன் கேட்க, “நான் ரொம்ப நல்லா இருக்கேன் காலேஜ் ரொம்ப நல்லா போகுது… அதுவும் நீங்க சொல்லிக் கொடுத்துது எல்லாமே எனக்கு எவ்ளோ யூஸ் ஆச்சு தெரியுமா… உங்க மிஸ் பண்ணாத டைமே இல்ல சனா” என்று கார்த்திக் கூறவும் சனந்தா புன்னகையுடன் தலையை அசைத்தாள்.
பின் சனந்தா கோவிலுக்கு அருகிலிருந்த பள்ளிக் கூடத்திற்கு சென்று அங்கே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
இவை அனைத்தும் விக்ரம் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான். “இப்ப தான் அவ முகத்துல சிரிப்பே வருது… அப்போ அவளுக்கு இங்க இருக்கிற மக்கள் எல்லாரும் அவ்வளவு முக்கியம் தான்… இல்லனா இவ்ளோ தயக்கத்தோட வந்திருக்க மாட்டா…. “என் மேல தப்பே இல்ல நீங்க எல்லாம் என்னை தப்பா நினைச்சுட்டீங்கன்னு” கோவப்பட்டு தான் இருப்பா… ஆனா அவ அப்படி இல்ல… அப்படின்னா அவளுக்கு இங்க இருக்கிற அத்தனை பேரையும் புடிச்சிருக்கு யாரும் தன்னை தப்பா நினைச்சிட கூடாது என்ற ஒரு எண்ணமும் அவளுக்கு இருக்கு” என்று விக்ரம் அவளை பற்றி நினைத்துக் கொண்டான்.
பின் அபிலாஷ் மற்றும் அனுவும் வந்துவிட அவர்களை பார்த்து நலம் விசாரித்து, “ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் ஊருக்கு வர தோணுது இல்ல சனா உனக்கு” என்று அபிலாஷ் கேட்க, “உங்களுக்கு தெரியாததா சொல்லுங்க” என்று சனந்தா பேசவும், “சரி அது எல்லாத்தையும் கடந்து வாரத்துக்கு தானே நாங்க இருக்கோம் நாங்க உன் கூட நிக்குறோம்” என்று அபிலாஷ் கூறவும் சனந்தா புன்னகைத்து தலையை மட்டும் அசைத்தாள்.
அனைவரும் அவளை உபசரித்த விதத்திலும் அவளை வரவேற்ற விதத்திலுமே சனந்தாவுக்கு மனது நிறைந்திருந்தது. சனந்தா திரும்பி விகாஷை பார்த்து புன்னகைக்கவும் விக்ரமும் அருகில் நின்று கொண்டிருந்தான்.
போன வருடம் எவ்வளவு கம்பீரமாகவும் சந்தோஷமாகவும் இருந்தானோ இவ்வருடம் கம்பீரத்துக்கு எந்த குறையும் இல்லை ஆனால் முகத்தில் சிரிப்பு மட்டுமே இல்லை விக்ரமுக்கு. அதை பார்த்த சனந்தா சற்று வருத்தப்பட்டாள் தான். அதே போல் விக்ரமுக்கும் சனந்தாவை பார்த்து போன வருடம் அவ்வளவு அழகாகவும் சந்தோஷமாகவும் உற்சாகத்துடனும் அனைவருடன் சேர்ந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்த பெண் இப்பொழுது கலை இழந்து காணப்பட்டது விக்ரமுக்கு வருத்தத்தை தான் அளித்தது.
சனந்தா சைகையில் விகாஷை அழைக்க என்ன?? என்று விகாஷ் கேட்கவும் “நான் கிளம்புறேன் நீங்க பார்த்துட்டு வாங்க” என்று சனந்தா கூறவும் விக்ரமுக்கு தூக்கி வாரி போட்டது. “என்ன சொல்ற பூனைக்குட்டி கிளம்புறியா??” என்று விகாஷ் பேசுவதற்குள் விக்ரம் பேசி விட, சனந்தா என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
விக்ரம் சனந்தாவுடன் பேசவும் அவள் அமைதியாக இருந்ததையும் பார்த்து விகாஷ் அவர்கள் இருவருக்கும் தனிமையை கொடுக்கும் விதமாக மெதுவாக நகர்ந்து விட்டான்.
