சனந்தாவுக்கு அடுத்து வந்த நாட்கள் அனைத்தும் அவளுடைய மனது பாரமில்லாமல் இருந்தது. மேலும் எப்பொழுதும் இருக்கும் ஒரு வெறுப்பும் படபடப்பும் இன்றி அமைதியாகவே காணப்பட்டது. அவளுடைய முகமும் அதைக் காட்டி கொடுக்க அனைவருக்கும் சற்று நிம்மதி அளித்தது.
மேலும் அவ்வப்போது வள்ளி ஃபோன் செய்தாலும் அவள் எடுத்து நன்றாகவே பேசினாள். திருப்பி அவளும் வள்ளிக்கு இரண்டு முறை ஃபோன் செய்து பேசினாள். வள்ளியோ அவருடைய ஆசையை ஃபோன் செய்யும் போது தெரிவித்தாலும் அதற்கு சனந்தா பெருசாக பதில் அளிக்கவில்லை வேறு எதையோ பேச்சை மாற்றி விடுவாள். மேலும் தன்னை அத்தை என்று அழைக்க வள்ளி சொன்னாலும் அதற்கும் அவள் வேற ஏதாவது பதில் கூறி சமாளிப்பாள். இப்படியே நாட்கள் ஓடின.
விக்ரமும் அவனை நன்றாக சவரம் செய்து கொண்டு அவ்வப்போது ஏதோ ஒரு காரணம் சொல்லி கோயம்புத்தூருக்கு வந்து அவளை பார்த்து விட்டு சென்றான். அவன் வந்து செல்லும் போது சனந்தாவிற்கு வேலை இருந்தாலும் கூட ஏனோ அவளது மனம் அவனை பார்க்க ஏங்கியது என்னமோ உண்மை தான். அதனால் அவளது வேலையை சற்று தாமதமாக்கியும் அவனை பார்த்து விட்டு தான் செல்வாள்.
அவளது செய்கை லக்ஷ்மிக்கு புரிந்தாலும் அதை சனந்தாவிடம் கேட்காமலே இருப்பார். ஒரு வேளை கேட்டால் வேதாளம் எங்கே மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடுமோ என்ற பயம் அவருக்கு. அதை விக்ரமிடமும் சொல்லி இருந்ததனால் விக்ரம் மனதிற்கும் நிம்மதி அளித்தது சனந்தாவின் மாற்றத்தை கண்டு.
அபிலாஷின் திருமணம் நெருங்கவும் அனைவரும் ஊரிலிருந்து வந்து சனந்தா வீட்டிலேயே தங்கி இரண்டு நாட்கள் அவனது திருமண விழாவை சிறப்பிக்க முடிவு எடுத்திருந்தனர். திருமணம் கோயம்புத்தூரில் பின் கிராமத்தில் அங்கே ஒரு சிறிய வரவேற்பும் வைக்க வேண்டும் என்று அபிலூஷும் அனுவும் முடிவு செய்திருந்தனர்.
சனந்தா வீட்டிற்கு அனைவரும் வந்திருக்கவும் சனந்தா அனைவரிடமும் இன் முகத்துடன் பேசி பின் அவளது அறைக்கு சென்று அவளுடைய வேளையில் மூழ்கி விட்டாள். அவளுடைய வீட்டிலேயே அவளுக்கு அருகில் விக்ரம் இருப்பது பெரும் சந்தோஷத்தையும் நிம்மதியும் கொடுத்தது என்னமோ உண்மை தான் சனந்தாவுக்கு. அது அவளின் முகத்திலேயே அனைவரும் கண்டனர்.
மேலும் விக்ரம் ஓரிரு வார்த்தைகளை பேசவும் சனந்தா தலையை மட்டும் அசைத்து விட்டு சென்றதே பெரும் வெற்றியாக உணர்ந்தான் விக்ரம். முதல் நாள் நிச்சயம் மறுநாள் திருமணம் மற்றும் மாலை வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் முதலில் நிச்சயத்திற்கு சென்று வந்தனர். பல மாதங்கள் கழித்து அவளை பார்த்து பார்த்து தன்னை தயார் செய்து கொண்டு அனைவருடனும் சேர்ந்து புறப்பட்டாள்.
