நாயகன்-90

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
அத்தியாயம் 90

அமுதாவை ஹாஸ்பிடலுக்கு காணச் சென்ற விஜய் தன்னையும் அறியாமல் அவளை முத்தமிடத் தொடங்கினான். முதலில் அதில் திகைத்துப் போன அமுதா பின் தன்னை மறந்து தானும் அவனை முத்தமிட தொடங்கினாள். அந்த ஆழ்ந்த இதழ் முத்தம் சில நிமிடங்களை கடந்து செல்ல, அவர்கள் இதழ்கள் நான்கு உரசிக் கொள்ளும் சத்தம் அங்கே அந்த சிறிய அறைக்குள் எதிரொலித்தது.

அவர்கள் இருவரும் அந்த முத்தத்தில் திளைத்து போக தீயில் வெந்து கொண்டு இருக்கும்போது ஏற்கனவே தலையில் அடிபட்டு இருந்ததால் அந்த ஷாக்கில் அமுதா மயங்கி அப்படியே விஜயின் தோள்களில் விழுந்தாள். ஏதோ ஒரு ஃபிளோவில் தன்னை மறந்து அவளை ரொமான்டிக் மோடிக்கு சென்று முத்தமிட்டு கொண்டு இருந்த விஜய் திடீரென்று அவள் தன் மீது அப்படி மயங்கி விழுந்ததால் திடுக்கிட்டு அவள் கன்னத்தில் தட்டி “ஏய் அமுதா.. என்ன டி ஆச்சு? எதுக்கு டி எப்ப பார்த்தாலும் பொசுக்கு பொசுக்குன்னு என்கூட இருக்கும்போது மயங்கி மயங்கி விழுகுற?

பிடிச்சவங்கள பாத்தா ஒரு தடவை ஷாக் ஆகலாம். நீ என்னடி ஒவ்வொரு தடவையும் ஷாக் ஆகி, என் உயிரை வாங்குற! உங்க அண்ணன்காரன் எவனாவது உன்ன பாக்கணும்னு திடீர்னு இங்க வந்தா நான் என்ன சொல்லி சமாளிக்கிறது? அடியேய் அமுதா.. நான் பேசுறது கேக்குதா இல்லையா? கண்ண தொறந்து என்ன பாரு டி.” என்று பதட்டத்துடன் அவளிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தான்.

விஜய் உணர்ச்சிவசப்பட்டு கொஞ்சம் சத்தமாக பேசியதால் ஏதோ பிரச்சனை என நினைத்து பயந்து உள்ளே வந்த நர்ஸ் அமுதா மயக்கத்தில் விஜயின் மீது கிடப்பதை பார்த்துவிட்டு அவசரமாக அவர்கள் அருகில் சென்று “அய்யய்யோ இவங்களுக்கு என்னாச்சு சார்? ஏன் திடீர் மயக்கம் போட்டு விழுந்திருக்காங்க? இங்கே என்ன நடந்துச்சு?” என்று கேட்டுவிட்டு சந்தேகமாக அவனைப் பார்த்தாள்.

“இந்த பொண்ணு என்ன நம்மள இப்படி பாக்குது? விட்டா இவளை போய் நம்மளால தான் எல்லாம் நடந்துச்சுன்னு அமுதாவோட அண்ணன் கிட்ட நம்மள கோத்து விட்டுடுவா போல இருக்கு!” என்று நினைத்த விஜய் “நீங்க இப்ப எதுக்கு என்ன டவுட்டா பாக்குறீங்க? இந்த பொண்ணு நார்மலாவே வீகா தான் இருப்பா. சூட்டிங் ஸ்பாட்டிலேயே ரெண்டு மூணு தடவை மயக்கம் போட்டு விழுந்திருக்கா. இதுல தலையில வேற அடிபட்டு இருக்கு. என்னன்னு தெரியல, நாங்க பேசிட்டு இருக்கும்போது திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டா.” என்று சொல்லிவிட்டு அமுதாவை அப்படியே தன் கைகளில் ஏந்தினான்.

