மஞ்சம் 120

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
ஹாய் டியர்ஸ்..

ரெண்டு நாளா நான் அமேசான்காக ஒரு ஸ்டோரி இராப்பகலா எழுதிட்டு இருந்தேன். அதான் என்னால இங்க எழுத முடியல. அமேசான் கிண்டல் சப்ரிப்ஷன் வச்சிருக்கவங்க “தேனருவி தமிழ் நாவல்ஸ்” என்று அமேசான்ல சர்ச் பண்ணி நம்மளோட நாவல்களை படிச்சு பாருங்க. புதுசா “அவர்களது திருமணம் முதல் காதல் வரை” என்ற நாவலை பதிவிட்டுள்ளேன். ப்ரொபசர் அண்ட் ஸ்டூடன்ட் லவ் ஸ்டோரி ♥️ அதையும் மிஸ் பண்ணாம படிச்சு பாருங்க.

நன்றி 🙏

அத்தியாயம் 120

டாக்டர் தேன்மொழி கர்ப்பமாக இருப்பதாக சொன்னதைக் கேட்டு காலில் இருந்த அர்ஜுன், ஜானகி, அவளுடன் வந்திருந்த லிண்டா என அனைவரும் மகிழ்ந்தார்கள்.

“தேன்மொழிக்கும் எனக்கும் ஒரு குழந்தை பிறந்த நல்லா இருக்கும்னு எங்களுக்கு மேரேஜ் ஆனதுல இருந்து நான் நினைச்சுட்டு இருக்கேன். இப்பதான் அந்த நல்ல விஷயம் நடந்திருக்கு. இத கேள்விப்பட்டதுக்கு அப்புறமா எனக்கு இப்பவே போய் அவளை பார்க்கணும்னு தோணுது. ஆனா ஜூலி இந்த நிலைமையில் இருக்கும்போது நான் இவள விட்டுட்டு எப்படி செல்ஃப்பிஷா என்னையும், என் ஃபேமிலியையும் பத்தி மட்டும் யோசிக்க முடியும்?” என்று நினைத்த அர்ஜுன்,

“இந்த ஹாப்பி நியூசை கேள்விப்பட்டதுல எனக்கு ரொம்ப சந்தோஷம் டாக்டர். பட் அதை ப்ராப்பரா எக்ஸ்பிரஸ் பண்ண முடியாத சுச்சுவேஷன்ல நான் இருக்கேன்.

இதை சொன்ன உங்களுக்காக என் ஃபேமிலி சார்பாக கண்டிப்பா நாங்க உங்களுக்கு ஸ்பெஷலா ஏதாவது பண்ணுவோம். நான் அங்க வர்ற வரைக்கும் ப்ளீஸ் தேன்மொழி கூட இருந்து அவளை பத்திரமா பாத்துக்கோங்க. டீடைலா அவளோட ஹெல்த் கண்டிஷனை பத்தி நான் நேர்ல வந்து உங்க கிட்ட பேசுறேன். Thanks for telling me about this!” என்றான்.

“you no need to thank me for this Mr Arjun Pratap. It's my duty. தேன்மொழி எதையோ பார்த்து பயந்துருக்காங்கன்னு நினைக்கிறேன். அந்த ஷாக்ல தான் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க. ஒருவேளை அவங்க ரொம்ப பலவீனமா இருந்தாங்கன்னா, திடீர்னு ஸ்ட்ரெஸ் ஆனாங்கன்னா இந்த மயக்கம் நாளைக்கு panic அட்டாக்கா மாறுதத்துக்கு கூட சான்ஸ் இருக்கு.

நீங்க அவங்களை எவ்வளவு பத்திரமா பாத்துக்க முடியுமோ அவ்வளவு பத்திரமா பாத்துக்கோங்க. உங்க எல்லாரோட அன்பும் ஆதரவும் தான் இப்ப அவங்களுக்கு தேவைப்படுது. நீங்க தேன்மொழியை டிஸ்டார்ஜ் பண்ணும்போது இங்க வருந்திங்கனா, அவங்களுக்கு என்ன மாதிரி ஃபுட் கொடுக்கணும், ஸ்பெஷலா அவங்களை எப்படி கேர் பண்ணனும்னு நான் உங்களுக்கு கிளியரா சொல்றேன்.” என்று டாக்டர் செல்ல, “ஓகே டாக்டர்!” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான் அர்ஜுன்.

இந்த நல்ல செய்தியை முதலில் விஜயாவிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்த ஜானகி டாக்டருக்கு நன்றி சொல்லி தனது கழுத்தில் இருந்த 10 சவரன் கொண்ட தங்க மாலையை கழட்டி டாக்டரிடம் கொடுத்துவிட்டு அவரது ரூமில் இருந்து லிண்டாவுடன் வெளியே வந்தாள்.