விக்ரமுக்கு சனந்தாவை அப்படி பார்க்கவும் அவன் உலகத்தையே மறந்து அவளை ரசித்து கொண்டு இருந்தான். அவனது பார்வையை அவளைத் தீண்டுவதை அவள் உணர்ந்தாலும் அவள் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் திருமணம் விழாவில் கவனம் செலுத்தினாள். அனைவரும் விழாவை சிறப்பித்து வந்து மறுநாள் காலையில் திருமணத்திற்கு சென்று வந்த பின் விக்ரம் சனந்தாவிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று முயற்சி செய்யவும் சனந்தா வேலை இருப்பதாக கூறி வெளியே சென்று விட்டாள்.
“ப்ச்… என்னடா இது உங்க அக்கா இப்படி படுத்துறா” என்று விக்ரம் விகாஷிடம் புலம்பவும், “என்ன பண்றது அத்தான் குரங்குக்கு வாய்க்கப்பட்டா குட்டிக்கரணம் போட்டு தானே ஆகணும்… நீங்க போயும் போயும் இவள செலக்ட் பண்ணி இருக்கீங்க… அப்ப நீங்க இப்படித்தான் இருக்கணும்” என்று விகாஷ் விக்ரமின் காலை வாரி விட்டான்.
“இப்ப அப்படி என்ன வேலை அவளுக்கு இருக்கு” என்று விக்ரம் சலிப்புடன் கேட்க, “சீனியர்ஸ் கூட இன்ஸ்பெக்ஷன் போயிட்டு வந்தாங்க அதோட ரிப்போர்ட் சப்மிட் பண்ண தான் போயிருப்பா…. கொஞ்ச நேரத்துல வந்துருவா நீங்க ரொம்ப பதறாதீங்க… நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க…. நான் இப்ப கிளம்பனும் போயிட்டு வந்து எல்லாரும் ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு போலாம்” என்று விகாஷும் புறப்பட்டான்.
சரவணன் பலமுறை முயற்சித்தும் சனந்தா பட்டும் படாமலும் தான் அவனிடமும் பேசினாள். அதையாவது அவனிடம் பேசினாலே என்ற திருப்தி தான் சரவணனுக்கு இருந்ததே தவிர முன்னர் இருந்தது போல் சனந்தா பேசவில்லை என்ற வருத்தம் சரவணனுக்கும் இருக்க தான் செய்தது.
“எனக்கே எப்படி இருக்கே விக்ரம் இன்னும் இவ்வளவு கஷ்டப்படுவான்ல” என்று விக்ரமை பற்றி நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான் சரவணன். “சரி மச்சான் நம்மளும் எங்கயாவது வெளியில போலாமா இல்ல ரெஸ்ட் எடுத்துக்கலாமா… நம்ம இப்படி லீவ் போடுறதே அதிசயம் தான்??” என்று சரவணன் கேட்க, “அட போடா அவ கிட்ட பேசணும்னு நினைச்சா வீட்டிலேயே இல்லை” என்று விக்ரம் சலித்துக் கொண்டான்.
“சரி ரொம்ப வருத்தப்படாத அட்லீஸ்ட் இப்ப இதெல்லாம் நடக்குதில்லன்னு சந்தோஷப்படு…. அவசரப்படாத எப்படியும் அடுத்து அவ பூஜைக்கு ஊருக்கு வருவா அப்படியும் இல்லனாலும் கெளதம் கல்யாணமே ஊர்ல தானே கண்டிப்பா வருவா அந்த நேரத்தை பயன்படுத்திக்கலாம் நீ கவலைப்படாதே” என்று சரவணன் ஆறுதலும் கூறினான்.
மாலை நேரம் நெருங்கவும் தான் சனந்தா வீடு வந்து சேர்ந்தாள். அவளது அறைக்குள் செல்லும் முன் சனா என்று சரவணன் அழைக்கவும், என்ன என்பது போல் அவனை பார்க்க, “இல்ல சனா அது விக்ரம்….” என்று சரவணன் பேசுவதற்குள் சனந்தாவின் கைப்பேசி ஒலித்தது. “சாரி சரவணன் ஃபோன் வருது” என்று கூறி அவளது அறைக்குள் சென்று விட்டாள்.