“பூனைக்குட்டி உன்கிட்ட தான் டி கேட்கிறேன்…. கிளம்புறியா இப்ப தானே வந்த என் கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்ல இவ்வளவு நாள் கழிச்சு ஊருக்கு வந்து இருக்க… இப்ப டக்குனு கிளம்புறேன்னு சொல்றியே” என்று விக்ரம் அவனுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தான். சுமார் ஒரு வருடம் கழித்து சனந்தா அவனிடம் பேச தொடங்கினாள்.
“இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ரீசர்ச் சென்டர் வரைக்கும் போகணும்” என்று சனந்தா கூறினாள். விக்ரமுக்கு ஒரு வருடம் கழித்து அவளுடைய குரலை அவனிடம் பேசுவதை கேட்டதற்கு சந்தோஷ பட வேண்டுமா… இல்லை அவனிடம் பேசியதை நினைத்து சந்தோஷப்பட வேண்டுமா அல்லது அவள் கிளம்ப வேண்டும் என்று கூறுவதை நினைத்து வருத்தப்பட வேண்டுமா என்று தெரியாத நிலையில் இருந்தான்.
பின் சரவணன் வந்துவிட, “சரி நீ அவளை பைக்ல கூட்டிட்டு போய் கூட்டிட்டு வா அவ்வளவு தானே” என்று சரவணன் கூறவும், “அவ கண்டிப்பாக வர மாட்டா டா… எப்படி அவளை கூப்பிடுறது” என்று தயக்கத்தில் இருந்தான் விக்ரம்.
“நீ இப்படியே இருக்காத டா… கேட்டா தானே தெரியும்.. அட்லீஸ்ட் உனக்கு அந்த ஆசை இருக்குன்னு ஆச்சும் அவளுக்கு தெரிய படுத்தனும்ல…. இரு நானே அவ கிட்ட பேசுறேன்” என்று சரவணன் சனந்தாவை பார்த்து நலம் விசாரித்து பின், “நான் வேணா உன்னை கூட்டிட்டு போவா??” என்று சரவணன் கேட்க, “இல்ல இல்ல சரவணன் முரளி சாரும் பூஜைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு அதனால அவர் வந்த உடனே அவர் கூட கிளம்புறேன்” என்று சனந்தா கூறினாள்.
அப்புறம் எப்படி வருவ?? என்று சரவணன் கேட்க, “இல்ல கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு… அத முடிச்சிட்டு அப்படியே ஹோட்டலுக்கு போயிடுவேன் எனக்கு எப்படியும் ஒரு ரெண்டு மூணு நாள் வேலை இருக்கும்” என்று சனந்தா கூறினாள். “அப்போ இங்க வரமாட்டியா சனா” என்று சரவணன் கேட்க, “என்னோட வேலை சீக்கிரமாக முடிஞ்சிடுச்சுன்னா நான் வரேன்” என்று மட்டும் கூறினாள் சனந்தா.
அவளுடைய இந்த மாற்றமே பெரிதாக தென்பட்டதால் அவளை வேறு எதுவும் வற்புறுத்தவில்லை அனைவரும். அவள் சென்று மூன்று நாட்களும் அவளுடைய ரீசர்ச் வேலையை செய்து முடித்தாள். விக்ரமுக்கு அவளுடைய நினைப்பில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவளை சென்று பார்க்கும் தூரத்தில் தான் இருந்தாள் இருப்பினும் அவளை காண முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருந்தான் விக்ரம்.
கௌதம் விடுப்பு எடுக்க முடியாத காரணத்தினால் ஒரே ஒரு நாள் வந்து பூஜையில் கலந்து கொண்டு கவிதா உடன் நேரத்தை செலவழித்து விட்டு சென்றான். சரவணனுக்கும் விகாஷுக்கும் இப்பொழுது தான் ஒன்றாக நேரத்தை செலவிட முடிந்தது. இருவரின் பெற்றோருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வந்தாலும் அதை கண்டுக் கொள்ளவில்லை, அவர்களே வந்து சொல்லட்டும் என்று நினைத்து விட்டனர்.