தேன்மொழி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கேட்டு பிரதாப் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். சித்தார்த், ஆருத்ரா கூட தங்களுக்கு இன்னொரு குட்டி தம்பியோ தங்கையோ வரப் போகிறார்கள் என நினைத்து உற்சாகத்தில் துள்ளி குதித்து ஹாஸ்பிடலுக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் உதயாவின் முகம் மட்டும் அந்த செய்தியை கேட்டு சுருங்கிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் இப்படி ஒரு விஷயம் நடக்கும் என்று அவன் துளியும் எதிர்பார்த்து இருக்கவில்லை. இருப்பினும் “தான் இந்த செகண்ட் வரைக்கும் உன்ன லவ் பண்ணிட்டு தான் இருக்கேன் தேன்மொழி. எனக்கு தெரிஞ்சு நான் சாகுற வரைக்கும் என்னால உன்னை லவ் பண்ணாம இருக்க முடியாது.

எதுக்காக எனக்கு உன் மேல இந்த அளவுக்கு லவ் வந்துச்சுன்னு தெரியல. நீ உனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடி போயிட்ட. முழுசா இந்த வாழ்க்கையில நீ சந்தோஷமா இருக்கியான்னு எனக்கு தெரியல‌. ஆனா ஒருவேளை நீ நிஜமாவே ஹாப்பியா இருந்தா, உனக்காக கண்டிப்பா நானும் சந்தோஷப்படுவேன்.” என்று நினைத்துக் கொண்டான்.

சர்ச்சில் என்ன நடந்தது என்று கண்டுபிடிப்பதற்காக சென்று இருந்த பிரிட்டோவும், ஆகாசம் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து யாரும் எந்த ஆதாரத்தையும் அழித்துவிடக் கூடாது என்பதற்காக ஏற்கனவே தங்களுடைய ஆட்களை அங்கே அனுப்பி அந்த இடத்தை சுற்றி வளைக்க சொல்லி இருந்தார்கள். அவர்கள் அங்கே சென்று சேர்ந்த பிறகு, அந்த சாண்டலியர் விளக்கு மேலே இருந்து எப்படி கீழே விழுந்தது? அதற்கு காரணம் அதனுடைய தரத்தில் ஏதேனும் குறைவு இருந்ததா? இல்லை என்றால் யாரேனும் திட்டமிட்டு செய்திருக்கிறார்களா என்று முதலில் அந்த விளக்கை தான் அவர்கள் ஆராய்ந்தார்கள்.

பின் அங்கே இருந்த சிசிடிவி கேமராவில் ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று அவர்கள் எவ்வளவோ அலசி பார்த்தார்கள். ஆனால் எதையும் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. பின் அங்கே இருந்தவர்களை அழைத்து இதைப் பற்றி விசாரித்து பார்த்தார்கள். அப்போதும் அவர்களால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

“என்ன டா நம்ம இவ்ளோ சீக்கிரம் வந்து இருந்திருந்ம் நம்மளால எதையுமே கண்டுபிடிக்க முடியலையே!” என்று சோகமாக ஆகாஷ் சொல்ல, “அது எப்படின்னு தான் தெரியாம நானும் யோசிச்சிட்டு இருக்கேன் பாஸ். உள்ள யாரையும் விடவும் கூடாது. இங்க இருக்கிறவங்க நம்ம வர்ற வரைக்கும் வெளியே போகவும் கூடாதுன்னு நம்ம ஆளுங்களை வைத்து புல்லா நம்ம கண்ட்ரோலுக்கு இந்த டோட்டல் சரவுண்டிங்கையும் எடுத்தாச்சு.

அப்படி இருக்கும்போது, இத பண்ணிட்டு யாரும் வெளியே தப்பிச்சு போயிருக்க முடியாது. ஆனா இத பண்ணவன் எப்படி நம்மகிட்ட அப்படி இருந்து மாட்ட மாட்டேங்குறான்னு தான் எனக்கு தெரியல.” என்றான் பிரிட்டோ.

“அப்போ இதை பண்ணவன் நம்ம கண்ணு முன்னாடியே தான் இருக்கான். அவன் யாருன்னு தான் நமக்கு தெரிய மாட்டேங்குது. ஒருவேளை நம்ம சந்தேகப்பட முடியாத இடத்துல அவன் இருக்கலாம். எனக்கு என்னமோ ஏதோ சரி இல்லைன்னு தோணுது. இதை என்னால சாதாரணமா எடுத்துக்க முடியல.” என்று ஆகாஷ் செல்ல, “விடுங்க பாஸ் யாரா இருந்தாலும் நம்ம கிட்ட இருந்து தப்பிக்க முடியாது. இனிமே நம்ம செக்யூரிட்டில இன்னும் கொஞ்சம் focused-ஆ இருக்கணும். ஒருவேளை நம்மள ஏதாவது பண்ணனும்னு யாராவது நினைச்சா கூட அதுக்கான ஆப்பர்சூனிட்டிய நம்ம கொடுக்கக் கூடாது.” என்றான் பிரிட்டோ.