“அது எப்படின்னே தெரியல டா உன் வாழ்க்கைல கரெக்டா விளையாடுறதுக்குன்னு அந்தந்த நேரத்துக்கு ஃபோன் வந்துருது” என்று சரவணன் கூறவும், “அது தான் எனக்கும் தெரியல மச்சான்…. சரி விடு நீ சொன்ன மாதிரி அடுத்த மாசம் வரைக்கும் வெயிட் பண்றேன்” என்று விக்ரம் சலிப்புடன் கூறினான்.
அனைவரும் தயாராகி அபிலாஷ் மற்றும் அனுவின் ரிசப்ஷன் விழாவை சிறப்பித்து வந்து மறுநாள் காலையில் அனைவரும் வண்ணம் கிராமத்திற்கு புறப்பட்டனர். என்ன தான் விக்ரமுடன் பேசவில்லை என்றாலும் அவன் அவளுடனே இருக்கிறான் என்பதே அவளுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்னமோ உண்மை தான். அவன் புறப்படும் போது அவள் முகத்தில் காணப்பட்ட லேசான சோகமுமே விக்ரமுக்கு நிம்மதியை அளித்தது தான் அவளது மாற்றத்தை கண்டு.
கிராமத்தில் விநாயகர் பூஜை நெருங்கவும் ஸ்ரீனிவாசன் வள்ளியிடம், “போன வருஷம் சனா எவ்வளவு வேலை இழுத்து போட்டு செஞ்சிருக்கா இல்ல… இந்த வருஷம் அதெல்லாம் செய்ய ஆள் இல்லாமல் தவிச்சிட்டு இருக்கேன் பாரு நானு” என்று வருத்தத்துடன் கூறினார்.
“ஆமாங்க நான் கூட ஏன் வீட்டுக்கு வரல… வேலை பார்க்குறேன்னு சொல்லி நான் அவ மேல செல்லமா தான் கோபப்பட்டு இருக்கேன்… இருந்தாலும் இப்ப தான் எனக்கும் தெரியுது, கூட எவ்வளவு ஒத்தாசையா இருந்திருக்கான்னு” என்று வள்ளி கூறினார்.
“அவ்ளோ ஏன் மா இப்ப இங்க பூஜை அப்படின்னு தெரிஞ்சதும் எவ்ளோ பொருள் வாங்கி அனுப்பி இருக்கா… அது போக அவங்க ஹோட்டல்ல இருக்கிற ஆட்களை அனுப்பி, இங்க இருக்க சொல்லி வேலைக்கு ஒத்தாசையா… அவ்வளவு ஹெல்ப் பண்ணிட்டு தான் இருக்கா…. சந்திரசேகர் சொல்ல போய் தான் தெரிஞ்சது இல்லன்னா அவங்க தான் ஏற்பாடு பண்ணாங்கனு நானும் நினைச்சு இருப்பேன்… ஆனா, இது எல்லாத்துக்கும் மூளை காரணமே சனா தான்…. பாரேன் அவ்ளோ நேசிக்கிற அவ நம்மளையும் நம்ம ஊரையும்” என்று ஸ்ரீனிவாசன் சனந்தாவை பெருமையாக கூறினார்.
“அது என்னமோ உண்மை தாங்க என்ன இருந்தாலும் அவளுக்கு இந்த ஊரு மேல தனி பாசம் இருக்குது தான்… அந்த பாசமே அவளை கண்டிப்பா இங்க கொண்டு வந்து சேர்த்துரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று வள்ளி கூறினார்.
