மஞ்சம்-52

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
மகேஷிடம் பேசிவிட்டு தங்களது ரூமை நோக்கி மீண்டும் நடக்க தொடங்கிய தேன்மொழி,

“இத்தனை நாளா தினமும் நான் அவர் பக்கத்துல தான் படுத்து தூங்கிட்டு இருந்தேன்.

அதனால எதுவும் எனக்கு புதுசா தெரியல.

பட் இன்னைக்கு எங்களுக்கு ஆபீஸியலா மேரேஜ் ஆகியிருக்கு.

ஃபர்ஸ்ட் நைட் வேற அரேஞ்ச் பண்ணி இருக்கிறதா அத்தை சொன்னாங்க.

சோ உள்ள அவர் என்ன மைன்ட்‌‌ செட்டுல இருக்காருன்னு தெரியலையே!” என்று நினைத்து கொஞ்சம் தயங்க,

“நீதான் முழு மனசா அர்ஜுன உன் ஹஸ்பண்டா ஏத்துக்கிட்டயே!

உன்ன பெத்த அம்மா அவர குறை சொல்றத கூட உன்னால ஏத்துக்க முடியல.

அந்த அளவுக்கு உன் மனசுல அவர்தான் இருக்காரு.

அப்புறம் அவர் கூட சேர்ந்து வாழ்றதுல உனக்கு என்ன பிரச்சனை?” என்று சரியாக அவளிடம் கேள்வி கேட்டது அவள் மனசாட்சி.

அதனால் ஒரு நொடி நின்ற தேன்மொழி “ஆமா, அதுவும் கரெக்ட் தானே!

எனக்கு அவர புடிச்சிருக்கு. நான் அவர் கூட சேர்ந்து வாழறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.‌

எல்லார் முன்னாடியும் அவரை என் ஹஸ்பண்டா ஏத்துக்கிட்டேன்..

அப்புறம் அவர் கூட சேர்ந்து வாழ்றதுல என்ன பிரச்சனை இருக்கப்போகுது?

ஆனா இன்னும் அவர் மனசுல சியா இருக்காங்களா இல்லையான்னு தான் தெரியல.

என்ன இருந்தாலும் அவங்களும் அவரோட லைஃப் தானே!

அவங்கள மறந்துட்டு நம்மள மட்டுமே நினைச்சு அவர் நம்ம கூட வாழனும்னு நம்ம எதிர்பார்க்கிறதும் சரியா இருக்காது.

என்ன நடக்குமோ நடக்கட்டும் பாத்துக்கலாம்!" என்று தனக்குள் சொல்லிக் கொண்ட தேன்மொழி தன் தைரியங்கள் அனைத்தையும் திரட்டிக் கொண்டு தங்களது அறை கதவை திறந்து உள்ளே சென்றாள்.

அவள் கதவை திறக்கும்போது உள்ளே மை இருட்டாக இருந்தது.

அதனால் பயந்துப்போன தேன்மொழி “என்னமோ நிறைய டெக்ரேட் பண்ணி இருக்கிறதா சொன்னாங்க!

ஆனா இங்க என்ன லைட் கூட போடாம இருக்காங்க?” என்று முனுமுனுத்தவாறு,

“அர்ஜுன்... அர்ஜுன்.. நீங்க உள்ள தான் இருக்கீங்களா?” என்று கேட்டபடி இரண்டடி வைத்து உள்ளே சென்றாள்.

அப்போது அந்த கதவு படார் என்று சாற்றிக் கொள்ள,

அந்த சத்தம் கேட்டு பயந்துப்போன தேன்மொழி தன் காதுகள் இரண்டையும் மூடிக் கொண்டு “ஐயோ அம்மா பேய்! என்னை யாராவது காப்பாத்துங்க ப்ளீஸ்." என்று அலறினாள்.

அங்கே கருகும்மென்று இருந்ததால் பயத்தில் அவள் உடல் நடுங்கியது.

அவளுக்கு பொதுவாகவே இருட்டு என்றால் பயம். இதில் அந்த இடத்தில் வேறு ஏதோ விசித்திரமான சத்தங்கள் எல்லாம் கேட்டு அவளை இன்னும் பயமுறுத்தியது.

அதனால் அப்படியே தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு தரையில் அமர்ந்து கொண்ட தேன்மொழி தன் காதுகளில் இருந்து கைகளை எடுக்காமல்,

“அர்ஜுன்.. நீங்க இங்க தானே இருக்கீங்க!

எனக்கு தெரியும், இப்படி எல்லாம் விளையாடாதீங்க ப்ளீஸ்!

எனக்கு இருட்டுன்னா ரொம்ப பயம்.

நான் பேய் படம் கூட தனியா பார்க்க மாட்டேன்.

இப்ப பேய் வர்ற மாதிரி எதுக்கு என்ன பயமுறுத்தி பாக்குறீங்க?

