அத்தியாயம்: 10
ஏழு மணிக்கு மேல் மேனேஜருக்கு கால் செய்து பர்மிஷன் கேட்டாள் ரதி. போனால் போகட்டும் என்று நினைத்து அவளுக்கு பர்மிஷன் கொடுத்து விட்டார் அவர். அதேபோல அவருக்கு மெசேஜ் செய்து தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி தானும் பர்மிஷன் கேட்டாள் மீரா. தோழிகள் இருவரும் சேர்ந்து பர்மிஷன் கேட்பதால் வேண்டுமென்றே காரணம் சொல்கிறார்கள் என்று அந்த மேனேஜருக்கு புரிந்தாலும், அந்த ஆபிஸில் அவர்களது பங்கு முக்கியமானது என்பதால் “Half day பர்மிஷன் தானே போய் தொலையட்டும்." என்று நினைத்த மேனேஜர் அவர்கள் இருவருக்கும் பர்மிஷன் கொடுத்து விட்டார்.
ரதிக்கு கால் செய்த மீரா “ஏய்... அந்த ஆளு எனக்கு பர்மிஷன் கொடுத்துட்டாண்டி. நான் கிளம்பி ரெடியா இருக்கேன். நீ சீக்கிரம் கிளம்பி எங்க வீட்டுக்கு வந்துரு. நம்ம இங்க இருந்து அப்படியே அந்த கோயிலுக்கு போகலாம்." என்று சொல்ல “எனக்கு என் ரூமுக்குள்ள போகறதுக்கே பயமா இருக்கு மீரா. கோயிலுக்கு போனும்ன்னா குளிக்காம எப்படி போறது? ஆனா பாத்ரூமுக்குள்ள போனாலே கண்ணாடியில தெரிஞ்ச அவனோட உருவம் தானே ஞாபகம் வரும்..!! எனக்கு அத நினைச்சாலே அள்ளு விடுதுடி." என்று சொல்லி புலம்பினாள் ரதி.
“ஐயோ... அதுக்குன்னு இப்ப என்னடி பண்றது? பேசாம நீ உன் Dressஜ எடுத்துக்கிட்டு இங்க கிளம்பி வந்துடு. இங்கயே குளிச்சிட்டு ரெடியாகு." என்று மீரா சொல்ல, “குட் ஐடியா. இரு நான் அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உடனே கிளம்பி அங்க வரேன்." என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்த ரதி கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருந்த தன் அம்மாவிடம் “அம்மா... நான் மீரா வீட்டுக்கு போறேன். அங்க இருந்து அப்படியே ஆபீஸ் போறேன். ஒரு இம்போர்ட்டண்ட் ப்ராஜெக்ட் டிஸ்கஷன் இருக்கு." என்று பொய் சொல்லிவிட்டு மீரா சொன்னதைப் போல தனக்கு தேவையான ஆடைகளையும் சில பொருட்களையும் எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு தனது ஸ்கூட்டியில் மீராவின் வீட்டிற்கு சென்றாள் ரதி.
சிம்ரன் கிளியின் உடலுக்குள் இருந்த விக்ரம் ரதி எங்கேயோ செல்வதை பார்த்துவிட்டு தானும் அவள் பின்னே பறந்து சென்றான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின் மீராவுடன் சேர்ந்து அவள் வீட்டிலேயே குளித்து, சாப்பிட்டுவிட்டு அவளுடன் கிளம்பிய ரதி தனது ஸ்கூட்டியில் பக்கத்து ஊரில் உள்ள மீரா சொன்ன சிவன் கோவிலுக்கு சென்றாள். ஒரு மணி நேர பயணத்திற்கு பின் அவர்கள் அந்த சிவன் கோவிலை வந்தடைந்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து விக்ரமும் கிளியின் உருவத்தில் அங்கே சென்றான்.
ரதியும், மீராவும் சேர்ந்து அந்த கோயில் முழுவதும் சுற்றி திரிந்து சாமி கும்பிட்டுவிட்டு சோர்வாக வந்து ஒரு இடத்தில் அமர்ந்தார்கள். அவர்கள் எங்கு தேடியும் மீராவின் அம்மா சொன்ன அந்த கோவிலில் தங்கி இருக்கும் சாமியாரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் சோகமான ரதி “என்னடி... ஏற்கனவே எனக்கு எல்லாமே தப்பு தப்பா நடக்குதுன்னு தான் அத சரி பண்ணலாம்னு இப்ப கோயிலுக்கு வந்தேன். இங்க வந்து பார்த்தா அந்த சாமியாரை காணோம். நான் என்ன தான் பண்றது சொல்லு? எனக்கு இரிடேட் ஆகுது மீரா." என்று சொல்லி தன் வாயை அவள் மூடுவதற்குள் அந்த கோவிலுக்குள் ஒரு சாமியார் நுழைந்தார்.