“அம்மா நான் உங்க கிட்ட சொன்ன மாதிரி நான் காலையில வரேன் கொஞ்ச நேரம் இருக்கேன்… அதுக்கு அப்புறம் எனக்கு ரீசர்ச் சென்டர்ல வேலை இருக்கு நான் அத பார்த்துட்டு நம்ம ஹோட்டல்ல தங்கிடுவேன்… நீங்க எல்லாம் எப்ப வரீங்கன்னு சொல்லுங்க அப்போ ரெடியா வீட்டுக்கு போலாம்” என்று சனந்தா கூறவும், “இன்னும் போகவே இல்லடி அதுக்குள்ள திருப்பி வீட்டுக்கு வரத பத்தி பேசுற” என்று லக்ஷ்மி சலித்துக் கொண்டு கூறினார்.
“நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு சனா இன்னும் அதையே புடிச்சிட்டிருந்தா எப்படி… நம்ம கண்டிப்பா ரியாலிட்டி என்னவோ அதை ஃபேஸ் பண்ணி தானே ஆகணும்” என்று விகாஷ் கூறவும், “அது எனக்கும் புரியுது… ஆனா, எனக்கு அதுக்கு டைம் குடுங்கன்னு தான் நான் கேட்குறேன்” என்று சனந்தா கூறவும், “சனா சொல்றால அதைப்படி கேளுங்க அவளே சரியாயிருவா சும்மா அவள போட்டு படுத்தாதீங்க” என்று சந்திரசேகர் கூறவும் அனைவரும் அமைதியாகிவிட்டனர்.
பயணம் முழுவதும் சனந்தாவிற்கு கிராமம் எப்படி இருக்கிறது? என்ன தான் பார்த்து பார்த்து தேடி வாலன்டியர் டீச்சரை அனுப்பினாலும் கூட குழந்தைகளை பற்றி தெரிந்து கொண்டு தான் இருப்பாள். அவள் அங்கிருந்து பிரிந்து இருந்த நாட்களில் தான் தெரிந்தது கிராமம் அவளது வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது.
முடிந்த அளவுக்கு சனந்தாவோட தயக்கத்தையும் படபடப்பையும் முகத்தில் காட்டாமல் தான் இருந்தாள். பிரகாஷ் அவர்கள் வண்டியை நேராக மேலே கொண்டு நிறுத்தவும் சனந்தா பெரும் தயக்கத்துடன் இறங்கி விகாஷின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
ஏனென்றால் வண்டி நின்றது விக்ரமின் வீட்டிற்கு முன். வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் இன்முகத்துடன் அவர்களை வரவேற்கவும், சனந்தா மட்டும் தயக்கத்திலே இருந்தாள். வள்ளி அதை கவனித்து சனந்தாவின் தயக்கத்தை அறிந்து கொண்டு அவளது கையைப் பற்றிக் கொண்டு, “நம்ம வீடு சனா… ஏன் இப்படி தயங்குற” என்று கூறி அவளை கையுடன் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
அவள் தங்கி இருந்த அறையில் தான் விக்ரம் தற்போது தங்கி இருக்கிறான் என்பது சனந்தாவுக்கு விகாஷ் மூலமாக தெரிய வந்ததும் அவளுக்கு அது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
சனந்தா விகாஷிடம், “நம்ம வெளியில போலாமா” என்று கேட்க, அவளின் நிலைமையை புரிந்து கொண்டு அனைவரும் சரி என்று அமோதித்தனர். சனந்தா இன்னமும் விகாஷின் கையை விடாமல் இறுக்கமாகவே பிடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சனா… ஏன் இப்படி இருக்க… ஏன் இப்படி கை நடுங்குது” என்று விகாஷ் கேட்க, “அதுக்கு பதில் என்கிட்ட இல்லடா” என்று சனந்தா கூறினாள். “அதுக்கு பதில் எல்லாம் ஒன்னும் இல்ல…. உனக்கு இது ரொம்ப பிடிச்ச இடம் எந்த இடத்துல போய் அப்படி நடந்துருச்சு அப்படின்ற வருத்தம் உனக்கு நிறைய இருக்கு…. திருப்பி இந்த இடத்தில நீ வந்து நின்னா எப்படி இருக்கும்னு யோசனை தான் உனக்கு வேற ஒன்னும் இல்ல பயப்படாம வா” என்று விகாஷ் கூறினான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
facebook.com
மேலும் அவ்வப்போது வள்ளி ஃபோன் செய்தாலும் அவள் எடுத்து நன்றாகவே பேசினாள். திருப்பி அவளும் வள்ளிக்கு இரண்டு முறை ஃபோன் செய்து பேசினாள். வள்ளியோ அவருடைய ஆசையை ஃபோன் செய்யும் போது தெரிவித்தாலும் அதற்கு சனந்தா பெருசாக பதில் அளிக்கவில்லை வேறு எதையோ பேச்சை மாற்றி விடுவாள். மேலும் தன்னை அத்தை என்று அழைக்க வள்ளி சொன்னாலும் அதற்கும் அவள் வேற ஏதாவது பதில் கூறி சமாளிப்பாள். இப்படியே நாட்கள் ஓடின.
