மஞ்சம்-53

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
காலை பொழுது அழகாக விடிந்தது. ஆனால் ஏகே பேலஸ் மிகவும் அமைதியாக இருந்தது.

நேற்று அர்ஜுனின் திருமண கொண்டாட்டத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்த அனைவரும் இப்போது நிம்மதியாக உறங்கி ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார்கள்.

ஆனால் அந்த வீட்டில் மகேஷ் ஒருவன் மட்டும் இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்ததால் அனைவருக்கும் முன்பாக எழுந்து கொண்டு வேலை செய்ய மனமில்லாமல் மொட்டை மாடியில் தனியாக சென்று நின்று கொண்டிருந்தான்.

அப்போது ஒரு முக்கியமான விஷயம் பேச வேண்டும் என்று சொல்லி அவனை கீழே வரச் சொன்னாள் அவனுடைய அம்மா.

அதனால் அவனும் கிச்சனுக்கு சென்று தன் அம்மாவிடம் என்ன என்று கேட்க,

“நம்ம சொந்தத்திலயே உனக்கு ஒரு பொண்ணு பார்க்க போறேன்னு சொல்லிட்டு இருந்தேன் இல்ல..

உங்க அப்பாவோட தங்கச்சி பொண்ணு மகா படிச்சு முடிச்சிட்டாளாம்.

நம்ம இங்க அர்ஜுன் சார் வீட்ல வேலை பாக்குறது அவங்களுக்கு ஏற்கனவே தெரியும்.

அந்த பொண்ணும் நல்லா தான் படிச்சிருக்கா.

ஜானகி மேடம் நம்ம ஊரு சாப்பாடை சமைக்கிறதுக்கு இன்னும் ஒரு ஆள் இருந்தா நல்லா இருக்கும்னு சொல்றாங்க.

அதான் உனக்கும் உங்க மாமா பொண்ணு மகாலட்சுமிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிட்டா,

அவங்களும் குடும்பத்தோட இங்க கிளம்பி வந்துடுவாங்க.

இங்க நமக்குன்னு ஒரு குடும்பம் இருக்கிற மாதிரியும் ஆயிடும்.

அர்ஜுன் சார் கிட்ட பேசி அவங்கள அவுட் ஹவுஸ்ல தங்க வெச்சிடலாம்.

உங்க மாமா மகாவோட ஃபோட்டோவை அனுப்பி இருக்காரு டா.

இங்க பாரு.. இந்த பொண்ண உனக்கு புடிச்சிருந்தா சொல்லு.

இப்பயே பேசி முடிச்சிடலாம்!

விசா எல்லாம் ரெடி பண்ணி அவங்கள இங்க வர வைக்கிறதுக்கு எப்படியும் ரெண்டு மூணு மாசம் ஆயிடும்.

அவங்க இங்க வந்ததுக்கு அப்புறம் இங்கயே கூட கல்யாணத்தை வச்சுக்கலாம்.

அத என்ன பண்றது, எப்படி பண்றதுன்னு நான் அப்புறமா ஜானகி மேடம் கிட்ட பேசுறேன்.

நீ முதல்ல உனக்கு இந்த பொண்ணு ஓகேவான்னு பார்த்து சொல்லு.

நம்ம சொந்தக்கார பொண்ணு. நல்ல பொண்ணு டா.

இந்தியாவுல இருக்கிறவங்க இவ்ளோ தூரத்துக்கு எல்லாம் பொண்ணு குடுக்குறதே பெரிய விஷயம்.

அதை மனசுல வச்சுக்கிட்டு நீ பொண்ண பாரு.” என்று சொல்லி மகாலட்சுமியின் போட்டோவை தன் மகனிடம் காட்டினாள்.

மகேஷின் மனதில் இன்னும் தேன்மொழி தான் இருக்கிறாள்.

ஆனால் அவளுக்கு திருமணமாகி அவள் இப்போது அர்ஜுனுடன் சேர்ந்து வாழ தொடங்கிய பிறகு,

அவளைப் பற்றி இவன் யோசித்துக் கொண்டிருப்பது முட்டாள் தனம் என்று புரிந்து கொள்ளும் அளவிற்கு மகேஷ் கொஞ்சம் புத்திசாலி தான்.