அவரை கவனித்த மீரா “இவர் தான் அந்த சாமியார் என்று நினைக்கிறேன். வா போய் பேசலாம்" என்று சொல்லி ரதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நேராக சென்று அவளுடன் சேர்ந்து அந்த சாமியாரின் காலில் விழுந்தாள். அவர்கள் இருவருக்கும் ஆசிர்வாதம் செய்த சாமியார் “தீர்க்க சுமங்கலி பவா." என்றார். அவரை கையடித்து கும்பிட்ட ரதி “சாமி ... எனக்கு ஒரு பிரச்சனை... எனக்கு என்ன சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல. எல்லாமே விசித்திரமா இருக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க தான் என்னை காப்பாத்தணும்." என்று கலக்கிய கண்களுடன் கெஞ்சினாள்.
அவளை விளையாட்டாக பார்த்து புன்னகைத்த அந்த சாமியார் “உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மகளே... இத்தனை நாளா நீ நினைச்சு ஏங்குன வாழ்க்கை உனக்கு கிடைக்கப் போகுது. நீ இப்போ எத பாத்து பயந்து ஓடுறியோ, கூடிய சீக்கிரம் அதையே தேடி ஓடுவ. இருட்டா இருந்த உன் வாழ்க்கையில அவனால வெளிச்சம் வரப்போகுது. உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்து நீ சந்தோஷமா இருப்ப தாயி. உனக்கு அந்த ஈசன் துணை இருக்கான். நீ நிம்மதியா போயிட்டு வா." என்று சொல்லி அவளது கையில் ஒரு பிடி திருநீரை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் சொன்னதை நம்ப முடியாமல் அவரையே பார்த்துக்கொண்டு ரதி அமைதியாக நின்று கொண்டிருக்க, “என்னடி உன் பிரச்சனையை சொல்லி இவர்கிட்ட சொல்யூஷன் கேட்கலாம்னு வந்தா, இவர் உனக்கு பிரச்சனையே இல்ல போயிட்டு வாமா நீ நல்லா இருப்பேன்னு சொல்றாரு. எனக்கு ஒன்னும் புரியலையே...!!!" என்று மீரா சொல்ல, “எனக்கும் தான்டி புரியல. ஒருவேளை இந்த திருநீரை நான் வச்சுக்கிட்டா எனக்கு எந்த பிரச்சினையும் வராது போல." என்ற ரதி அந்த சாமியார் தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற சிறுநீரை ஒரு பேப்பரில் கொட்டி அதை எடுத்து தன் நெற்றி முழுவதும் பட்டை போட்டு கொண்டு மீதம் இருந்ததை மடித்து தன் ஹேண்ட் Bagக்குள் வைத்துக் கொண்டாள்.
பின் அவர்கள் இருவரும் அந்த கோவிலில் இருந்து கிளம்பி வெளியில் வரும்போது, கிளியின் உருவத்தில் அங்கே பறந்து வந்த விக்ரம் நேராக வந்து ரதியின் தோள்களில் அமர்ந்தான். சிம்ரனை பார்த்தவுடன் அதிர்ந்த ரதி கிளியை தன் கையில் எடுத்து அதைப் பார்த்து முறைத்தவள் “ஏய் சிம்ரன்..!! இவ்வளவு தூரம் எப்படி வந்த நீ? எப்பயும் நீ வீட்டை விட்டு வெளியே போகவே போக மாட்டியே..!! நான் இங்க தான் இருக்கேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது?" என்றெல்லாம் அடுத்தடுத்து கோபமாக கேள்விகளாக கேட்க, வழக்கம்போல சிம்ரன் கீ... கீ... என்று கத்தாமல் அமைதியாகவே அவளை பார்த்துக் கொண்டிருந்தது.
