மஞ்சம்-87

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
605
47
28
www.amazon.com
“நீ சொன்னது எல்லாத்தையும் கேட்கிறேன். இனிமே எந்த ரிஸ்க்கும் எடுக்க மாட்டேன்னு உன் கிட்ட சொல்றதுக்கு தான் நான் இப்பவே ரஷ்யால இருந்து கிளம்பி வந்தேன். நான் முழுசா எல்லாத்தையும் உன் கிட்ட பேசுறதுக்குள்ள ஏண்டி அவசரப்படுற?” என்று தன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்ட அர்ஜுன் தேன்மொழி அவனை கடித்து வைத்து விட்டதால் வலியில் தன் கையை உதறிக் கொண்டிருந்தான்.

அப்போது‌ தான் அவன் அவளை விட்டு கொஞ்சம் நகர்ந்து பெட்டில் அமர, சட்டென எழுந்து அவன் அருகில் சென்று அமர்ந்து கொண்ட தேன்மொழி தன் ஒரு கையை அவனது தோள்களில் வைத்துக் கொண்டு மற்றொரு கையால் அவன் கையைப் பிடித்துக் கொண்டு “என்னங்க சொல்றீங்க? நெஜமாவே நான் சொன்னதுக்கு ஓகே சொல்லறதுக்கு தான் என்ன பாக்க இந்தியா கிளம்பி வந்தீங்களா? அப்போ அவங்க மேரேஜ்காக நீங்க வந்ததா சொன்னீங்க! எனக்கு இப்பவுமே அவ்ளோ பிடிவாதமா இருந்த நீங்க எப்படி இவ்ளோ சீக்கிரமா இதுக்கு ஓகே சொன்னீங்கன்னு நம்பவே முடியல.” என்று அப்போதும் சந்தேகத்துடனே கேட்டாள்.

“என்ன இவ.. நம்ம இவ்வளவு தூரம் பேசியும் நம்ப மாட்டீங்கிறா! விட்டா என் மேல ப்ராமிஸ் பண்ணு.. இல்லன்னா சூடம் அடிச்சு சத்தியம் பண்ணுன்னு கேப்பாளோ! டேய் அர்ஜுன் உன் பெர்ஃபார்மன்ஸ் பத்தல போலருக்கு. நல்லா எமோஷனலா பேசு அப்ப தான் அவ நம்புவா.” என்று நினைத்த அர்ஜுன் வராத அழுகையை வரவழைத்து துக்கம் தொண்டையை அடைப்பதை போல “நீ இப்படி எல்லாம் கேட்டா நான் என்ன டி சொல்றது? நீ பர்ஸ்ட் கேட்கும் போது நான் உன் கிட்ட இதெல்லாம் எவ்வளவு இம்பார்டன்ட்னு சொன்னேன். பட் அப்பையுமே நான் இது எல்லாத்தையும் விட்டுட்டு வந்தா மட்டும் தான் என்கூட சேர்ந்து வாழ்வேன்னு ஸ்ட்ராங்கா சொல்லிட்டு கிளம்பி வந்துட்ட. அப்புறம் நீ இல்லாம எத்தனை நாள் என்னால கஷ்டப்பட முடியும்னு நினைக்கிற?

உன்னோட பிடிவாதம் என்னென்னனு இத்தனை நாலுல நான் புரிஞ்சுகிட்டேன். என்னால உன்ன கன்வின்ஸ் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிருச்சு. அதான் என் இடத்துல இருந்து இந்த உலகத்தை காப்பாத்துறதுக்கு என்ன மாதிரியே எத்தனை அர்ஜுன் வேணாலும் வரலாம். ஆனா உனக்கு, நம்ம ஃபேமிலிக்கு நான் மட்டும் தானே இருக்கேன்! அதான் உங்க எல்லாருக்கும் யோசிச்சு பார்த்தேன். நீ சொல்றதும் கரெக்ட்னு தோணுச்சு. அதான் வேற வழி இல்லாம இந்த முடிவுக்கு வந்துட்டேன். நான் என்னோட பொசிஷன்ல இருந்து ரிலீவ் ஆகறதுக்கு வேலை எல்லாத்தையும் பண்ணிட்டேன்.