“அதுவும் கரெக்ட் தான்! சரி வா இதுக்கு மேல இங்க இருந்து என்ன பண்றது? அங்க அர்ஜுன் ஹாஸ்பிடல்ல தனியா இருப்பான். ஜூலிக்கு வேற என்ன ஆச்சுன்னு தெரியல.” என்ற ஆகாஷ் அர்ஜூனை பார்ப்பதற்காக ஜூலியை அட்மிட் செய்திருக்கும் ஹாஸ்பிடலுக்கு பிரிட்டோ உடன் காரில் சென்று கொண்டிருந்தான். அப்போது அவனுக்கு கால் செய்த லிண்டா தேன்மொழி கர்ப்பமாக இருப்பதை பற்றி சொன்னதால் உடனே அவளை பார்ப்பதற்காக அவள் அட்மிட் ஆகி இருக்கும் ஹாஸ்பிடலில் அட்ரஸை கேட்டுவிட்டு அங்கே சென்றான்.

தேன்மொழிக்கு இன்னும் மயக்கம் தெளியவில்லை. அதனால் அர்ஜுன் இருக்கு கால் செய்து “கங்க்ராஜுலேஷன்ஸ் அர்ஜுன்! இந்த வயசுல இன்னொரு குழந்தைக்கு அப்பா ஆகிட்ட!” என்று கிண்டலாக சொன்னான் ஆகாஷ். “நீ எனக்கு congratulations சொல்றதுக்கு கால் பண்ணியா இல்ல என் ஏஜை பத்தி சொல்லி என்னை வெறுப்பேத்துறத்துக்கு கால் பண்ணியா?” என்று அர்ஜுன் கடுப்பாகி கேட்க, “டேய் நெஜமாவே நான் உனக்கு கங்கிராஜுலேசன்ஸ் சொல்றதுக்கு தான் கால் பண்ணேன். இந்த வயசுலயும் ஸ்ட்ராங்கா இருந்து இன்னொரு குழந்தைக்கு அப்பாக்குறது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா? நீ பெரிய ஆளுடா அர்ஜூன்!” என்று வேண்டுமென்றே அவனை வெறுப்பேற்றுவதற்காக சொல்லிவிட்டு சிரித்தான் ஆகாஷ்.

“டேய் நீ ஒன்னும் சொல்லி கிழிக்க வேண்டாம். மூடிட்டு ஃபோன வை டா.” என்று அர்ஜுன் சொல்ல, “என்ன பிரதர் ஹேப்பியா இருக்க வேண்டிய டைம்ல இப்படி டென்ஷன் ஆகிட்டு இருக்கீங்க? தேன்மொழி அண்ணிக்கு இன்னும் மயக்கம் தெளியல. நான் அவங்கள பார்க்கறதுக்கு ஹாஸ்பிடல் வந்து இருக்கேன். அதான் கால் பண்ணேன். ஜூலிக்கு என்னாச்சு? அவளைப் பத்தி டாக்டர் ஏதாவது சொன்னாங்களா?” என்று கேட்டான் ஆகாஷ்.

“பெருசா எதுவும் சொல்லல டா. ரொம்ப நேரமா ஐசியூல வச்சு அவளுக்கு ட்ரீட்மென்ட் பண்ணிட்டு இருக்காங்க. இப்ப ஒரு டாக்டர் வந்தாரு. அவ உயிருக்கு ஆபத்து இல்ல. பிளட் லாஸ் நிறைய ஆகியிருக்கு. எப்படியும் அவங்களுக்கு சரியாகறதுக்கு ரெண்டு மாசம் ஆகும். நாங்க அவங்களுக்கு stitches போட்டுட்டு இருக்கோம். அவங்கள எப்ப டிஸ்டார்ஜ் பண்றது, அவங்களோட கண்டிஷன் எப்படி இருக்குன்னு எல்லாம் சொல்றதுக்கு இன்னொரு 4, 5 மணி நேரம் ஆகும்னு சொல்லிட்டாங்க.” என்று அர்ஜுன் சலீப்புடன் சொல்ல, “அவ்ளோ நேரம் ஆகுமா? அப்ப அதுவரைக்கும் நீ அங்க தான் இருக்க போறியா? இங்க அன்னியை பாக்குறதுக்கு ஹாஸ்பிடல் வரலையா நீ? மறுபடியும் அவங்க எதுக்காகவும் ஷாக்காக கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்களாம். அவங்களுக்கு மயக்கம் தெளியும்போது நீ இங்க அவங்க கூட இருக்க வேண்டாமா அர்ஜுன்.. அவங்க உன்னை தானே தேடுவாங்க!” என்று அக்கறையுடன் கேட்டான் ஆகாஷ்.