அதனால் கடுப்பான ரதி “ஏய் கேக்குறேன்ல.. நான் தூங்கும் போதெல்லாம் கீ..கீனு கத்தி என்ன எழுப்பிவிட தெரியுதுல்ல.. இப்ப கத்துடி. உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா, இவ்வளவு தூரம் தனியா வந்திருப்ப...!! நீ வர வழியில உன்னை யாராவது பிடிச்சிட்டு போயிருந்தா நான் உன்னை எங்க போய் தேடுறது?" என்று கோபமாக கேட்க “என்ன யாராலயும் அப்படி பிடிச்சிட்டு போக முடியாது ரதி." என்று அந்தக் கிளியின் உடலுக்குள் இருந்து தன் சொந்த குரலில் அவளுக்கு பதில் சொன்னான் விக்ரம்.
அதனால் பயந்து போன ரதி சட்டென தன் கையில் இருந்த சிம்ரன் கிளியை விட்டு விட, மீண்டும் அவள் அருகில் பறந்து சென்று அவளது தோள்களில் அமர்ந்த விக்ரம் “என்ன பார்த்து பயப்படாத ரதி. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். நான் சொல்ல வர்றத மட்டும் கொஞ்சம் பொறுமையா கேளு ப்ளீஸ்." என்று கெஞ்சும் குரலில் சொன்னான்.
இதுவரை வெறுமனே கீ... கீ.. என்று கத்திக்கொண்டு இருந்த கிளி திடீரென பேசினாலே அது ஆச்சரியம் தான். அதனால் இப்போது சிம்ரன் ஒரு இளைஞனின் குரலில் மனிதனைப் போல சரளமாக பேசுகிறது. அதனால் அதை கேட்டு ஆச்சரியம் கலந்த பத்தில் ரதியும் மீராவும் ஒருவரின் கையை மற்றொருவர் இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். இன்னும் ரதியின் தோளில் விக்ரம் கிளியாக அமர்ந்திருந்ததால், ரதியின் உடம்பெல்லாம் அச்சத்தில் நடுங்கியது.
அதனால் மெல்லிய குரலில் அவள் காதோரம் “நான் இப்படி பேசுறத வேற யாராவது கேட்டா தேவை இல்லாத பிரச்சினை ஆகும். நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நான் பேசினா உனக்கு என்ன நடக்குதுன்னு புரியும் ரதி. என்ன பார்த்து பயப்படாதடி. எனக்கு கஷ்டமா இருக்கு. நீ பயப்படற அளவுக்கு எல்லாம் நான் எதுவும் பண்ணல." என்று விக்ரம் சொல்ல, அந்த சாமியார் சொன்னதை மனதில் வைத்து “இது என்ன தான் சொல்லுதுன்னு கேக்கலாம்டி. என்ன இருந்தாலும் இது நம்ம சிம்ரன் தானே.. நம்மள என்ன பண்ணிட போகுது?" என்று ஆர்வம் கலந்த பயத்தில் திக்கி திணறி ரதி சொல்ல, “சரி, நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்." என்றாள் மீரா.
“என்னது வீட்டுக்கு போய் பேசுறதா? அதுவரைக்கும் இந்த கிளி என் மேல தான் உட்கார்ந்து இருக்குமா? எனக்கு பயமா இருக்குடி. இதை இப்படி வச்சுக்கிட்டு நான் எப்படி ஸ்கூட்டியை ஓட்டறது? நீ வேணா இந்த கிளியை கொஞ்ச நேரம் வச்சுக்கிறியா?" என்று ரதி மீராவிடம் கேட்க, “இல்லல்ல... உங்க வீட்டு கிளி தானே நீயே வச்சுக்கோ. புதுசா தெரியாதவங்க யாராவது தூக்குனா அது கொத்திரும்." என்று பயத்தில் மீரா சொல்ல, அவளை முறைத்து பார்த்துவிட்டு கிளியை பாவமாக பார்க்க ரதி, வேறு வழியில்லாமல் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட்
செய்து மீராவின் வீட்டிற்கு சென்றாள்.
தொடரும்...
அமேசானில் படிக்க..