“சனா எப்படி நீ வரியா வண்டி ஏதும் அனுப்பவா??” என்று லக்ஷ்மி ஃபோனில் கேட்க, “நீங்க வேணா அப்படியே வாங்களேன் ஊருக்கு கிளம்பிடலாம்” என்று சனந்தா தயக்கத்துடன் கூறவும், “என்ன சனா இப்படி சொல்ற ஊருக்கு வந்து எல்லாரையும் பார்த்துட்டு கிளம்புறேன்னு சொல்லிட்டு போக வேண்டாமா??” என்று லக்ஷ்மி கூறவும், “சரி நான் வரேன் விகாஷை வேணா வண்டி கொண்டு வர சொல்லுங்க” என்று சனந்தா கூறவும், “சரி ஓகே நான் அனுப்புறேன் நீ வா” என்று கூறினார் லக்ஷ்மி.
சிறிது நேரத்தில் சனந்தா சொன்ன இடத்தில் வண்டி வந்து நிற்கவும் அதை பார்த்து அவள் அதிர்ச்சிக்குள்ளானாள். ஏனென்றால் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தது விக்ரம். அவளது அதிர்ச்சியை முகத்தில் பெரிதாக காட்டாமல் அமைதியாக வண்டியில் ஏறிக் கொண்டாள்.
சனந்தாவிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று விக்ரம் முடிவு எடுத்து தான் அவளை அழைத்து செல்ல வந்திருக்கிறான். இம்முறை விக்ரம் பேசுவதை கேட்க தயாராகவே தான் இருந்தாள் சனந்தா. அதற்கு காரணம் ஊருக்கு சென்று அனைவரையும் பார்த்து அவள் மனதில் உள்ள பாரத்தை ஓரளவுக்கு இறக்கி வைத்திருந்தது தான். விக்ரமிடம் பேசி மீதி உள்ள பாரத்தையும் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணம் இந்த மூன்று நாட்களுக்குள் அவளுக்கு வந்தது தான்.
விக்ரம் பேச ஆரம்பிக்கவும் சனந்தாவின் கைபேசி ஒலிக்கவும் இம்முறை விக்ரமை விட சனந்தாவிற்கு தான் ஏமாற்றமாக இருந்தது. சனந்தா வேறு வழியின்றி அவளது கைபேசியை எடுத்து பார்க்க சூர்யா என்றிருந்தது. அவள் சட்டென்று விக்ரமை ஒரு முறை பார்த்து விட்டு தான் அவள் ஃபோனை அட்டென்ட் செய்தாள்.
இவை அனைத்தும் விக்ரம் நோட் செய்து கொண்டு தான் இருந்தான். “அப்போ இவளுக்கு எல்லாம் தெரியுது…. ஓகே நம்ம பேசுவோம் அவ ஃபோன் பேசி முடிக்கட்டும்” என்று விக்ரம் மனதில் நினைத்துக் கொண்டான்.
ஹலோ சொல்லுங்க சூர்யா என்று சனந்தா பேச ஆரம்பித்தாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
விக்ரம் அப்பொழுது தான் குளித்து தயாராகி வரவும் அனைவரையும் பார்த்து நலம் விசாரித்துவிட்டு சனந்தா இல்லை என்ற ஏமாற்றம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதை கண்ட லக்ஷ்மி, “அவ விகாஷ் கூட கோயிலுக்கு போய் இருக்கா” என்று கூறவும் விக்ரம் கண் இமைக்கும் நொடியில் பறந்து விட்டான்.
“சனாவுக்கு இவ்வளவு தயக்கம் இவ்ளோ கஷ்டம் கூட இல்லாம எப்படிமா இருக்கும்…. அதுவும் எல்லார் முன்னாடியும் ஏற்பட்டது அவளுக்கு அவமானம் தானே…. அப்ப அந்த சூழ்நிலையில அவளுக்கே உண்மை என்னன்னு தெரியாம அவ என்ன பேசுறதுன்னு தெரியாம ரொம்ப தவிச்சு போயிட்டா… அப்போ அந்த தவிப்பு எங்களுக்கு புரியவே இல்ல” என்று ஸ்ரீனிவாசன் வருத்தத்துடன் கூறினான்.