ப்ளீஸ் அர்ஜுன் லைட்டை போடுங்க!" என்று பதட்டமான குரலில் கலங்கிய கண்களோடு சொல்லிக் கொண்டிருந்தாள்‌.

அப்போது யாரோ பலமாக கைத்தட்டும் சத்தம் கேட்க, அங்கிருந்த லைட்டுகள் அனைத்தும் எளிய தொடங்கி அந்த இடம் பிரகாசமானது.

அப்போது பலூன் வெடிப்பதை போல மற்றொரு சத்தமும் கேட்க, தேன்மொழியின் மீது ரோஜா பூ இதழ்கள் மழையாக கொட்டத் தொடங்கியது.

‌ அதனால் தன் கண்களை திறந்து அண்ணாந்து மேலே பார்த்த தேன்மொழி கொஞ்சம் நிதானம் பெற்று மேலே பார்த்தபடி எழுந்து நின்றாள்.

அப்போது பின்னே இருந்து வந்து அவளை அணைத்துக் கொண்டு அப்படியே அவளை தூக்கி சுற்றிய அர்ஜுன்,

“welcome to our room my dear wife!” என்று உற்சாகமான குரலில் சொன்னான்.

அதை எதிர்பார்த்து இருக்காத தேன்மொழிக்கு இப்போதும் பதட்டமாகவே இருக்க,

அவன் தன்னை தூக்கி வேகமாக சுற்றியதால் வேறு அவளுக்கு மயக்கம் வருவதைப் போல இருந்ததால்,

“ஐயோ அர்ஜுன் போதும் விடுங்க!

எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கு!” என்று அவள் சொல்ல,

அவளை தூக்கி சுற்றுவதை நிறுத்திவிட்டு நின்ற அர்ஜுன்,

“தூக்கி சுத்தி டைம் வேஸ்ட் பண்ணதெல்லாம் போதும்.

டைரக்டா வந்த வேலைய பாக்கலாம்னு சொல்றியா ஹனி பேபி?” என்று கேட்டுவிட்டு அவளை பார்த்து கண்ணடித்தான்.

அதனால் வெட்கத்தில் அவள் முகம் சிவந்து விட, “ச்சீ.. போங்க! நான் அப்படியெல்லாம் ஒன்னும் சொல்லவே இல்ல.

நீங்களா அடிச்சி விடாதீங்க!" என்று தேன்மொழி சொல்ல, அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டு கட்டிலின் அருகே சென்ற அர்ஜுன் அவளை அங்கே படுக்க வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்தான்.

அடுத்து என்ன நடக்குமோ என்று நினைத்து பயந்த தேன்மொழி “சினிமால எல்லாம் இந்த மாதிரி ஃபர்ஸ்ட் நைட் சீன் வந்தா அங்க ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் இரண்டு பேரும் பால் குடிப்பாங்களே!” என்று இழுக்க,

“மத்தவங்களும் இந்த அர்ஜுனும் ஒரே மாதிரியே பண்ணா நல்லா இருக்குமா?

அதான் நான் உனக்கு ஒரு ஸ்பெஷல் ஐட்டம் வெச்சிருக்கேன்.

இங்க பாரு.. இது உனக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்.

அதான் இந்தியால இருந்து இதை வர வச்சுருக்கேன்.” என்ற அர்ஜுன் அங்கே அருகில் இருந்த டேபிளில் முடி வைக்கப்பட்டிருந்த தட்டை எடுத்து அவள் முன்னே நீட்டி அதிலிருந்த தேன்மிட்டாய் ஒன்றை எடுத்து அவள் வாயில் வைத்தான்.

அதை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்ட தேன்மொழி “பார்றா.. தேன் முட்டாயா?

எனக்கு இது ரொம்ப பிடிக்கும்ங்க.” என்று சொல்லிவிட்டு அவள் அதை சாப்பிட தொடங்கி விட,

அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தை நோக்கி குனிந்த அர்ஜுன்,

“ஓய் இந்த தேன் மிட்டாய் எவ்வளவு ஸ்பெஷல்னு நான் ஃபீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்..

நீ என்ன இதை ஈஸியா அப்படியே எடுத்து சாப்பிட்டுட்டு இருக்க?

இதை சாப்பிடுறதுக்கு எல்லாம் நிறைய ரூல்ஸ் இருக்கு.

‌ நீ அதை எல்லாம் கரெக்டா ஃபாலோ பண்ணாம தேன்மொழியின்னு வேற பெயர் வச்சுக்கிட்டு இப்படி தேன் மிட்டாய அசிங்கப்படுத்தலாமா?

இரு, நானே உனக்கு சொல்லிக் கொடுக்கிறேன்!” என்றான்.

அவன் தன் அருகில் வர வர அவளுக்கு ஹார்ட் பீட் எகிறியது.