ஏழு மணிக்கு மேல் மேனேஜருக்கு கால் செய்து பர்மிஷன் கேட்டாள் ரதி. போனால் போகட்டும் என்று நினைத்து அவளுக்கு பர்மிஷன் கொடுத்து விட்டார் அவர். அதேபோல அவருக்கு மெசேஜ் செய்து தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி தானும் பர்மிஷன் கேட்டாள் மீரா. தோழிகள் இருவரும் சேர்ந்து பர்மிஷன் கேட்பதால் வேண்டுமென்றே காரணம் சொல்கிறார்கள் என்று அந்த மேனேஜருக்கு புரிந்தாலும், அந்த ஆபிஸில் அவர்களது பங்கு முக்கியமானது என்பதால் “Half day பர்மிஷன் தானே போய் தொலையட்டும்." என்று நினைத்த மேனேஜர் அவர்கள் இருவருக்கும் பர்மிஷன் கொடுத்து விட்டார்.
ரதிக்கு கால் செய்த மீரா “ஏய்... அந்த ஆளு எனக்கு பர்மிஷன் கொடுத்துட்டாண்டி. நான் கிளம்பி ரெடியா இருக்கேன். நீ சீக்கிரம் கிளம்பி எங்க வீட்டுக்கு வந்துரு. நம்ம இங்க இருந்து அப்படியே அந்த கோயிலுக்கு போகலாம்." என்று சொல்ல “எனக்கு என் ரூமுக்குள்ள போகறதுக்கே பயமா இருக்கு மீரா. கோயிலுக்கு போனும்ன்னா குளிக்காம எப்படி போறது? ஆனா பாத்ரூமுக்குள்ள போனாலே கண்ணாடியில தெரிஞ்ச அவனோட உருவம் தானே ஞாபகம் வரும்..!! எனக்கு அத நினைச்சாலே அள்ளு விடுதுடி." என்று சொல்லி புலம்பினாள் ரதி.
“ஐயோ... அதுக்குன்னு இப்ப என்னடி பண்றது? பேசாம நீ உன் Dressஜ எடுத்துக்கிட்டு இங்க கிளம்பி வந்துடு. இங்கயே குளிச்சிட்டு ரெடியாகு." என்று மீரா சொல்ல, “குட் ஐடியா. இரு நான் அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு உடனே கிளம்பி அங்க வரேன்." என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்த ரதி கிச்சனில் டீ போட்டுக் கொண்டிருந்த தன் அம்மாவிடம் “அம்மா... நான் மீரா வீட்டுக்கு போறேன். அங்க இருந்து அப்படியே ஆபீஸ் போறேன். ஒரு இம்போர்ட்டண்ட் ப்ராஜெக்ட் டிஸ்கஷன் இருக்கு." என்று பொய் சொல்லிவிட்டு மீரா சொன்னதைப் போல தனக்கு தேவையான ஆடைகளையும் சில பொருட்களையும் எடுத்து ஒரு பையில் போட்டுக் கொண்டு தனது ஸ்கூட்டியில் மீராவின் வீட்டிற்கு சென்றாள் ரதி.
சிம்ரன் கிளியின் உடலுக்குள் இருந்த விக்ரம் ரதி எங்கேயோ செல்வதை பார்த்துவிட்டு தானும் அவள் பின்னே பறந்து சென்றான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின் மீராவுடன் சேர்ந்து அவள் வீட்டிலேயே குளித்து, சாப்பிட்டுவிட்டு அவளுடன் கிளம்பிய ரதி தனது ஸ்கூட்டியில் பக்கத்து ஊரில் உள்ள மீரா சொன்ன சிவன் கோவிலுக்கு சென்றாள். ஒரு மணி நேர பயணத்திற்கு பின் அவர்கள் அந்த சிவன் கோவிலை வந்தடைந்தார்கள். அவர்களைப் பின் தொடர்ந்து விக்ரமும் கிளியின் உருவத்தில் அங்கே சென்றான்.
ரதியும், மீராவும் சேர்ந்து அந்த கோயில் முழுவதும் சுற்றி திரிந்து சாமி கும்பிட்டுவிட்டு சோர்வாக வந்து ஒரு இடத்தில் அமர்ந்தார்கள். அவர்கள் எங்கு தேடியும் மீராவின் அம்மா சொன்ன அந்த கோவிலில் தங்கி இருக்கும் சாமியாரை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் சோகமான ரதி “என்னடி... ஏற்கனவே எனக்கு எல்லாமே தப்பு தப்பா நடக்குதுன்னு தான் அத சரி பண்ணலாம்னு இப்ப கோயிலுக்கு வந்தேன். இங்க வந்து பார்த்தா அந்த சாமியாரை காணோம். நான் என்ன தான் பண்றது சொல்லு? எனக்கு இரிடேட் ஆகுது மீரா." என்று சொல்லி தன் வாயை அவள் மூடுவதற்குள் அந்த கோவிலுக்குள் ஒரு சாமியார் நுழைந்தார்.