“அதெல்லாம் போன வருஷம் நடந்துது இப்ப அத பத்தி எல்லாம் நீங்க யோசிக்காதீங்க….. எல்லாம் நல்லதே தான் நடக்கும் நினைச்சுக்கோங்க” என்று சந்திரசேகர் கூறினார். “அப்படித் தான் அண்ணா நாங்களும் இந்த வருஷம் பூஜைய ரொம்ப நம்பியிருக்கோம்… சனா கண்டிப்பா வருவான்னு எனக்கு தோணுச்சு… அதே மாதிரி வந்துட்டா எனக்கு அதுவே பெரிய சந்தோஷம் தான்” என்று வள்ளி கூறினார்.
“ஆனா அவ எல்லா நாளும் இங்க இருப்பாளான்னு தெரியல அவளுக்கு வேலை இருக்குன்னு சொன்னா” என்று லக்ஷ்மி தயக்கத்துடன் கூறவும், “அவ முதல்ல இங்க வந்ததே எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருசு தான் லக்ஷ்மி… அதனால அவ இங்க தங்குறாளா இல்லாயான்னு எல்லாம் எதுவும் தேவையில்லை அவ வந்து எங்களை எல்லாரையும் பார்த்தது இந்த ஊரை பார்த்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று மனதார கூறினார் வள்ளி.
சனந்தா தயக்கத்துடன் கோயிலை நெருங்காவும் அவள் மனதெல்லாம் படபடத்தது. முதலில் அவளை கண்டு கொண்டது குழந்தைகள் தான்.
குழந்தைகள் அனைவரும் அவளை சுற்றி நின்று அணைத்து கொண்டனர். விகாஷ் மெதுவாக அவளின் கையை விடுவிக்க சனந்தா குழந்தைகளை அணைத்துக் கொண்டாள் கண்கள் கலங்கி. ஊரில் இருந்த அனைவரும் ஒவ்வொருவராக வந்த சனந்தாவிடம் நலம் விசாரித்தும் மன்னிப்பும் கேட்டும் சென்றனர்.
பாட்டி வந்து சனந்தாவின் தலையை கோதி நெற்றியில் முத்தமிட்டு, “சீக்கிரம் வந்துடுடா நடந்ததெல்லாம் மறந்துரும் இங்க வந்துட்டா” என்று கூறவும், சனந்தா இன்னும் கண்களில் கண்ணீருடன் தலையை மட்டும் அசைத்தாள்.
ரம்யா வந்து சனந்தாவை இறுக்கமாக அணைத்து கொண்டு, “ரொம்ப சாரி சனா” என்று கூறவும், “நீ எதுக்கு ரம்யா சாரி கேக்குற” என்று சனந்தா கேட்கவும், “இல்லை என்னால அப்போ உங்களுக்காக பேசக் கூட முடியாத நிலைமையில இருந்துட்டேன் அதனால தான்” என்று ரம்யா கூறவும்,
“அதெல்லாம் ஒன்னும் பரவாயில்லை இப்போ எங்க படிக்கிற எப்படி இருக்க??” என்று சனந்தா நலம் விசாரிக்க, “நல்லா இருக்கேன் கோயம்புத்தூர்ல தான் படிச்சிட்டு இருக்கேன்…. உங்களை எப்படி வந்து பார்க்கணும்னு கூட எனக்கு தெரியல கஷ்டமா இருந்துது அதனால தான் வரல அதுக்கும் சாரி” என்று ரம்யா கூறவும், “அதெல்லாம் ஒன்னும் இல்ல எனக்கு உன்னோட காலேஜ் அட்ரஸ் அனுப்பு நானே வந்து உன்னை பார்க்குறேன்” என்று சனந்தா கூறினாள்.