“சார் சீக்கிரம் கொண்டு வந்து இந்த டேபிளில்ல அவங்களை படுக்க வைங்க. நான் போய் தண்ணி கொண்டு வரேன்.” என்று சொல்லிவிட்டு நர்ஸ் செல்ல, அமுதாவை ஓரமாக கிடந்த டேபிளில் படுக்க வைத்த விஜய் அவளுக்கு தன்னால் ஏதேனும் ஆகிவிட்டதோ என்ற பயத்தில் அவள் கையை பிடித்து பல்ஸை செக் செய்து பார்த்தான்.

நல்ல வேலையாக அவளது நாடித்துடிப்பு சீராக இருந்தது. மூச்சும் கூட எந்த பிரச்சனையும் இன்றி வந்து கொண்டிருக்க, அப்போது தான் விஜய்க்கு நிம்மதியாக இருந்தது. நர்ஸ் கொஞ்சம் தண்ணீரை கொண்டு வந்து அமுதாவின் முகத்தில் தெளித்து அவளை எழுப்ப முயற்சி செய்தாள். சில நிமிட போராட்டங்களுக்கு பிறகு அமுதா கண் விழித்தாள். அவளுக்கு அப்போதும் கூட என்ன நடக்கிறது என்று புரியவில்லை.

அவள் தன் அருகில் அமர்ந்திருக்கும் நர்சையும், விஜய்யையும் மாறி மாறி பார்த்து திரு திருவென்று விழிக்க “நீ இப்ப ஓகே தானே? எதுக்கு டி இப்படி சும்மா சும்மா மயக்கம் போட்டு விழுகிற?”
என்று விஜய் அவளை பார்த்து சாதாரணமாக கேட்டான். ஒரு டெபியு ஹீரோயினிடம் பிரபல சினிமா ஸ்டார் இப்படி உரிமையுடன் சாதாரணமாக பேசுவதை பார்த்துக்‌ கொண்டு இருந்த அந்த நர்ஸ் “ஓஹோ ட்ராக் அப்படி போகுதா? அதான் இந்த நேரத்துல எத பத்தியும் யோசிக்காம விஜய் சார் இந்த பொண்ணை பாக்க வந்திருக்காரா? இவளும் பார்க்க ரொம்ப அழகா இருக்கா. அதுவும் அவர் வயசுக்கு இவ ரொம்ப சின்ன பொண்ணு.

இப்படி இருக்கிற பொண்ணுங்களை லவ் பண்றது எல்லாம் சினிமா ஸ்டார்சுக்கு சகஜம் தானே! ஐயோ இது எவ்ளோ பெரிய நியூஸ்! ஒரு சாதாரண பொண்ணுக்காக விஜய் சார் இந்த அளவுக்கு பண்றாருன்னு மத்தவங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்? அட கடவுளே.. இவ்ளோ பெரிய விஷயத்தை தெரிஞ்சுகிட்டு என்னால சும்மாவே இருக்க முடியலையே.. நான் போய் வெளிய சொன்னாலும் பிரச்சனையாகிடும். அப்புறம் விஜய் சார் என்ன சும்மாவே விடமாட்டாரு. அதை நினைச்சாலும் பயமா இருக்கு.” என்று தனக்குள் புலம்பிக் கொண்டு இருந்தாள்.

விஜயின் குரலை கேட்ட பிறகு தான் சுயநினைவிற்கு வந்த அமுதா “நானா.. நான் நல்லா தான் இருக்கேன் சார்.” என்று சொல்லிவிட்டு ஏதோ ஒரு பதட்டத்தில் தனது உதடுகளை தொட்டுப் பார்த்தாள். அவன் அவளை ஆழமாக முத்தமிடும் போது அவளுடைய கீழ் உதட்டை தன் பற்களால் கடித்து இழுத்திருந்ததால், அங்கே லேசாக பல் தடத்துடன் வீங்கி இருந்தது. அதை பார்த்த உடனேயே அங்கே என்ன நடந்திருக்கும் என்று புரிந்து கொண்ட நர்ஸ் அமுதா அந்த அடையாளத்தை நினைத்து வருத்தப்படுகிறாள் என நினைத்து “இத நெனச்செல்லாம் நீங்க ஃபீல் பண்ணாதீங்க மேடம். எப்படியும் கொஞ்ச நேரத்துக்கு உங்க வீட்ல இருக்குறவங்க உங்களை தேட மாட்டாங்க. நீங்க வாங்க நான் உங்களுக்கு ஒரு ஆயின்மென்ட் கொடுக்கிறேன்.” என்று சொல்லி அமுதாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு வெளியில் செல்ல பார்த்தாள்.