அதனால் தன் வாயில் இருந்த தேன் மிட்டாயை அவள் அவசரமாக மென்று விழுங்க,

அங்கே இருந்ததிலேயே பெரிய தேன்மிட்டாய் ஒன்றை எடுத்து அவள் வாயில் வைத்த அர்ஜுன் அவள் அதை லேசாக கடித்த பிறகு,

தன் இதழ்களை அதன் மீது பொருத்தி தானும் அவளுடன் சேர்ந்து அந்த தேன்மிட்டாயை கடித்து சுவைக்க தொடங்கினான்.

அவர்கள் இதழ்கள் இரண்டும் சங்கமித்துக்கொள்ள, அவர்களது வாய்க்குள் உருகி கரைந்த தேன்மிட்டாயில் இருந்து தேன் அவளது இதழ்கள் ஓரம் ஒழுகி வர,

அதை தன் நாவால் வேஸ்ட் செய்யாமல் சுவைத்து மகிழ்ந்தான் அர்ஜுன்.

அவனது இதழ் அமுதங்களின் சுவையோடு தேனில் ஊறிய ஒரிஜினல் தேன்மிட்டாயை தன்னவனின் அருகாமையில் மெல்ல ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்த தேன்மொழிக்கு,

அவள் வாழ்வில் இதுவரை சாப்பிட்ட தேன்மிட்டாய்களில் இதுதான் சுவையானது மற்றும் சிறந்தது என்று தோன்றியது.

அர்ஜுன் பெரும்பாலும் ஸ்வீட்ஸ் அதிகமாக சாப்பிட மாட்டான்.

ஆனால் அவளது இதழ் தேனில் நன்றாக ஊறி இருந்த தேன் மிட்டாயை சாப்பிடுவதை அவனால் நிறுத்தவே முடியவில்லை.

அதனால் கணக்கின்றி அவன் சாப்பிட்டு கொண்டே செல்ல,

இடையிடையில் அவனது கைகள் தன் மீது செய்யும் மாயாஜாலங்கள் கொடுக்கும் கிறக்கத்தையும்,

அவன் இதழ்கள் தன் இதழ்களோடு இணைந்து செய்யும் மாயைகளை அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்துப்போன தேன்மொழி அவன் கையைப் பிடித்து,

“போதும் போதும். நான் நிறைய சாப்பிட்டுட்டேன். எனக்கு வேண்டாம்.

உங்களுக்கு வேணும்னா இந்த பிளேட்டை எடுத்துட்டு போய் சோஃபாவுல உக்காந்து சாப்பிட்டுட்டு அப்புறமா வந்து படுத்து தூங்குங்க.

எனக்கு தூக்கம் வருது, நான் தூங்குறேன்.” என்று சொல்லிவிட்டு தன் முகத்தை திருப்பி கொண்டாள்.

ஆனால் அவன் தனது மொத்த உடலையும் அவள் மீது போட்டுக் கொண்டு படுத்திருந்ததால்,

அவளால் அவளே நினைத்தாலும் வேறு புறமாக திரும்பிப் படுக்க முடியவில்லை.

அதனால் பெருமூச்சு விட்ட தேன்மொழி, “ஏங்க!” என்று இழுக்க,

இது மாதிரி எல்லாம் சியா அவனிடம் மரியாதையுடன் பேசியது இல்லை என்பதால் அவள் அப்படி அழைப்பது அவனுக்கு விசித்திரமாக தெரிய,

“என்னடி! இப்ப போய் ஏங்க நோங்கனு பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்க!” என்று கிரகத்துடன் சொன்ன அர்ஜுன் அவளது கழுத்து வளைவில் முத்தமிட்டு கொண்டிருந்தான்.

இப்படி அவன் தன் வேலையில் கவனமாக இருந்து அதை செய்ய தொடங்கிய பிறகு,

பாவம் அவளால் எப்படி வாய் திறந்து பேச முடியும்?

கூச்சத்திலும், வெட்டத்திலும் அவன் முகத்தை அமைதியாக திரும்பி பார்த்தாள் அவள்.

அவனது காது மாடல்கள் பிங்க் நிறத்தில் இருக்க,

அவன் கோமாவில் இருக்கும்போது இதே போல அவன் அருகில் படுத்துக் கொண்டு அவனது முக அம்சங்களை பார்த்து அவள் ரசித்தது எல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது.

கூடவே அவள் இங்கே கடத்தி வரப்பட்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் பரிதவித்துக் கொண்டு இருக்கும்போது,

விடிய விடிய அழுது தீர்த்த நாட்கள் எல்லாம் இப்போது அவளுக்கு ஞாபகம் வர,

திடீரென சோகத்தால் அவள் இதயம் பாரமானது.