நான் இவ்ளோ சொல்லியும் நீ என் மேல சந்தேகப்பட்டா, இதுக்கு மேல என்ன பண்ணி என்ன ப்ரூவ் பண்றதுன்னு எனக்கு தெரியல ஹனி பேபி. எனக்கு நீ ரொம்ப ரொம்ப முக்கியம். உனக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். நீ நம்பினாலும் சரி இல்லேன்னாலும் இது தான் உண்மை.” என்று சிறு விசும்பல்களுடன் சொன்னான்.

அவன் அந்த அளவிற்கு சொன்னவுடன் இதற்கு மேல் அவனைத் தான் சந்தேகப்பட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்த தேன்மொழி உடனே அர்ஜுனை இறுக்கமாக கட்டிப்பிடித்துக் கொண்டு “தேங்க்ஸ் அர்ஜுன். நெஜமாவே இவ்ளோ சீக்கிரம் நீங்க இது எல்லாத்தையும் எனக்காக விட்டுட்டு வந்தது எனக்கு ஆச்சரியமா தான் இருக்கு‌. பட் ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க சொன்னது உண்மை தான். உங்கள மாதிரி ஒரு ஹஸ்பண்ட் வேணும்னு தான் எல்லா பொண்ணுங்களும் ஆசைப்படுவாங்க. ஆனா கல்யாணம் பண்ணறதுக்கு முன்னாடி வரைக்கும் என் ஹஸ்பண்ட் இப்படி இருக்கணும்னு அப்படி இருக்கணும் எல்லாம் நான் எதுவுமே யோசிக்கவில்லை. அந்த கடவுளே என் மேல கருணை காட்டி உங்கள மாதிரி ஒருத்தர எனக்கு ஹஸ்பண்ட் கொடுத்திருக்காங்க‌. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. சொல்லப்போனா இப்ப தான் நிம்மதியா இருக்கு.” என்று சொல்லிவிட்டு கதறி அழுதாள்.

அவள் மனதில் இருந்த பெரிய பாரம் இன்று தான் இறங்கியதைப் போல அவளுக்குள் ஒரு உணர்வை ஏற்பட்டது. அதனால் இப்போது தனக்காக அர்ஜுன் இவ்வளவு தூரம் யோசித்திருக்கிறான் என நினைத்து சந்தோஷத்தில் அழுதாள் தேன்மொழி.

‌ ‌

உடனே அவளை தூக்கி தனது மடியில் அமர வைத்துக் கொண்டு அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்திய அர்ஜுன் “சரி விடு.. ஹாப்பியா இருந்தா கூட அழனுமா என்ன? இப்ப எதுக்கு இப்படி அழுகிற? உனக்கு ஹஸ்பண்ட் கிட்ட ரொமான்டிக்கா எப்படி பேசுறதுன்னு தெரியாதா? என்ன பார்த்த உடனே இந்நேரம் நீ எப்படி எல்லாம் ரியாக்சன் கொடுத்திருக்கணும்.. நீ என்னன்னா ஒன்னு கோவப்படுற. இல்லனா இப்படி ஏதாவது ஒரு ரீசன் கண்டுபிடித்து அழுகிற. இன்னும் நீ சின்ன புள்ளையாவே இருக்க டி.” என்று சொல்லிவிட்டு அவள் கண்ணீரை துடைத்தான்.

தன் சிவந்த மூக்கை துடைத்த தேன்மொழி “நான் ஒன்னும் சின்ன பொண்ணு எல்லாம் இல்ல. எனக்கு 25 வயசாகுது ஓகேவா?” என்று கேட்க, அங்கே சுவரில் மாட்டப்பட்டு இருந்த அவளுடைய குடும்ப புகைப்படத்தை பார்த்த அர்ஜுன் “ஆமா ஆமா மேடம் ரொம்ப பெரிய பொண்ணு ஆகிட்டீங்க.. உங்களுக்கு மேரேஜ் எல்லாம் ஆயிடுச்சில்ல! இனிமே நெக்ஸ்ட் ஸ்டேஜ்க்கு போறத பற்றி தான் யோசிக்கணும். அந்த போட்டோல இருக்கிற மாதிரியே நமக்கு ஒரு கியூட் பேபி இருந்தா நல்லா இருக்கும்ல!” என்று கேட்டபடி எதிரில் இருந்த போட்டோவை அவளிடம் கை காட்டினான்.