விக்ரமும் அவனை நன்றாக சவரம் செய்து கொண்டு அவ்வப்போது ஏதோ ஒரு காரணம் சொல்லி கோயம்புத்தூருக்கு வந்து அவளை பார்த்து விட்டு சென்றான். அவன் வந்து செல்லும் போது சனந்தாவிற்கு வேலை இருந்தாலும் கூட ஏனோ அவளது மனம் அவனை பார்க்க ஏங்கியது என்னமோ உண்மை தான். அதனால் அவளது வேலையை சற்று தாமதமாக்கியும் அவனை பார்த்து விட்டு தான் செல்வாள்.
அவளது செய்கை லக்ஷ்மிக்கு புரிந்தாலும் அதை சனந்தாவிடம் கேட்காமலே இருப்பார். ஒரு வேளை கேட்டால் வேதாளம் எங்கே மறுபடியும் முருங்கை மரம் ஏறி விடுமோ என்ற பயம் அவருக்கு. அதை விக்ரமிடமும் சொல்லி இருந்ததனால் விக்ரம் மனதிற்கும் நிம்மதி அளித்தது சனந்தாவின் மாற்றத்தை கண்டு.
அபிலாஷின் திருமணம் நெருங்கவும் அனைவரும் ஊரிலிருந்து வந்து சனந்தா வீட்டிலேயே தங்கி இரண்டு நாட்கள் அவனது திருமண விழாவை சிறப்பிக்க முடிவு எடுத்திருந்தனர். திருமணம் கோயம்புத்தூரில் பின் கிராமத்தில் அங்கே ஒரு சிறிய வரவேற்பும் வைக்க வேண்டும் என்று அபிலூஷும் அனுவும் முடிவு செய்திருந்தனர்.
சனந்தா வீட்டிற்கு அனைவரும் வந்திருக்கவும் சனந்தா அனைவரிடமும் இன் முகத்துடன் பேசி பின் அவளது அறைக்கு சென்று அவளுடைய வேளையில் மூழ்கி விட்டாள். அவளுடைய வீட்டிலேயே அவளுக்கு அருகில் விக்ரம் இருப்பது பெரும் சந்தோஷத்தையும் நிம்மதியும் கொடுத்தது என்னமோ உண்மை தான் சனந்தாவுக்கு. அது அவளின் முகத்திலேயே அனைவரும் கண்டனர்.
மேலும் விக்ரம் ஓரிரு வார்த்தைகளை பேசவும் சனந்தா தலையை மட்டும் அசைத்து விட்டு சென்றதே பெரும் வெற்றியாக உணர்ந்தான் விக்ரம். முதல் நாள் நிச்சயம் மறுநாள் திருமணம் மற்றும் மாலை வரவேற்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் முதலில் நிச்சயத்திற்கு சென்று வந்தனர். பல மாதங்கள் கழித்து அவளை பார்த்து பார்த்து தன்னை தயார் செய்து கொண்டு அனைவருடனும் சேர்ந்து புறப்பட்டாள்.