பின் கார்த்திக்கும் வந்து சனந்தாவை பார்த்து சனந்தாவின் கையை பிடித்துக் கொண்டு, “ரொம்ப சாரி சனா என்னாலையும் பேச முடியாம போனதுக்கு” என்று கூறவும், “அதெல்லாம் ஒன்னும் பரவாயில்லை எப்படி இருக்கீங்க காலேஜ் எல்லாம் எப்படி போகுது??” என்று சனந்தா புன்னகையுடன் கேட்க, “நான் ரொம்ப நல்லா இருக்கேன் காலேஜ் ரொம்ப நல்லா போகுது… அதுவும் நீங்க சொல்லிக் கொடுத்துது எல்லாமே எனக்கு எவ்ளோ யூஸ் ஆச்சு தெரியுமா… உங்க மிஸ் பண்ணாத டைமே இல்ல சனா” என்று கார்த்திக் கூறவும் சனந்தா புன்னகையுடன் தலையை அசைத்தாள்.
பின் சனந்தா கோவிலுக்கு அருகிலிருந்த பள்ளிக் கூடத்திற்கு சென்று அங்கே சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தாள்.
இவை அனைத்தும் விக்ரம் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தான். “இப்ப தான் அவ முகத்துல சிரிப்பே வருது… அப்போ அவளுக்கு இங்க இருக்கிற மக்கள் எல்லாரும் அவ்வளவு முக்கியம் தான்… இல்லனா இவ்ளோ தயக்கத்தோட வந்திருக்க மாட்டா…. “என் மேல தப்பே இல்ல நீங்க எல்லாம் என்னை தப்பா நினைச்சுட்டீங்கன்னு” கோவப்பட்டு தான் இருப்பா… ஆனா அவ அப்படி இல்ல… அப்படின்னா அவளுக்கு இங்க இருக்கிற அத்தனை பேரையும் புடிச்சிருக்கு யாரும் தன்னை தப்பா நினைச்சிட கூடாது என்ற ஒரு எண்ணமும் அவளுக்கு இருக்கு” என்று விக்ரம் அவளை பற்றி நினைத்துக் கொண்டான்.
பின் அபிலாஷ் மற்றும் அனுவும் வந்துவிட அவர்களை பார்த்து நலம் விசாரித்து, “ஒரு வருஷம் கழிச்சு இப்ப தான் ஊருக்கு வர தோணுது இல்ல சனா உனக்கு” என்று அபிலாஷ் கேட்க, “உங்களுக்கு தெரியாததா சொல்லுங்க” என்று சனந்தா பேசவும், “சரி அது எல்லாத்தையும் கடந்து வாரத்துக்கு தானே நாங்க இருக்கோம் நாங்க உன் கூட நிக்குறோம்” என்று அபிலாஷ் கூறவும் சனந்தா புன்னகைத்து தலையை மட்டும் அசைத்தாள்.
அனைவரும் அவளை உபசரித்த விதத்திலும் அவளை வரவேற்ற விதத்திலுமே சனந்தாவுக்கு மனது நிறைந்திருந்தது. சனந்தா திரும்பி விகாஷை பார்த்து புன்னகைக்கவும் விக்ரமும் அருகில் நின்று கொண்டிருந்தான்.
போன வருடம் எவ்வளவு கம்பீரமாகவும் சந்தோஷமாகவும் இருந்தானோ இவ்வருடம் கம்பீரத்துக்கு எந்த குறையும் இல்லை ஆனால் முகத்தில் சிரிப்பு மட்டுமே இல்லை விக்ரமுக்கு. அதை பார்த்த சனந்தா சற்று வருத்தப்பட்டாள் தான். அதே போல் விக்ரமுக்கும் சனந்தாவை பார்த்து போன வருடம் அவ்வளவு அழகாகவும் சந்தோஷமாகவும் உற்சாகத்துடனும் அனைவருடன் சேர்ந்து அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு செய்த பெண் இப்பொழுது கலை இழந்து காணப்பட்டது விக்ரமுக்கு வருத்தத்தை தான் அளித்தது.