ஃபோட்டோவில் கிராமத்து பெண்களுக்கு உரித்தான அழகுடன் தாவணி பாவாடை அணிந்து நீளமாக இருந்த தனது கூந்தலை பின்னி முன்னே போட்டு,

அதில் ஒரு பெரிய முல்லைச் சரத்தை வைத்து அதை பிடித்தவாறு தனது அனைத்து பற்களும் தெரியும்படி அழகாக சிரித்து ஸ்டூடியோவில் உள்ள போட்டோகிராபரை பார்த்து போஸ் கொடுத்திருந்தாள் மகா.

அவளது அப்பாவியான முகத்தை பார்க்கும்போது அவனுக்கு தென்மொழியின் பயந்த முகம் தான் ஞாபகம் வந்தது.

அதனால் “இவளும் பாக்குறதுக்கு தேனு மாதிரி தான் இருக்கா.”

என்று நினைத்த மகேஷ் தன் அம்மாவின் மொபைல் ஃபோனை அவளிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு,

“எனக்கு பொண்ணு புடிச்சிருக்கு மா.

மத்ததெல்லாம் மாமா வீட்ல நீயே பேசிக்கோ.

கல்யாணத்தை மட்டும் இந்தியாவுலயே பண்ணிக்கலாம்.

அப்ப தான் நான் இங்க வேலை செய்யேறேன்னு சொல்லி அந்த பொண்ணுக்கும் அவ குடும்பத்தில இருக்கிறவர்களுக்கும் சீக்கிரம் வீசா அரேஞ்ச் பண்ண முடியும்.

நீ ஜானகி மேடம் கிட்ட இத பத்தி பேசிடு.‌

காலையில அர்ஜுன் சார் ஆபீஸ் போகும்போது நான் அவர் கிட்ட இத பத்தி ஒரு வார்த்தை சொல்லிடறேன்.” என்று சொல்லிவிட்டு தன் அம்மாவின் பதிலுக்காக காத்திருக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.

பின் நேராக பார்க்கிங் ஏரியாவிற்கு சென்று அங்கே இருந்த கார்களை சுத்தம் செய்ய தொடங்கினான்.

அப்போது கண்ணாடியில் தெரிந்த அவன் முகத்தை பார்க்க அவனுக்கே சிரிப்பாக வந்தது.

இங்கே இந்த கார்களை துடைக்கும் சாதாரண டிரைவராக அவன் வேலை பார்த்துக் கொண்டு,

அந்த வீட்டின் எஜமானனின் மனைவியின் மீது ஆசைப்பட அவனுக்கு எப்படி தோன்றியது?

நல்லவேளையாக தன் மனதில் இருப்பதை அவன் மற்றவர்களிடம் வெளிப்படுத்தவில்லை.

அந்த தவறை மட்டும் அவன் செய்யாததால், இன்று அவன் உயிர் பிழைத்து திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து பெருமூச்சு விட்டான் மகேஷ்.

அர்ஜுனனின் அறையில் உள்ள கிங் சைஸ் பிரீமியம் பஞ்சு மெத்தையில் ஒரே கனமான போர்வைக்குள் ஆடைகள் இன்றி ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு அர்ஜுனும் தேன்மொழியும் படுத்து உறங்கி கொண்டு இருந்தார்கள்.

வழக்கம்போல் காலை 5:00 மணிக்கு அர்ஜுன் செட் செய்து வைத்திருக்கும் அலாரம் ஒலிக்க,

தன் கண்களை திறந்து பார்த்த அர்ஜுனின் பார்வையில் முதலில் பட்டது தேன்மொழியின் பளிங்கு போன்ற கழுத்தில் நேற்று இரவு அவன் பதித்த ஹிக்கி தான்.

அதனால் தனக்குள் குறும்பாக சிரித்துக் கொண்ட அர்ஜுன் தேன்மொழியின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்பதற்காக,

அவர்களது பெட்டின் அருகே இருந்த அலாரம் ஸ்வீட்ச்சை ஆஃப் செய்தான்.

அவன் எழுந்து செல்லலாம் என்று நினைக்க, அவனை விடாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவன் நெஞ்சில் தலை வைத்து முகம் புதைத்து படுத்திருந்தாள் தென்மொழி.