விக்ரமுக்கு சனந்தாவை அப்படி பார்க்கவும் அவன் உலகத்தையே மறந்து அவளை ரசித்து கொண்டு இருந்தான். அவனது பார்வையை அவளைத் தீண்டுவதை அவள் உணர்ந்தாலும் அவள் அதை பெரிதாக பொருட்படுத்தாமல் திருமணம் விழாவில் கவனம் செலுத்தினாள். அனைவரும் விழாவை சிறப்பித்து வந்து மறுநாள் காலையில் திருமணத்திற்கு சென்று வந்த பின் விக்ரம் சனந்தாவிடம் எப்படியாவது பேச வேண்டும் என்று முயற்சி செய்யவும் சனந்தா வேலை இருப்பதாக கூறி வெளியே சென்று விட்டாள்.
“ப்ச்… என்னடா இது உங்க அக்கா இப்படி படுத்துறா” என்று விக்ரம் விகாஷிடம் புலம்பவும், “என்ன பண்றது அத்தான் குரங்குக்கு வாய்க்கப்பட்டா குட்டிக்கரணம் போட்டு தானே ஆகணும்… நீங்க போயும் போயும் இவள செலக்ட் பண்ணி இருக்கீங்க… அப்ப நீங்க இப்படித்தான் இருக்கணும்” என்று விகாஷ் விக்ரமின் காலை வாரி விட்டான்.
“இப்ப அப்படி என்ன வேலை அவளுக்கு இருக்கு” என்று விக்ரம் சலிப்புடன் கேட்க, “சீனியர்ஸ் கூட இன்ஸ்பெக்ஷன் போயிட்டு வந்தாங்க அதோட ரிப்போர்ட் சப்மிட் பண்ண தான் போயிருப்பா…. கொஞ்ச நேரத்துல வந்துருவா நீங்க ரொம்ப பதறாதீங்க… நீங்க போய் ரெஸ்ட் எடுத்துக்கோங்க…. நான் இப்ப கிளம்பனும் போயிட்டு வந்து எல்லாரும் ஈவ்னிங் ரிசப்ஷனுக்கு போலாம்” என்று விகாஷும் புறப்பட்டான்.
சரவணன் பலமுறை முயற்சித்தும் சனந்தா பட்டும் படாமலும் தான் அவனிடமும் பேசினாள். அதையாவது அவனிடம் பேசினாலே என்ற திருப்தி தான் சரவணனுக்கு இருந்ததே தவிர முன்னர் இருந்தது போல் சனந்தா பேசவில்லை என்ற வருத்தம் சரவணனுக்கும் இருக்க தான் செய்தது.
“எனக்கே எப்படி இருக்கே விக்ரம் இன்னும் இவ்வளவு கஷ்டப்படுவான்ல” என்று விக்ரமை பற்றி நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான் சரவணன். “சரி மச்சான் நம்மளும் எங்கயாவது வெளியில போலாமா இல்ல ரெஸ்ட் எடுத்துக்கலாமா… நம்ம இப்படி லீவ் போடுறதே அதிசயம் தான்??” என்று சரவணன் கேட்க, “அட போடா அவ கிட்ட பேசணும்னு நினைச்சா வீட்டிலேயே இல்லை” என்று விக்ரம் சலித்துக் கொண்டான்.
“சரி ரொம்ப வருத்தப்படாத அட்லீஸ்ட் இப்ப இதெல்லாம் நடக்குதில்லன்னு சந்தோஷப்படு…. அவசரப்படாத எப்படியும் அடுத்து அவ பூஜைக்கு ஊருக்கு வருவா அப்படியும் இல்லனாலும் கெளதம் கல்யாணமே ஊர்ல தானே கண்டிப்பா வருவா அந்த நேரத்தை பயன்படுத்திக்கலாம் நீ கவலைப்படாதே” என்று சரவணன் ஆறுதலும் கூறினான்.
மாலை நேரம் நெருங்கவும் தான் சனந்தா வீடு வந்து சேர்ந்தாள். அவளது அறைக்குள் செல்லும் முன் சனா என்று சரவணன் அழைக்கவும், என்ன என்பது போல் அவனை பார்க்க, “இல்ல சனா அது விக்ரம்….” என்று சரவணன் பேசுவதற்குள் சனந்தாவின் கைப்பேசி ஒலித்தது. “சாரி சரவணன் ஃபோன் வருது” என்று கூறி அவளது அறைக்குள் சென்று விட்டாள்.