சனந்தா சைகையில் விகாஷை அழைக்க என்ன?? என்று விகாஷ் கேட்கவும் “நான் கிளம்புறேன் நீங்க பார்த்துட்டு வாங்க” என்று சனந்தா கூறவும் விக்ரமுக்கு தூக்கி வாரி போட்டது. “என்ன சொல்ற பூனைக்குட்டி கிளம்புறியா??” என்று விகாஷ் பேசுவதற்குள் விக்ரம் பேசி விட, சனந்தா என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.
விக்ரம் சனந்தாவுடன் பேசவும் அவள் அமைதியாக இருந்ததையும் பார்த்து விகாஷ் அவர்கள் இருவருக்கும் தனிமையை கொடுக்கும் விதமாக மெதுவாக நகர்ந்து விட்டான்.
“பூனைக்குட்டி உன்கிட்ட தான் டி கேட்கிறேன்…. கிளம்புறியா இப்ப தானே வந்த என் கூட கொஞ்ச நேரம் இருக்கலாம்ல இவ்வளவு நாள் கழிச்சு ஊருக்கு வந்து இருக்க… இப்ப டக்குனு கிளம்புறேன்னு சொல்றியே” என்று விக்ரம் அவனுடைய ஆதங்கத்தை கொட்டி தீர்த்தான். சுமார் ஒரு வருடம் கழித்து சனந்தா அவனிடம் பேச தொடங்கினாள்.
“இல்ல எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ரீசர்ச் சென்டர் வரைக்கும் போகணும்” என்று சனந்தா கூறினாள். விக்ரமுக்கு ஒரு வருடம் கழித்து அவளுடைய குரலை அவனிடம் பேசுவதை கேட்டதற்கு சந்தோஷ பட வேண்டுமா… இல்லை அவனிடம் பேசியதை நினைத்து சந்தோஷப்பட வேண்டுமா அல்லது அவள் கிளம்ப வேண்டும் என்று கூறுவதை நினைத்து வருத்தப்பட வேண்டுமா என்று தெரியாத நிலையில் இருந்தான்.
பின் சரவணன் வந்துவிட, “சரி நீ அவளை பைக்ல கூட்டிட்டு போய் கூட்டிட்டு வா அவ்வளவு தானே” என்று சரவணன் கூறவும், “அவ கண்டிப்பாக வர மாட்டா டா… எப்படி அவளை கூப்பிடுறது” என்று தயக்கத்தில் இருந்தான் விக்ரம்.
“நீ இப்படியே இருக்காத டா… கேட்டா தானே தெரியும்.. அட்லீஸ்ட் உனக்கு அந்த ஆசை இருக்குன்னு ஆச்சும் அவளுக்கு தெரிய படுத்தனும்ல…. இரு நானே அவ கிட்ட பேசுறேன்” என்று சரவணன் சனந்தாவை பார்த்து நலம் விசாரித்து பின், “நான் வேணா உன்னை கூட்டிட்டு போவா??” என்று சரவணன் கேட்க, “இல்ல இல்ல சரவணன் முரளி சாரும் பூஜைக்கு வரேன்னு சொல்லி இருக்காரு அதனால அவர் வந்த உடனே அவர் கூட கிளம்புறேன்” என்று சனந்தா கூறினாள்.
அப்புறம் எப்படி வருவ?? என்று சரவணன் கேட்க, “இல்ல கொஞ்சம் வேலை டைட்டா இருக்கு… அத முடிச்சிட்டு அப்படியே ஹோட்டலுக்கு போயிடுவேன் எனக்கு எப்படியும் ஒரு ரெண்டு மூணு நாள் வேலை இருக்கும்” என்று சனந்தா கூறினாள். “அப்போ இங்க வரமாட்டியா சனா” என்று சரவணன் கேட்க, “என்னோட வேலை சீக்கிரமாக முடிஞ்சிடுச்சுன்னா நான் வரேன்” என்று மட்டும் கூறினாள் சனந்தா.
அவளுடைய இந்த மாற்றமே பெரிதாக தென்பட்டதால் அவளை வேறு எதுவும் வற்புறுத்தவில்லை அனைவரும். அவள் சென்று மூன்று நாட்களும் அவளுடைய ரீசர்ச் வேலையை செய்து முடித்தாள். விக்ரமுக்கு அவளுடைய நினைப்பில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அவளை சென்று பார்க்கும் தூரத்தில் தான் இருந்தாள் இருப்பினும் அவளை காண முடியாமல் தவித்துக் கொண்டு தான் இருந்தான் விக்ரம்.