அவள் பேசியதிலேயே இங்கே நடந்ததை அந்த பெண் தெரிந்து கொண்டிருக்கிறாள் என்று புரிந்து கொண்ட விஜய் “ஒரு நிமிஷம்!” என்று சொல்ல, அவர்கள் இருவரும் திரும்பி அவனை பார்த்தார்கள். தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த சில 500 ரூபாய் நோட்டுகளை கையில் எடுத்து அதை நர்சிடம் கொடுத்து “அவளை பத்திரமா பாத்துக்கோங்க. அண்ட் சீக்ரெட்டா இருக்க வேண்டிய சில விஷயங்கள் அப்படி இருக்குறது தான் எல்லாருக்கும் நல்லது. நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.” என்று நர்சை பார்த்து ஒவ்வொரு வார்த்தைகளையும் அழுத்திச் சொன்னான்.

அதுவரை தனக்கு தெரிந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல முடியாமல் போய்விட்டதே என்று புலம்பி கொண்டு இருந்த அந்த நர்ஸ் பெண்மணி விஜய் இங்கே வந்ததில் தனக்கு சில சலுகைகள் கிடைத்ததால் இப்போது சந்தோஷத்தில் அவன் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டு “கண்டிப்பா கண்டிப்பா சார்! எனக்கு சீக்ரெட்டை எப்படி காப்பாத்துறதுன்னு நல்லா தெரியும். நீங்க முன்னாடி ஃபோன்ல பேசும்போது கூட அமுதா மேடம் சொன்னாங்க. நீங்க என்ன பத்தி எல்லாம் யோசிச்சு கவலைப்பட வேண்டாம். தேங்க்யூ சார்! அமுதா மேடமை அவங்க இங்க இருக்கிற வரைக்கும் பக்கத்திலயே இருந்து நான் பத்திரமா பாத்துக்கிறேன்.” என்றாள்.

இதற்கு மேலும் அங்கே நின்று விஜயை பார்ப்பதற்கு அமுதாவிற்கு கூச்சமாக இருந்ததால் அவனை வெட்கத்துடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு அந்தப் பெண்ணுடன் அவள் வெளியேறி விட்டாள். தானும் தனது மாஸ்கை அணிந்து கொண்டு அங்கே வந்ததைப் போல யாருக்கும் தெரியாமல் மறைந்து ஒழிந்து வெளியில் சென்று தனது காதில் ஏறி அமர்ந்த விஜய் பெருமூச்சு விட்டான்.

அவன் திரும்பி அந்த ஹாஸ்பிடலின் பில்டிங்கை பார்க்க, அவனுக்கு அமுதா செல்லும்போது அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தாளே.. அந்த நொடி தான் ஞாபகம் வந்தது. அவன் மனம் முழுவதும் இப்போது அவள் தான் நிறைந்து இருந்தாள். அதை இன்னும் அவன் முழுவதாக உணராமல் இருந்ததால் ஆயிரம் கேள்விகள் அவன் மனதை துளைக்க, எதற்கும் பதில் இல்லாததால் அந்த பதிலையும் நிம்மதியையும் தேடி அங்கிருந்து தனது காரை ஸ்டார்ட் செய்து கிளம்பினான் விஜய்.

விஜயின் கார் வாசலில் நிற்காததை கவனித்து விட்டு பாதுகாவலர்கள் தினேஷ்ற்க்கு விஜய் எங்கேயோ சென்று இருப்பதாக தெரிவித்ததால் உடனே பதறி அடித்துக் கொண்டு விஜய்க்கு கால் செய்த தினேஷ் “பாஸ் நீங்க எங்க இருக்கீங்க? ஏன் பாஸ் இப்படி எப்ப பாத்தாலும் எங்கையாவது சொல்லாம கொள்ளாம போய் எங்களை டென்ஷன்லையே வச்சிருக்கீங்க! நீங்க எங்க இருக்கீங்கனு சொல்லுங்க‌. நான் உடனே கிளம்பி வரேன்.” என்றான்.