“ஆமா ஆகாஷ். எனக்கும் அங்க வந்து அவளை பாக்கணும் போல இருக்கு. அதுக்காக எனக்கு இப்படியே ஜூலியை விட்டுட்டு போகவும் மனசு வரல. நான் என்ன பண்றது நீயே சொல்லு?” என்று அர்ஜுன் கேட்க, அப்போது தேன்மொழிக்கு மயக்கம் தெளிந்து விட்டதாக நர்ஸ் ஒருத்தி வெளியில் வந்து சொன்னதால் அனைவரும் அவளை பார்க்க சென்று கொண்டு இருப்பதை கவனித்த ஆகாஷ், “அண்ணிக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சுன்னு நினைக்கிறேன். நான் போய் அவங்க எப்படி இருக்காங்கன்னு பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அந்த அழைப்பை துண்டித்தான்.

கன் விழித்தவுடன் ஒருவித பதட்டுத்துடன் திடிக்கிட்டு எழுந்து அமர்ந்த தேன்மொழி அர்ஜுனை தான் பதட்டமான முகத்துடன் சுற்றி மூன்றை தேடினாள்‌. அதை உணர்ந்த லிண்டா அவள் அருகில் அமர்ந்து கொண்டு “அர்ஜுன் ப்ரோ நல்லா தான் இருக்காரு. நீங்க டென்ஷன் ஆகாதீங்க. அவர் ஜூலி கூட ஹாஸ்பிடல்ல இருக்காரு.” என்றாள்.

இருந்த சந்தோஷத்தில் தன் மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழுத விஜயா பின் அவளது கன்னங்களை தனது இரு கைகளிலும் ஏந்திக் கொண்டு “மாப்பிள்ளைக்கு என்ன ஆகுமோனு நாங்க எல்லாரும் பதட்டத்துல இருந்த நேரத்துல இப்படி ஒரு சந்தோஷமான விஷயம் நடக்கும்னு நான் கொஞ்சம் கூட நினைக்கல டி. இந்த நேரத்துல மாப்பிள்ளையும் உன் கூட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும். எப்படியோ உங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகாம நீங்க நல்லா இருக்கீங்க. எனக்கு அதுவே போதும்.” என்றாள்.

“அம்மா எதுக்காக சம்பந்தம் இல்லாம இப்படி எல்லாம் பேசிட்டு இருக்காங்க? இப்ப இவங்க சந்தோஷப்படுற மாதிரி என்ன நடந்துச்சு?” என்று யோசித்து குழம்பிய தேன்மொழி எதுவும் புரியாமல் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் சென்று அவளது கையை ஆதரவாக பிடித்துக் கொண்ட ஜானகி “நீ பிரக்னண்டா இருக்க மா தேன்மொழி. டாக்டர் முன்னே செக் பண்ணிட்டு இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கன்ஃபார்ம் பண்ணி சொன்னாங்க. குழந்தையை கூட நாங்க ஸ்கேன்ல பார்த்தோம். ஸ்கேன்டரி போர்ட் கிளாரா கிட்ட இருக்கு.” என்றாள்.

அதைக் கேட்டு ஷாக் ஆன தேன்மொழி “நான் பிரக்னண்டா இருக்கேனா?” என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டு அவளுடைய வயிற்றில் கை வைத்துப் பார்த்தாள். சந்தோஷத்தில் அவள் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகியது. இந்த மகிழ்ச்சியை அர்ஜூனுடன் இப்போதே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அவளுக்கு ஆசையாக இருந்தது. ஆனால் அவன் இங்கே இல்லாததால், “நான் இப்பவே அர்ஜுன் பார்க்கணும். ப்ளீஸ் என்ன கூட்டிட்டு போங்க அத்தை!“ என்று ஜானகியின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டாள் தேன்மொழி.

நடக்கும் அனைத்தையும் ஒரு ஓரமாக தனது குழந்தையை கையில் வைத்துக் கொண்டு பார்த்தபடி ஜனனியுடன் நின்று கொண்டு இருந்த சந்தோஷ் “இந்த குழந்தை வந்த நேரம் அர்ஜுனுக்கு லக் அடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். அதான் நாங்க எல்லாமே பக்காவா பிளான் பண்ணியும் அவன் அதுல இருந்து அந்த ஜூலியால எஸ்கேப் ஆயிட்டான். இது ஜஸ்ட் ஸ்டார்டிங் தான். கூடையே இருந்து இன்னும் நான் இந்த குடும்பத்துக்கு என்ன எல்லாம் பண்ண போறேன்னு இவங்க போக போக தெரிஞ்சுப்பாங்க!” என நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

- மீண்டும் வருவாள் 💕

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம் 120
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.