அவரை கவனித்த மீரா “இவர் தான் அந்த சாமியார் என்று நினைக்கிறேன். வா போய் பேசலாம்" என்று சொல்லி ரதியின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நேராக சென்று அவளுடன் சேர்ந்து அந்த சாமியாரின் காலில் விழுந்தாள். அவர்கள் இருவருக்கும் ஆசிர்வாதம் செய்த சாமியார் “தீர்க்க சுமங்கலி பவா." என்றார். அவரை கையடித்து கும்பிட்ட ரதி “சாமி ... எனக்கு ஒரு பிரச்சனை... எனக்கு என்ன சுத்தி என்ன நடக்குதுன்னே புரியல. எல்லாமே விசித்திரமா இருக்கு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நீங்க தான் என்னை காப்பாத்தணும்." என்று கலக்கிய கண்களுடன் கெஞ்சினாள்.
அவளை விளையாட்டாக பார்த்து புன்னகைத்த அந்த சாமியார் “உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மகளே... இத்தனை நாளா நீ நினைச்சு ஏங்குன வாழ்க்கை உனக்கு கிடைக்கப் போகுது. நீ இப்போ எத பாத்து பயந்து ஓடுறியோ, கூடிய சீக்கிரம் அதையே தேடி ஓடுவ. இருட்டா இருந்த உன் வாழ்க்கையில அவனால வெளிச்சம் வரப்போகுது. உன் கஷ்டம் எல்லாம் தீர்ந்து நீ சந்தோஷமா இருப்ப தாயி. உனக்கு அந்த ஈசன் துணை இருக்கான். நீ நிம்மதியா போயிட்டு வா." என்று சொல்லி அவளது கையில் ஒரு பிடி திருநீரை கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.
அவர் சொன்னதை நம்ப முடியாமல் அவரையே பார்த்துக்கொண்டு ரதி அமைதியாக நின்று கொண்டிருக்க, “என்னடி உன் பிரச்சனையை சொல்லி இவர்கிட்ட சொல்யூஷன் கேட்கலாம்னு வந்தா, இவர் உனக்கு பிரச்சனையே இல்ல போயிட்டு வாமா நீ நல்லா இருப்பேன்னு சொல்றாரு. எனக்கு ஒன்னும் புரியலையே...!!!" என்று மீரா சொல்ல, “எனக்கும் தான்டி புரியல. ஒருவேளை இந்த திருநீரை நான் வச்சுக்கிட்டா எனக்கு எந்த பிரச்சினையும் வராது போல." என்ற ரதி அந்த சாமியார் தன்னிடம் கொடுத்துவிட்டு சென்ற சிறுநீரை ஒரு பேப்பரில் கொட்டி அதை எடுத்து தன் நெற்றி முழுவதும் பட்டை போட்டு கொண்டு மீதம் இருந்ததை மடித்து தன் ஹேண்ட் Bagக்குள் வைத்துக் கொண்டாள்.
பின் அவர்கள் இருவரும் அந்த கோவிலில் இருந்து கிளம்பி வெளியில் வரும்போது, கிளியின் உருவத்தில் அங்கே பறந்து வந்த விக்ரம் நேராக வந்து ரதியின் தோள்களில் அமர்ந்தான். சிம்ரனை பார்த்தவுடன் அதிர்ந்த ரதி கிளியை தன் கையில் எடுத்து அதைப் பார்த்து முறைத்தவள் “ஏய் சிம்ரன்..!! இவ்வளவு தூரம் எப்படி வந்த நீ? எப்பயும் நீ வீட்டை விட்டு வெளியே போகவே போக மாட்டியே..!! நான் இங்க தான் இருக்கேன்னு உனக்கு எப்படி தெரிஞ்சது?" என்றெல்லாம் அடுத்தடுத்து கோபமாக கேள்விகளாக கேட்க, வழக்கம்போல சிம்ரன் கீ... கீ... என்று கத்தாமல் அமைதியாகவே அவளை பார்த்துக் கொண்டிருந்தது.