“அது எப்படின்னே தெரியல டா உன் வாழ்க்கைல கரெக்டா விளையாடுறதுக்குன்னு அந்தந்த நேரத்துக்கு ஃபோன் வந்துருது” என்று சரவணன் கூறவும், “அது தான் எனக்கும் தெரியல மச்சான்…. சரி விடு நீ சொன்ன மாதிரி அடுத்த மாசம் வரைக்கும் வெயிட் பண்றேன்” என்று விக்ரம் சலிப்புடன் கூறினான்.
அனைவரும் தயாராகி அபிலாஷ் மற்றும் அனுவின் ரிசப்ஷன் விழாவை சிறப்பித்து வந்து மறுநாள் காலையில் அனைவரும் வண்ணம் கிராமத்திற்கு புறப்பட்டனர். என்ன தான் விக்ரமுடன் பேசவில்லை என்றாலும் அவன் அவளுடனே இருக்கிறான் என்பதே அவளுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது என்னமோ உண்மை தான். அவன் புறப்படும் போது அவள் முகத்தில் காணப்பட்ட லேசான சோகமுமே விக்ரமுக்கு நிம்மதியை அளித்தது தான் அவளது மாற்றத்தை கண்டு.
கிராமத்தில் விநாயகர் பூஜை நெருங்கவும் ஸ்ரீனிவாசன் வள்ளியிடம், “போன வருஷம் சனா எவ்வளவு வேலை இழுத்து போட்டு செஞ்சிருக்கா இல்ல… இந்த வருஷம் அதெல்லாம் செய்ய ஆள் இல்லாமல் தவிச்சிட்டு இருக்கேன் பாரு நானு” என்று வருத்தத்துடன் கூறினார்.
“ஆமாங்க நான் கூட ஏன் வீட்டுக்கு வரல… வேலை பார்க்குறேன்னு சொல்லி நான் அவ மேல செல்லமா தான் கோபப்பட்டு இருக்கேன்… இருந்தாலும் இப்ப தான் எனக்கும் தெரியுது, கூட எவ்வளவு ஒத்தாசையா இருந்திருக்கான்னு” என்று வள்ளி கூறினார்.
“அவ்ளோ ஏன் மா இப்ப இங்க பூஜை அப்படின்னு தெரிஞ்சதும் எவ்ளோ பொருள் வாங்கி அனுப்பி இருக்கா… அது போக அவங்க ஹோட்டல்ல இருக்கிற ஆட்களை அனுப்பி, இங்க இருக்க சொல்லி வேலைக்கு ஒத்தாசையா… அவ்வளவு ஹெல்ப் பண்ணிட்டு தான் இருக்கா…. சந்திரசேகர் சொல்ல போய் தான் தெரிஞ்சது இல்லன்னா அவங்க தான் ஏற்பாடு பண்ணாங்கனு நானும் நினைச்சு இருப்பேன்… ஆனா, இது எல்லாத்துக்கும் மூளை காரணமே சனா தான்…. பாரேன் அவ்ளோ நேசிக்கிற அவ நம்மளையும் நம்ம ஊரையும்” என்று ஸ்ரீனிவாசன் சனந்தாவை பெருமையாக கூறினார்.
“அது என்னமோ உண்மை தாங்க என்ன இருந்தாலும் அவளுக்கு இந்த ஊரு மேல தனி பாசம் இருக்குது தான்… அந்த பாசமே அவளை கண்டிப்பா இங்க கொண்டு வந்து சேர்த்துரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு” என்று வள்ளி கூறினார்.
“அம்மா நான் உங்க கிட்ட சொன்ன மாதிரி நான் காலையில வரேன் கொஞ்ச நேரம் இருக்கேன்… அதுக்கு அப்புறம் எனக்கு ரீசர்ச் சென்டர்ல வேலை இருக்கு நான் அத பார்த்துட்டு நம்ம ஹோட்டல்ல தங்கிடுவேன்… நீங்க எல்லாம் எப்ப வரீங்கன்னு சொல்லுங்க அப்போ ரெடியா வீட்டுக்கு போலாம்” என்று சனந்தா கூறவும், “இன்னும் போகவே இல்லடி அதுக்குள்ள திருப்பி வீட்டுக்கு வரத பத்தி பேசுற” என்று லக்ஷ்மி சலித்துக் கொண்டு கூறினார்.