கௌதம் விடுப்பு எடுக்க முடியாத காரணத்தினால் ஒரே ஒரு நாள் வந்து பூஜையில் கலந்து கொண்டு கவிதா உடன் நேரத்தை செலவழித்து விட்டு சென்றான். சரவணனுக்கும் விகாஷுக்கும் இப்பொழுது தான் ஒன்றாக நேரத்தை செலவிட முடிந்தது. இருவரின் பெற்றோருக்கும் அவர்கள் மீது சந்தேகம் வந்தாலும் அதை கண்டுக் கொள்ளவில்லை, அவர்களே வந்து சொல்லட்டும் என்று நினைத்து விட்டனர்.
“சனா எப்படி நீ வரியா வண்டி ஏதும் அனுப்பவா??” என்று லக்ஷ்மி ஃபோனில் கேட்க, “நீங்க வேணா அப்படியே வாங்களேன் ஊருக்கு கிளம்பிடலாம்” என்று சனந்தா தயக்கத்துடன் கூறவும், “என்ன சனா இப்படி சொல்ற ஊருக்கு வந்து எல்லாரையும் பார்த்துட்டு கிளம்புறேன்னு சொல்லிட்டு போக வேண்டாமா??” என்று லக்ஷ்மி கூறவும், “சரி நான் வரேன் விகாஷை வேணா வண்டி கொண்டு வர சொல்லுங்க” என்று சனந்தா கூறவும், “சரி ஓகே நான் அனுப்புறேன் நீ வா” என்று கூறினார் லக்ஷ்மி.
சிறிது நேரத்தில் சனந்தா சொன்ன இடத்தில் வண்டி வந்து நிற்கவும் அதை பார்த்து அவள் அதிர்ச்சிக்குள்ளானாள். ஏனென்றால் வண்டி ஓட்டிக் கொண்டு வந்தது விக்ரம். அவளது அதிர்ச்சியை முகத்தில் பெரிதாக காட்டாமல் அமைதியாக வண்டியில் ஏறிக் கொண்டாள்.
சனந்தாவிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று விக்ரம் முடிவு எடுத்து தான் அவளை அழைத்து செல்ல வந்திருக்கிறான். இம்முறை விக்ரம் பேசுவதை கேட்க தயாராகவே தான் இருந்தாள் சனந்தா. அதற்கு காரணம் ஊருக்கு சென்று அனைவரையும் பார்த்து அவள் மனதில் உள்ள பாரத்தை ஓரளவுக்கு இறக்கி வைத்திருந்தது தான். விக்ரமிடம் பேசி மீதி உள்ள பாரத்தையும் இறக்கி விட வேண்டும் என்ற எண்ணம் இந்த மூன்று நாட்களுக்குள் அவளுக்கு வந்தது தான்.
விக்ரம் பேச ஆரம்பிக்கவும் சனந்தாவின் கைபேசி ஒலிக்கவும் இம்முறை விக்ரமை விட சனந்தாவிற்கு தான் ஏமாற்றமாக இருந்தது. சனந்தா வேறு வழியின்றி அவளது கைபேசியை எடுத்து பார்க்க சூர்யா என்றிருந்தது. அவள் சட்டென்று விக்ரமை ஒரு முறை பார்த்து விட்டு தான் அவள் ஃபோனை அட்டென்ட் செய்தாள்.
இவை அனைத்தும் விக்ரம் நோட் செய்து கொண்டு தான் இருந்தான். “அப்போ இவளுக்கு எல்லாம் தெரியுது…. ஓகே நம்ம பேசுவோம் அவ ஃபோன் பேசி முடிக்கட்டும்” என்று விக்ரம் மனதில் நினைத்துக் கொண்டான்.
ஹலோ சொல்லுங்க சூர்யா என்று சனந்தா பேச ஆரம்பித்தாள்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 110
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 110
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.