அவளது கழுத்தில் அவன் கட்டிய தாலி இப்போது அவன் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருக்க,

“இவ சும்மாவே கும்பகர்ணனுக்கு தங்கச்சி மாதிரி ரொம்ப நேரம் தூங்குவா.

நேத்து நைட் வேற ரொம்ப நேரம் சரியாவே தூங்கல.. சோ எப்படியும் லஞ்ச் டைம்க்கு தான் எந்திரிப்பா..

அதுக்குன்னு நான் இப்படியே எவ்ளோ நேரம் அசையாம படுத்திருக்க முடியும்?

இவ வேற என்ன புடிச்சிகிட்டு விட மாட்டேங்குறா..

நான் மூவ் பண்ணா, இவ தூக்கம் கலைஞ்சர்மே!

இப்ப என்ன பண்றது? பேசாம தூங்கினது போதும்னு இவளையும் சேர்த்து எழுப்பி விட்டுடலாமா?” என்று யோசித்தபடி அவளை குழப்பமாக பார்த்தான் அர்ஜுன்.

அவளது சோர்வான முகத்தை பார்த்தவுடன் அவளை எழுப்ப அவனுக்கு மனம் வரவில்லை.

அதனால் அவள் முகத்தில் விழுந்து கிடந்த கூந்தலை காதுக்கு பின்னே தள்ளிய அர்ஜுன்,

மெல்ல அவளை தூக்கி பிடித்துக் கொண்டு நகர்ந்து நகர்ந்து அவளை விட்டு விலகினான்.

ஒரு வழியாக அவளை விட்டு தள்ளி வந்தவுடன் அவள் தலையை தலையணையில் வைத்து அவள் அருகில் தனது தலையணையை எடுத்து போட்டான்.

அர்ஜுன் அருகில் இல்லாததால் பக்கத்தில் கிடந்த தலையணையை அவன் என்று நினைத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டு மீண்டும் அவள் தன் தூக்கத்தை தொடர,

“இடியே இடிச்சு மழை பெய்ஞ்சு அந்த சத்தம் உள்ள கேட்டா கூட, இவ எல்லாம் தூக்கத்துல இருந்து கண்ணு முழிக்க மாட்டா..” என்று நினைத்து ரெப்ரெஷ் ஆவதற்காக எழுந்து பாத்ரூமை நோக்கி நடந்தான்.

அவன் அங்கிருந்து வெளியே வரவும், அவனது மொபைல் ஃபோன் ஒலிக்கவும் சரியாக இருந்தது.

பிரிட்டோ தான் அவனுக்கு கால் செய்து இருந்தான்.‌

அதை அட்டென்ட் செய்த அர்ஜுன் “என்ன டா ஏதாவது ப்ராப்ளமா?” என்று ஆங்கிலத்தில் கேட்க,

“எஸ் சீஃப், இங்க பக்கத்துல ஒரு கன்றியோட பார்டர்ல இருந்து இன்னொரு கண்ட்ரிக்கு 10,000 டன்‌ கொக்கையின் நம்ம கிட்ட பர்மிஷன் வாங்காம கிராஸ் ஆகுறதா இன்பர்மேஷன் வந்திருக்கு.

உங்க ஆர்டருக்காக தான் எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.

அந்த பார்ட்டி சைடுல இருந்து இன்னும் கமிஷன் வரல.

ரெண்டு வருஷமா பெருசா நம்ம எதுவும் பண்ணாம இருந்ததுனால,

எல்லாருக்கும் நம்ம மேல பயம் குறைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன்.

SS squad கிட்ட இருந்து யாராலயும் தப்பிச்சு எதையும் அவங்க இஷ்டத்துக்கு செய்ய முடியாதுன்னு இன்னைக்கு நாம்ம ப்ரூவ் பண்ண வேண்டிய கட்டாயத்தில இருக்கோம்.

இல்லைனா நீங்க பிஸியா இருப்பீங்கன்னு தெரிஞ்சும் இந்த டைம்ல நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கவே மாட்டேன். Sorry chief.” என்றான் அவன்.

“இல்ல இல்ல, நான் ஆல்ரெடி தூங்கி எந்திரிச்சிட்டேன்.‌

இது மத்த எல்லாத்தையும் விட இம்பார்டன்ட் வொர்க் தான்.

