Home மூர்கனின் முரட்டு முத்தங்கள்மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 11

மூர்கனின் முரட்டு முத்தங்கள் CH 11

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 11

“நான் உன் கூட க்ளோசா இருக்கிறது உனக்கு பிடிக்கலையோ!” என்று கேட்ட அஸ்வின் அவளை முறைத்து பார்க்க, “உனக்கு தான் என்ன பிடிக்கலையே அஸ்வின்.. அப்புறம் நீ என் பக்கத்துல வர்றத நெனச்சு எப்படி என்னால சந்தோஷப்பட முடியும்? உன்ன பொறுத்த வரைக்கும் நான் உன் குடும்பத்தை கொன்ன கொலைகாரி.. அவ்வளவு தானே!” என்று நினைத்த ஐஸ்வர்யா தன் முகத்தை திருப்பி கொண்டாள். 

அவள் தன்னை நிராகரிப்பது அவனுக்கு பிடிக்கவில்லை. அவள் மோவாயை பிடித்து அவள் முகத்தை தன் பக்கம் திரும்பிய அஸ்வின் துடிக்கும் இதழ்களுடன் தன்னை ஒரு வித மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவை தன் புருவங்கள் சுருக்கி பார்த்தான். அவனது அழகிய முகம் இப்போது கோபத்தில் சிவந்திருப்பதை பார்க்கவே அவன் மீது ஆசை வருவதற்கு பதிலாக அந்நேரம் பாவை அவளுக்கு பாவம் பயம் தான் வந்தது. 

அதில் அவளுக்கு ஏசி ஓடியும் நன்றாக வியர்த்து கொட்ட, அவளது கழுத்து வளைவிலும், நெற்றியின் ஓரமாகவும் பூத்துக் குலுங்கிய வியர்வை துளிகள் முத்து முத்து ஆக வடிந்து உள்ளே அவள் பிளவுஸிற்க்குள் சென்று மறைந்தது. அந்த ஈரம் பட்டு அவளது பால்நிறமேனி ஜன்னல் வழியாக வந்த சூரிய கதிர்களின் உதவியோடு வெள்ளை நிற பனிப்பாறைகள் போல ஜொலிக்க, அவனது மனைவியின் பேரழகில் ஒரு நொடி அவன் சொக்கித்தான் போனான். 

அவன் கைகள் தானாக சென்று அவளுடைய மெல்லிடையை இறுக்கி பிடிக்க, அவனது இதழ்கள் தானாக சென்று அவளது செவ்விதழ்களை தீண்டியது. இவ்வளவு நேரமாக அவன் தன் மீது கோபத்தில் இருந்ததால், “நீதான் என்ன மொத்தமா வெறுக்கிறியே அஸ்வின்.. அப்புறம் ஏன் இப்படி எல்லாம் பண்ற?” என்று நினைத்து மனமுடைந்த ஐஸ்வர்யா அவனது தோள்களில் கை வைத்து தன்னை விட்டு அவனை விளக்கி தள்ள முயற்சி செய்தாள். 

முதலில் அவள் மீது கொண்ட ஆசையில் அவளது இதழ்களை மென்மையாக தீண்டிய அஸ்வின் இப்போது மீண்டும் அவள் தன் எதிர்ப்பை காட்டத் தொடங்கி விட்டதால் ரெமோ மோடில் இருந்து அந்நியனாக மாறி சட்டென்று அவளது பிஞ்சு கைகள் இரண்டையும் இறுக்கமாக பிடித்து அதை அவளுடைய தலைக்கு மேல் தூக்கி நிறுத்தினான். அவனது வன்மையான செயல்களால் அதிர்ந்து போன ஐஸ்வர்யா விழிகள் விரிய அவனைப் பார்க்க, அவளுக்கு பயத்தில் வேகமாக மூச்சு வாங்கியதால் அவளது பெண்மையின் வனப்புகள் இரண்டும் மேலே சென்று கீழே வந்தது. 

அதை அத்தனை அருகில் பார்த்ததில் ஒருவித கிரக்கத்தில் இருந்த அஸ்வினுக்கு அவளது மலர் மேனியின் தனித்துவமான வாசனையோடு இப்போது கலந்த வியர்வை துளியின் நறுமணம் மண்ணின் மீது விழுந்த மழைத்துளிகள் எழுப்பிய ஏகாந்தமான வாசனையாக அவன் நாசிகளை நிரப்பி அவனை போதைக்கு உள்ளாக்கியது. அவன் இன்னும் அவளது கைகள் இரண்டையும் அவளுடைய தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்க, “வேண்டாம் அஸ்வின்.. ப்ளீஸ் என்ன விடு! நான் தான் நீ சொன்ன வேலை எல்லாத்தையும் செய்றேன்னு சொல்லிட்டேன்ல.. அப்புறம் என்ன?” என்று தனது இதழ்கள் துடிக்க கேட்டாள் ஐஸ்வர்யா. 