அதனால் கடுப்பான ரதி “ஏய் கேக்குறேன்ல.. நான் தூங்கும் போதெல்லாம் கீ..கீனு கத்தி என்ன எழுப்பிவிட தெரியுதுல்ல.. இப்ப கத்துடி. உனக்கு எவ்ளோ கொழுப்பு இருந்தா, இவ்வளவு தூரம் தனியா வந்திருப்ப...!! நீ வர வழியில உன்னை யாராவது பிடிச்சிட்டு போயிருந்தா நான் உன்னை எங்க போய் தேடுறது?" என்று கோபமாக கேட்க “என்ன யாராலயும் அப்படி பிடிச்சிட்டு போக முடியாது ரதி." என்று அந்தக் கிளியின் உடலுக்குள் இருந்து தன் சொந்த குரலில் அவளுக்கு பதில் சொன்னான் விக்ரம்.
அதனால் பயந்து போன ரதி சட்டென தன் கையில் இருந்த சிம்ரன் கிளியை விட்டு விட, மீண்டும் அவள் அருகில் பறந்து சென்று அவளது தோள்களில் அமர்ந்த விக்ரம் “என்ன பார்த்து பயப்படாத ரதி. நான் உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும். நான் சொல்ல வர்றத மட்டும் கொஞ்சம் பொறுமையா கேளு ப்ளீஸ்." என்று கெஞ்சும் குரலில் சொன்னான்.
இதுவரை வெறுமனே கீ... கீ.. என்று கத்திக்கொண்டு இருந்த கிளி திடீரென பேசினாலே அது ஆச்சரியம் தான். அதனால் இப்போது சிம்ரன் ஒரு இளைஞனின் குரலில் மனிதனைப் போல சரளமாக பேசுகிறது. அதனால் அதை கேட்டு ஆச்சரியம் கலந்த பத்தில் ரதியும் மீராவும் ஒருவரின் கையை மற்றொருவர் இறுக்கமாக பிடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டார்கள். இன்னும் ரதியின் தோளில் விக்ரம் கிளியாக அமர்ந்திருந்ததால், ரதியின் உடம்பெல்லாம் அச்சத்தில் நடுங்கியது.
அதனால் மெல்லிய குரலில் அவள் காதோரம் “நான் இப்படி பேசுறத வேற யாராவது கேட்டா தேவை இல்லாத பிரச்சினை ஆகும். நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நான் பேசினா உனக்கு என்ன நடக்குதுன்னு புரியும் ரதி. என்ன பார்த்து பயப்படாதடி. எனக்கு கஷ்டமா இருக்கு. நீ பயப்படற அளவுக்கு எல்லாம் நான் எதுவும் பண்ணல." என்று விக்ரம் சொல்ல, அந்த சாமியார் சொன்னதை மனதில் வைத்து “இது என்ன தான் சொல்லுதுன்னு கேக்கலாம்டி. என்ன இருந்தாலும் இது நம்ம சிம்ரன் தானே.. நம்மள என்ன பண்ணிட போகுது?" என்று ஆர்வம் கலந்த பயத்தில் திக்கி திணறி ரதி சொல்ல, “சரி, நம்ம வீட்டுக்கு போய் பேசிக்கலாம்." என்றாள் மீரா.
“என்னது வீட்டுக்கு போய் பேசுறதா? அதுவரைக்கும் இந்த கிளி என் மேல தான் உட்கார்ந்து இருக்குமா? எனக்கு பயமா இருக்குடி. இதை இப்படி வச்சுக்கிட்டு நான் எப்படி ஸ்கூட்டியை ஓட்டறது? நீ வேணா இந்த கிளியை கொஞ்ச நேரம் வச்சுக்கிறியா?" என்று ரதி மீராவிடம் கேட்க, “இல்லல்ல... உங்க வீட்டு கிளி தானே நீயே வச்சுக்கோ. புதுசா தெரியாதவங்க யாராவது தூக்குனா அது கொத்திரும்." என்று பயத்தில் மீரா சொல்ல, அவளை முறைத்து பார்த்துவிட்டு கிளியை பாவமாக பார்க்க ரதி, வேறு வழியில்லாமல் தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட்
செய்து மீராவின் வீட்டிற்கு சென்றாள்.
தொடரும்...
அமேசானில் படிக்க..
Author: thenaruvitamilnovels
Article Title: Chapter-10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: Chapter-10
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.