“நடந்தது நடந்து முடிஞ்சிருச்சு சனா இன்னும் அதையே புடிச்சிட்டிருந்தா எப்படி… நம்ம கண்டிப்பா ரியாலிட்டி என்னவோ அதை ஃபேஸ் பண்ணி தானே ஆகணும்” என்று விகாஷ் கூறவும், “அது எனக்கும் புரியுது… ஆனா, எனக்கு அதுக்கு டைம் குடுங்கன்னு தான் நான் கேட்குறேன்” என்று சனந்தா கூறவும், “சனா சொல்றால அதைப்படி கேளுங்க அவளே சரியாயிருவா சும்மா அவள போட்டு படுத்தாதீங்க” என்று சந்திரசேகர் கூறவும் அனைவரும் அமைதியாகிவிட்டனர்.
பயணம் முழுவதும் சனந்தாவிற்கு கிராமம் எப்படி இருக்கிறது? என்ன தான் பார்த்து பார்த்து தேடி வாலன்டியர் டீச்சரை அனுப்பினாலும் கூட குழந்தைகளை பற்றி தெரிந்து கொண்டு தான் இருப்பாள். அவள் அங்கிருந்து பிரிந்து இருந்த நாட்களில் தான் தெரிந்தது கிராமம் அவளது வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது.
முடிந்த அளவுக்கு சனந்தாவோட தயக்கத்தையும் படபடப்பையும் முகத்தில் காட்டாமல் தான் இருந்தாள். பிரகாஷ் அவர்கள் வண்டியை நேராக மேலே கொண்டு நிறுத்தவும் சனந்தா பெரும் தயக்கத்துடன் இறங்கி விகாஷின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
ஏனென்றால் வண்டி நின்றது விக்ரமின் வீட்டிற்கு முன். வள்ளி மற்றும் ஸ்ரீனிவாசன் இன்முகத்துடன் அவர்களை வரவேற்கவும், சனந்தா மட்டும் தயக்கத்திலே இருந்தாள். வள்ளி அதை கவனித்து சனந்தாவின் தயக்கத்தை அறிந்து கொண்டு அவளது கையைப் பற்றிக் கொண்டு, “நம்ம வீடு சனா… ஏன் இப்படி தயங்குற” என்று கூறி அவளை கையுடன் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
அவள் தங்கி இருந்த அறையில் தான் விக்ரம் தற்போது தங்கி இருக்கிறான் என்பது சனந்தாவுக்கு விகாஷ் மூலமாக தெரிய வந்ததும் அவளுக்கு அது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
சனந்தா விகாஷிடம், “நம்ம வெளியில போலாமா” என்று கேட்க, அவளின் நிலைமையை புரிந்து கொண்டு அனைவரும் சரி என்று அமோதித்தனர். சனந்தா இன்னமும் விகாஷின் கையை விடாமல் இறுக்கமாகவே பிடித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன சனா… ஏன் இப்படி இருக்க… ஏன் இப்படி கை நடுங்குது” என்று விகாஷ் கேட்க, “அதுக்கு பதில் என்கிட்ட இல்லடா” என்று சனந்தா கூறினாள். “அதுக்கு பதில் எல்லாம் ஒன்னும் இல்ல…. உனக்கு இது ரொம்ப பிடிச்ச இடம் எந்த இடத்துல போய் அப்படி நடந்துருச்சு அப்படின்ற வருத்தம் உனக்கு நிறைய இருக்கு…. திருப்பி இந்த இடத்தில நீ வந்து நின்னா எப்படி இருக்கும்னு யோசனை தான் உனக்கு வேற ஒன்னும் இல்ல பயப்படாம வா” என்று விகாஷ் கூறினான்.
கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல
எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
Log in to Facebook
Log in to Facebook to start sharing and connecting with your friends, family and people you know.
Author: Bhavani Varun
Article Title: Chapter 109
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter 109
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.