அவளது சோகங்கள் அனைத்தும் இப்போது சுகமாக மாறிவிட்டிருந்தாலும்,

இந்த அர்ஜுன் தன்னை எவ்வளவு அழ வைத்திருக்கிறான்? எப்படி ஈசியாக இவனுக்கு மட்டும் அனைத்தும் கிடைத்துவிடலாம்? என்று அவளிடம் கேள்வி கேட்டது அவள் மூளை.

உடனே “அதானே இவன் மட்டும் என்னை எப்படி எல்லாம் கதற விட்டான்!

ஆனா இவனுக்கு மட்டும் புடிச்ச மாதிரி எல்லாமே கரெக்டா நடக்கணுமா?

ஆக மொத்தம் முன்னாடில இருந்து இப்ப வரைக்கும் எல்லாத்தையுமே இவன் இவனுக்கு புடிச்ச மாதிரி தான் செய்றான்.

இல்ல விடக்கூடாது இந்த விஷயத்துலயாவது. நம்ம இவனை லாக் பண்ணி வைக்கணும்.

இவன கொஞ்ச நாள் காய விடனும்.

அப்பதான் இவனுக்கு நம்ம அருமை தெரியும்.” என்று நினைத்த தேன்மொழி உடனே அவனது தோள்களில் கை வைத்து அவனை தன்னை விட்டு விளக்கி தள்ளி,

“இப்ப இதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.

எனக்கு நம்ம ரொம்ப அவசரப்படுறமோன்னு தோணுது.

எனக்கு உங்களை புரிச்சுக்கிட்டு லவ் பண்றதுக்கு நிறைய டைம் வேணும்.

சோ இதையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.” என்று அவனைப் பார்த்து முறைத்தபடி சொன்னாள்.

ஆனால் ஏற்கனவே அவன் முதல் படியில் இருந்து இரண்டாவது படிக்கு செல்லும் ஆர்வத்தில் இருக்க,

அவனது ஆண்மையின் தாகம் அவன் உடலை நொடிக்கு நொடி சூடேற்றிக் கொண்டு இருந்தது.

இத்தனை அருகாமையில் அவளை வைத்துக் கொண்டு இவளிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருப்பதை எல்லாம் சத்தியமாக அவன் விரும்பவில்லை.

தன்னைப் பிடித்து தள்ளிய அவளது கைகள் இரண்டையும் பிடித்து அவள் தலைக்கு மேலே உயர்த்தி இறுக்கமாக‌ பிடித்து தனது ஒற்றை கையில் அடக்கிய அர்ஜுன்,

“நீ அப்புறமா எப்ப வேணாலும் எத வேணாலும் பொறுமையா எவ்ளோ நேரம் வேணாலும் பார்த்துட்டு இரு.

பட் என்னால அதுவரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்க முடியாது டி.

ஆல்ரெடி எனக்கு வயசாயிடுச்சு. எனக்கு இந்த லைஃப்ல பேலன்ஸ் இருக்கிற ஒவ்வொரு செகண்டையும் நான் உன் கூட சேர்ந்து என்ஜாய் பண்ணனும்னு நினைக்கிறேன்.

சோ உன் ரெக்குவஸ்ட்டை நான் ரிஜெக்ட் பண்றேன்.

உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லைனா நீ எதுவும் பண்ண வேண்டாம். அப்படியே அமைதியா இரு.

இன்னும் கரெக்டா 5 மினிட்ஸ்ல உனக்கே தானா இன்ட்ரஸ்ட் வரும்.

நீ எனக்கு cooperate பண்ணா மட்டும் போதும். மத்தது எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்.. என் ஹனி பேபி.” என்று ஹஸ்கி வாய்ஸில் சொன்ன அர்ஜுன் அவளது கன்னங்களை இறுக்கிப்பிடித்து அங்கே நச்சென்று ஒரு முத்தத்தை கொடுத்துவிட்டு தன் வேலையை பார்க்கத் தொடங்கினான்.

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தேன்மொழி அணிந்திருந்த அழகிய ப்ளூ நிற கவுன் இரண்டாக கிழிக்கப்பட்டு ஒரு பக்கம் தரையில் கிடக்க,

அவன் சொன்னதை போலவே தனது அச்சம், மடம், நாணம், உள்ளுக்குள் அவன் மீது இருந்த குட்டி கோபம் என அனைத்தையும் மறந்து விட்டு அவனுடன் மனதார இரண்டற கழக்கத் தொடங்கி இருந்தாள் தேன்மொழி.

அவர்களது இனிமையான முனகல் சத்தங்கள் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது.

அவளது தலை முதல் கால் வரை தனது சின்னங்களை பதித்த அர்ஜுன் ‌ அவளை முத்தாடி மோகத்தில் திழைக்க வைத்து மெல்ல தன் வசப்படுத்திக் கொண்டிருந்தான்.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-52
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.