“நான் இப்ப எங்க போறதுன்னு எனக்கே தெரியல. நான் உன்‌கிட்ட என்னன்னு டா சொல்றது?” என்று நினைத்த விஜய் “நான் அங்க தான் வந்துட்டு இருக்கேன் நீ வை.” என்று சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டித்தான். விஜய் எப்படியும் தன்னைத் தேடி வர மாட்டான். ஆனால் அமுதாவை தேடி செல்வான் அல்லவா? அதனால் அவளை வைத்தே இவன் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து விடலாம் என்று கணக்கு போட்ட அனாமிகா தனது ஆட்களை அந்த ஹாஸ்பிடலை சுற்றி நோட்டமிடுவதற்காக அனுப்பி வைத்திருந்தாள்.

அவர்களுக்கு விஜய் வைத்திருக்கும் அனைத்து காரர்களை பற்றியும் தெரியும் என்பதால், அவன் முகத்தை மூடிக் கொண்டு சென்றாலும் கூட, அவன் அமுதாவை காண ஹாஸ்பிடலுக்கு வந்துவிட்டு இப்போது எங்கேயோ சென்று கொண்டு இருக்கிறான் என்ற தகவல் அனாமிக்காவை சென்றடைந்தது.‌

“நீ இருக்கிற இடம் எனக்கு இவ்வளவு சீக்கிரம் தெரிய வரும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல விஜய். இதோ இப்பவே உன்னோட wife உன்னை தேடி வர போறா.‌ இன்னைக்கு நீயும் நானும் சேர்றதை யாராலையும் தடுக்க முடியாது. அந்த அமுதாவுக்கும் நாளைக்கு நான் ஒரு சூப்பர் பிளான் ரெடி பண்றேன். இனிமே எல்லாமே நான் நினைச்ச மாதிரி தான் நடக்கும்.” என்று நினைத்தவள் விஜய்க்கு பிடித்த மாதிரி அழகிய ஒரு புடவையைக் கட்டி தயாராகி அவசர அவசரமாக கிளம்பி தன் காரை எடுத்துக் கொண்டு தனது ஆட்களிடம் விஜய் இருக்கும் லொகேஷனை கேட்டுக் கொண்டு அங்கே சென்றாள் அனாமிகா.

காரில் பயணித்துக் கொண்டிருந்த விஜய் இப்போது அவன் தங்கி இருக்கும் புதிய வீட்டிற்கு செல்ல, அவனை பின் தொடர்ந்து அங்கே வந்து சேர்ந்திருந்த அனாமிகா காரில் இருந்து கீழே இறங்கி அவன் பின்னே சென்று நின்று “சர்ப்ரைஸ்!” என்ற கத்தினாள். அதுவரை அமுதாவை பற்றிய சிந்தனைகளில் மூழ்கி இருந்த விஜய் திடீரென்று அனாமிகா அங்கே வந்து நிற்பதை எதிர்பார்த்து இருக்காதால் அவளை ஆச்சரியமாக பார்த்தான்.

“என்ன பேபி நான் இங்க வருவேன்னு நீ எதிர்பார்க்கலையா? நீ இல்லாம என்னால எப்படி இருக்க முடியும் சொல்லு? அதான் நீ இருக்கிற இடத்தை தேடி கண்டுபிடிச்சு நான் உனக்காக வந்திருக்கேன்.” என்று அனாமிகா தனது கவர்ச்சியான குரலில் சொல்ல, அவளை முறைத்துப் பார்த்த விஜய் “நான் ஆல்ரெடி செம கடுப்புல இருக்கேன். ஒழுங்கா இங்க இருந்து ஓடிப்போயிரு. எனக்கு உன் மூஞ்சிய பார்க்கவே பிடிக்காம தான் இவ்வளவு தூரம் வந்தேன். இங்கயும் வந்து சும்மா என்ன டார்ச்சர் பண்ணிட்டு இருக்காத. போய் தொலை!” என்று சொல்லிவிட்டு தனது வீட்டிற்குள் நுழைந்தான்.

- காதல் மலரும் 🌹

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-90
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.