இனிமே நம்மள மீறி எதையும் செய்யணும்னு கனவுல கூட யாருக்கும் தோன கூடாது.

அந்த மாதிரி இன்னைக்கு தரமா ஒரு சம்பவம் பண்ணனும்.

நம்ம உடனே கிளம்பனும் எல்லாமே அரேஞ்ச் பண்ணு.” என்று அர்ஜுன் இறுக்கமான முகத்துடன் சொல்ல,

“Okay Chief, I will take care.” என்ற பிரிட்டோ அவனது அழைப்பை துண்டித்து விட்டு தங்களது ஆட்களை அலர்ட் செய்வதற்காக சென்று விட்டான்.

தனக்கு இப்போதுதான் திருமணம் ஆகி இருக்கிறது என்பதால்,

இப்போது தன் மனைவியாக இந்த வீட்டிற்கு வந்திருக்கும் தேன்மொழிக்காகவாவது தன்னை தான் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கடமை தனக்கு இருக்கிறது என்று நினைத்த அர்ஜுன்,

நேராக அவனது அறையில் இருந்த ஒரு சீக்ரெட் அறைக்கு சென்று அங்கே இருந்த பாதுகாப்பு கவச உடையை எடுத்து அணிந்து கொண்டான்.

அது அவனை தலை, முதல் கால் வரை துப்பாக்கி தோட்டா முதல் கத்தி வரை அனைத்தில் இருந்தும் பாதுகாக்க கூடியது.

போருக்கு செல்லும் வீரனை போல தயாராகி வெளியில் வந்த அர்ஜூன்,

குழந்தை போல தலையணையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்த தேன் மொழியைக் கண்டான்.

இன்று ஏனோ அவனுக்கு அவளை விட்டு பிரிய மனம் வரவே இல்லை.

இருப்பினும் கடமை வா வா என்று அழைக்கும் போது, பொறுப்பில் இருக்கும் அவன் அதை சென்று செய்து தானே ஆக வேண்டும்!

அதனால் அவள் அருகில் சென்று அவளது நெற்றியில் பட்டும் படாமல் ஒரு முத்தத்தை வைத்து,

“எனக்காக வெயிட் பண்ணிட்டு இரு.

உனக்காக நான் பத்திரமா வருவேன்.

ஐ லவ் யூ டி ஹனி பேபி” என்று அவள் காதோரம் மென் குரலில் கிசுகிசுத்து விட்டு வேக எட்டுகள் வைத்து கையில் ஒரு பெரிய machine gun உடன் தன் அறையை விட்டு வெளியேறினான் அர்ஜுன்.

பின் வழக்கம்போல கிளாரா, பிரிட்டோ, அர்ஜுன் அவர்களது பாதுகாப்பிற்காக சில பாடிகார்டுகள் என அனைவரும் சேர்ந்து வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியாமல் பின் வாசல் வழியாக அந்த அரண்மனையை விட்டு வெளியேறினார்கள்.

காரை கிளீன் செய்வதற்காக அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்த மகேஷின் கண்களில் கும்பலாக இவர்கள் வித்யாசமான கவச உடையை அணிந்து கொண்டு கைகளில் துப்பாக்கியுடன் செல்வது பட்டது.

அர்ஜுனை பற்றி ஓரளவிற்கு அவனுக்கு தெரியும் தான்.

ஆனால் அவனுக்கு தெரிந்ததை விட அர்ஜுனிடம் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்ட மகேஷ்,

“இதே மாதிரி எங்கயோ ஒரு மிஷனுக்கு போய் தானே பிரச்சனை நடந்து சியா மேடம் இறந்து போனாங்க!

இவர் ஏன் கோமாவுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்புறம் கூட திருந்த மாட்டேங்குறாரு?

இவரை நம்பி அங்க ஒருத்தி இருக்காளேன்னு இவருக்கு தோணவே தோணாதா?

இவர் கிட்ட என்ன கொறச்சலா இருக்குன்னு இந்த தேவையில்லாத வேலைய எல்லாம் இவர் பார்க்கிறாரோ தெரியல..!!”

என்று நினைத்து அர்ஜுனுக்கு தவறாக ஏதேனும் ஆனால், தேன்மொழியின் நிலை என்னவாகும்? என்று யோசித்து அவளுக்காக வருத்தப்பட்டான்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-53
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.