அவன் மீது சாய்ந்து கொண்டு அந்த போட்டோவை பார்த்த தேன்மொழி “எது என்ன மாதிரியா? இல்ல வேண்டாம். ஆல்ரெடி ஆருத்ரா கூட பாக்குறதுக்கு என்ன மாதிரி தான் இருக்கா. சோ எனக்கு உங்கள மாதிரி ஒரு பொண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது.” என்று சொல்லிவிட்டு வெட்கத்தில் அவனது நெஞ்சில் முகம் புதைத்தாள்.

அவளுடன் அப்படியே கட்டிலில் விழுந்த அர்ஜுன் “பட் எனக்கு உன்ன மாதிரி தான் என் பொண்ணு இருக்கணும்.” என்று சொல்லிவிட்டு அவளை முத்தமிட நெருங்கினான். விளையாட்டாக தன் முகத்தை திருப்பிக் கொண்ட தேன்மொழி சிரித்தபடி “உங்கள மாதிரி தான் நமக்கு பொண்ணு பொறக்கணும் சொல்லுங்க. அப்ப தான் நான் உங்களுக்கு cooperate பண்ணுவேன்.” என்று சொல்லி அடம் பிடித்தாள்.

அதனால் அவளது இரு கைகளையும் அவளுடைய தலைக்கு மேல் உயர்த்தி பிடித்துக் கொண்ட அர்ஜுன் “இன்னும் ப்ராசசே ஒழுங்கா பண்ணலையாம்.. அதுக்குள்ள ரிசல்ட் பத்தி யோசிச்சு எதுக்கு டி கவலைப்படுற? நம்ம ஹார்ட் வர்க் பண்ணா, ஒரே ஷாட்ல ட்வின்ஸா ஒரு பையன், ஒரு பொண்ணு. இரண்டுமே கிடைச்சிற போகுது.. சும்மா பேசி டைம் வேஸ்ட் பண்ணாத. இதுக்கு மேல எல்லாம் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாது.” என்று சொல்லிவிட்டு அவளைப் பேசவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவே தனது இதழ்களால் அவளுடைய இதழ்களை மூடினான்.



முதலில் விழிகள்
விரிய அவனைப் பார்த்த தேன்மொழி பின் அவனுடைய முத்தத்தில் திளைத்து தானும் அவனுடன் சேர்ந்து முத்தாடும் ஆசையில் தனது கண்களை இறுக்கமாக மூடி அவனுக்கு ஒத்துழைக்கத் தொடங்கினாள்‌. அவள் ஒருவழியாக தன்னிடம் சரணடைந்து விட்டதை உணர்ந்த அர்ஜுன் ஏதோ தான் பெரிய போரில் கலந்து கொண்டு வெற்றி கண்டதைப் போல இன்ப வெள்ளத்தில் திளைத்தான் .


அதற்கு மேல் என்ன நடந்தது என்று கூட தேன்மொழிக்கு ஞாபகம் இல்லை. அடுத்த ஐந்து நிமிடத்தில் அவர்கள் இருவரும் மோகத்தில் திழைத்து முத்து குளிக்க தொடங்கி இருந்தார்கள். அவனுடைய முதல் தொடுகையிலேயே தன்னை மறந்து விட்ட தேன்மொழி விரும்பி தன்னை அவனிடம் தொலைத்துக்கொண்டு இருந்தாள். வெகு நேரம் ஆனால் கண்டிப்பாக ஆருத்ரா தங்களை தேடிக் கொண்டு இங்கே வருவாள் என்று அறிந்திருந்த அர்ஜுன் அனைத்தையும் அரைமணி நேரத்திற்குள் முடித்துக் கொண்டு மூச்சு வாங்க அவளை விட்டு பிரிந்தான்.

அவளும் வியர்த்து வடிந்து மூச்சு வாங்க “அப்பவே உன்னை நான் ஏசி போட சொன்னேன்ல.. எனக்கு செம்மையா வியர்த்து இருக்குது. இப்படியே எப்படி வெளிய போறது? இப்ப குளிச்சிட்டு தான் போகணும்.” என்று சொல்ல, அவளை தன்னருகில் இழுத்து அணைத்துக் கொண்ட அர்ஜூன் “விடு, இதுவும் ஒரு டிஃபரண்ட் எக்ஸ்பீரியன்ஸா நல்லா தான் இருந்துச்சு. இந்த ரூம்ல மட்டும் தான் attached bathroom இருக்குன்னு அத்தை சொல்லிட்டு இருந்தாங்க.. அப்புறம் என்ன? வா போய் குளிக்கலாம்.” என்றவன் அவளுடைய வெற்றுடலின் மீது போர்வையை சுற்றி அவளை அப்படியே தூக்கினான்.