அவள் வேறு இப்படி இடை இடையில் பேசி தன்னை கடுப்பேற்றிக் கொண்டே இருக்கிறாள் என்று நினைத்த அஸ்வின் சட்டென்று தனது வன்மையான இதழ்களால் அவளது மென்மையான இதழ்களை சிறிதும் இரக்கமின்றி கடித்து சுவைக்க தொடங்கினான்.  காதல் ஆசைகளுடன் அவன் தன்னுடன் இப்படி எல்லாம் ரொமான்ஸ் செய்தால் நன்றாக இருக்கும் என்று அவள் எத்தனையோ நாட்கள் கற்பனை செய்து பார்த்திருக்கிறாள். 

ஆனால் இவன் என்னவோ அதை தனக்கு தண்டனை கொடுப்பதை போலவா வன்மையை காட்டி வெறுப்பை கொட்டி தன்னை வதைக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி எல்லாம் செய்கிறான்.. என்று நினைக்கவே ஐஸ்வர்யாவின் இதயம் கனத்தது. அதனால் அவன் தன் கைகள் இரண்டையும் இறுக்கி பிடித்து தன்னை லாக் செய்து வைத்திருந்தாலும் கூட, தனது கீழ் உடலை ஆட்டி தொடர்ந்து அப்படியும் இப்படியுமாக அசைந்து அவனுக்கு போக்கு காட்டி அவள் தன் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டே இருந்தாள். 

அவள் ஒவ்வொரு முறை அசையும் போதும், அஸ்வின் கோபம் மெல்ல மெல்ல கூடி அதன் எல்லையை கடந்து சென்று கொண்டிருக்க, அவள் மீது தனக்கு வந்த கோபத்தை மொத்தமாக அவளது செவ்விதழ்களின் மீது இறக்கி கொண்டிருந்த அஸ்வின் விட்டால் தன் பற்களால் கடித்து அவள் உதட்டை அப்படியே பிய்த்து எடுத்து விடுபவன் போல முத்தம் கொடுக்கிறேன் என்ற பெயரில் வெறி பிடித்த மிருகம் போல அவளை கடித்துக் கொண்டிருந்தான்.‌

அந்த வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஐஸ்வர்யாவின் கண்களில் இருந்து கண்ணீர் வர, அதைக் கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஐந்து நிமிடத்திற்கு மேல் அவளை வெறித்தனமாக முத்தமிட்டு கொண்டிருந்த அஸ்வின் அவள் மூச்சு விட சிரமப்படுவதை பார்த்த பிறகு ஒருவழியாக அவளை விட்டு விலகினான். அப்போதும் அவள் கையை பிடித்திருந்த பிடியை அவன் விடவில்லை. 

ஐஸ்வர்யாவின் இதழ்கள் நன்றாக அவனது பற்த்தடங்கள் பதிந்து வீங்கி போயிருக்க,  அதில் இருந்து லேசாக ரத்தம் வடிந்தது. கண்களில் இருந்து அருவி போல கண்ணீர் கொட்ட, அவனை பாவமாக பார்த்த ஐஸ்வர்யா “இப்படி என்னை கஷ்டப்படுத்தி பாக்குறது உனக்கு சந்தோஷமா இருக்கா? நல்லா பாரு அஸ்வின்.. நான் அழுதுட்டு இருக்கேன். நீ பண்றது எல்லாமே என்ன ரொம்ப ஹரட் பண்ணுது. எப்படி உன்னால என் கிட்ட இப்படியா நடந்துக்க முடியுது?” என்று ஆற்றாமையில் கேட்டாள். 

தன் உதட்டில் இருந்த அவளது இரத்தத்தை ஒற்றை விரலால் துடைத்த அஸ்வின் அவளது இதழ்களில் இருந்து வழிந்த ரத்தத்தை தன் நாவால் நக்கிவிட்டு “இப்ப தான் இன்னும் நல்லா இருக்கு. It tastes Nice.” என்று ஏதோ சைக்கோ போல சொன்னான். அவனது வார்த்தைகளில் நடுநடுங்கிப் போன ஐஸ்வர்யா “உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிருக்கா அஸ்வின்? என்ன பழிவாங்குகிறேன்னு கொஞ்சம் கொஞ்சமா சைக்கோ ஆகிட்டு இருக்க நீ.. உனக்கு அது புரியுதா இல்லையா? நீ இப்படி இருக்கிறத கண்டிப்பா மலர்விழி ஆன்ட்டியும், கருணாகரன் அங்கிலும் எங்கயோ இருந்து பார்த்து வருத்தப்பட்டு தான் இருப்பாங்க.” என்று எங்கே இவன் மொத்தமாக சைக்கோவாக மாறிவிடுவானோ என நினைத்து பயம் கலந்த கோபத்தில் கத்தினாள். 