“என்னது நம்ம சேர்ந்து குளிக்கனுமா? எனக்கு அதெல்லாம் பழக்கமில்லை. எனக்கு கூச்சமா இருக்கு. அதெல்லாம் வேண்டாம். நான் போய் முதல்ல குளிச்சிட்டு வெளியே போறேன். அப்புறமா நீங்க குளிச்சிட்டு வாங்க.” என்ற தேன்மொழி கீழே இறங்க முயற்சி செய்ய, அவளை அப்படியே தூக்கி தனது தோள்களில் போட்டுக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்த அர்ஜுன் “பழக்கம் இல்லைனா என்ன இப்ப? இனிமே பழகிக்கோ. இது எல்லாம் அடிக்கடி நடக்கும் தான். உனக்கு ஏதாவது டவுட் வந்தா என் கிட்ட கேளு. ஸ்பெஷல் கிளாஸ் எடுத்து உனக்கு எல்லா டவுட்டையும் கிளியர் பண்றேன். இன்னைக்கு லேசன் நம்பர் ஒன். பாத்ரூம் ரொமான்ஸ்!” என்று விட்டு குதூகலத்தில் தனக்குள் சிரித்துக் கொண்டு பாத்ரூம் கதவை லாக் செய்தான்.

அங்கே இருந்த பழைய இரும்பு சவரை அவன் திறந்து விட, அதில் இருந்து ஜில்லென்று வந்த தண்ணீர் அவர்கள் இருவரின் மீதும் கொட்டியது. அதனால் குளிரில் நடுங்கிய தேன்மொழி அவனை அணைத்துக் கொண்டு “ஐயோ தண்ணி என்ன இப்படி ஜில்ஜென்னு வருது! எனக்கு ரொம்ப குளுருது. இந்த டைம்ல குளிச்சா சேருமா? எல்லாம் உன்னால தான்.” என்று அவனை திட்டினாள்.

“ஏய் என்ன டி கேப் கிடைக்கும்போது எல்லாம் ஏதாவது சொல்லி என்னை திட்டிக்கிட்டே இருக்க? என்னமோ என் சந்தோஷத்துக்காக மட்டும் தான் நான் எல்லாத்தையும் பண்ண மாதிரியே பேசுற.. இங்க பாரு.. என் சோல்டர்ல எப்படி கடிச்சு ஹிக்கி போட்டு வச்சிருக்கேன்னு.. போன ஜென்மத்துல நீ எலியா பொறந்திருப்பேன்னு நினைக்கிறேன். அதான் பாக்குறது எல்லாத்தையும் கடைச்சு வைக்கிற. ஏதோ ஒரு ஆர்வக்கோளாறுல அங்க எல்லாம் தெரியாம கூட எதுவும் கடைச்சு வச்சுறத டி.. முதலுக்கே மோசமாயிடும். அப்புறம் நீ தான் ஃபீல் பண்ணிட்டு இருப்ப!” என்ற அர்ஜுன் கிண்டலாக அவளைபார்த்து சிரிக்க, தன் கையால் அவன் வாயை மூடிய தேன்மொழி “ஆஆஆ.. வாய மூடு டா பொறுக்கி.‌ எப்படித் தான் வெட்கமே இல்லாம இப்படி எல்லாம் பேசுவியோ தெரியல!” என்று வெட்கப்பட்டு கொண்டே சொன்னாள்.‌

“இதுக்கே வெக்கப்பட்டா வாழ முடியுமா? நீதாண்டி இன்னும் ரொம்ப வெட்கப்படற.. உனக்கு இன்னும் ப்ராக்டிஸ் பத்தலன்னு நினைக்கிறேன். போகப்போக தான் எல்லாம் கரெக்ட் ஆகும். அப்ப நம்ப எல்லாம் கண்டினியூ பண்ணலாம் இப்ப நாம வந்த வேலைய கண்டினியூ பண்ணலாம.” என்று சிரித்துக் கொண்டே சொன்ன அர்ஜுன் அவளுடன் சேர்ந்து குளிக்க தொடங்கினான். கொட்டும் தண்ணீருக்கு நடுவில் அவர்கள் இருவரின் உடலும் விரகதாபத்தில் வெந்து கொண்டிருந்தது.

- மீண்டும் வருவாள் 💕
 

Author: thenaruvitamilnovels
Article Title: மஞ்சம்-87
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: jansi