அவள் பேசி முடிப்பதற்குள் அவள் கன்னத்தில் பளார் என்று ஒன்று வைத்த அஸ்வின் அவள் தலை முடியை பிடித்து அப்படியே அவளை எழுப்பி நிற்க வைத்து “ஆமா எனக்கு பைத்தியம் தான் புடிச்சிருக்கு. நான் சைக்கோ ஆகிட்டு இருக்கேன் டி.. சைக்கோ.. உனக்கு புரியுதா சைக்கோன்னா என்னன்னு! என்னை இப்படி ஆக்கினதே நீயும் உன் குடும்பமும் தானே டி.. அப்படி நாங்க உங்களுக்கு என்ன பாவம் பண்ணோம்? 

என் டாடி உங்க அப்பன் மேல எவ்வளவு நம்பிக்கையும் மரியாதையையும் வச்சிருந்தாரு தெரியுமா? அந்தாளு ஏண்டி இப்படி பண்ணான்? எல்லாம் உனக்காகவும் உன் அண்ணனுக்காகவும் தானே.. மத்தவங்க குடும்பம் எப்படி நாசமா போனாலும் உங்களுக்கு கவலையில.. எல்லா சொத்தையும் மத்தவங்கள ஏமாத்தி எடுத்துக்கிட்டு நீங்க மட்டும் சந்தோஷமா வாழனும்ன்ற எண்ணம்.. அதுக்கு தானே கேவலமா இப்படி நீங்க எல்லாரும் சேர்ந்து எங்கள cheat பண்ணீங்க! இப்ப நீங்க ஆசைப்பட்ட எல்லாத்தையும் நான் உங்களுக்கு கொடுத்தாலும், என் டாடியும் மம்மியும் மறுபடியும் வருவாங்களா டி? 

சொல்லு அவங்கள உன்னால உயிரோட வர வைக்க முடியுமா? உன்னால முடியும்னா சொல்லு நான் உன்னை இப்பவே விட்டுடறேன்.” என்று தனது அடி தொண்டையில் இருந்து கத்தி சொல்லிவிட்டு அவளை பிடித்து கட்டிலில் தள்ளினான். 

அவன் தொடர்ந்து தன்னை காயப்படுத்திக் கொண்டே இருந்ததால் ‌ உடல் அளவிலும் மனதளவிலும் அதிக பாதிக்கப்பட்டு இருந்த ஐஸ்வர்யா அப்போதும் கூட தன் வலியை பொருட்படுத்தாமல் “அவன் மனசுக்குள்ள எவ்ளோ வலி இருந்தா அவன் இப்படி டோட்டலா ஆளே மாறி போயிருப்பான்!” என்று நினைத்து அப்போதும் அவனுக்காக தான் கவலைப்பட்டாள். அந்த நிலையில் அவனிடம் என்ன பேசுவது என்று கூட அவளுக்கு தெரியாததால் “I am sorry அஸ்வின். எனக்கு வேற என்ன சொல்றதுன்னு தெரியல. அவங்க இப்படி ஒரு பிளான்ல இருக்காங்கன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா நான் உனக்கு முன்னாடியே அதை பத்தி சொல்லி உன்னை aware பண்ணி இருப்பேன். 

நான் அப்படி எதுவும் பண்ணிட கூடாதுன்னு தான் அவங்க தெளிவா பிளான் பண்ணி என்னை வசு ஆன்ட்டி வீட்ல கொண்டு போய் விட்டுட்டாங்க. நான் ஹவுஸ் arrest-ல இருந்தேன். என்ன சுத்தி என்ன நடந்துச்சுன்னு கூட அப்ப எனக்கு தெரியாது.” என்று விட்டு தன் முகத்தை மூடியபடி அழுதாள். 

அவ்வளவு நேரமாக அவளை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே ஏதேதோ செய்து கொண்டு இருந்த அஸ்வினுக்கு இப்போது அவள் அழுவதை பார்த்தால் கஷ்டமாக இருந்தது. அதனால் உடனே தன் முகத்தை திருப்பிக் கொண்டவன், “இப்படி எல்லாம் நீ அழுது சீன் போட்டா நான் உனக்கு கொடுத்த பனிஷ்மென்ட் மறந்துடுவேன்னு நினைச்சிறாத. நான் வர்றதுக்குள்ள இந்த டிரஸ் எல்லாமே வாஷ் பண்ணி ரெடியா இருக்கணும். காசியான கோட் சூட்டை மட்டும் தனியா எடுத்து வேற கப்போர்ட்ல வை.” என்று கடுமையான குரலில் சொல்லிவிட்டு அவசர அவசரமாக தனது ஆடைகளை சரி செய்து கொண்டு கையில் கார் சாவியுடன் வெளியில் சென்று விட்டான். 

சில நிமிடங்களுக்கு பிறகு சிரமப்பட்டு எழுந்து அமர்ந்து கலைந்து இருந்த தனது தலை முடியை சரி செய்து கொண்டை போட்ட ஐஸ்வர்யா துவைக்கும் துணிகளை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். செல்லும்போது அஸ்வின் ஐஸ்வர்யா ஒழுங்காக வேலை பார்க்கிறாரா இல்லையா என்று கண்காணிப்பதற்காகவே கீதாவை மேலே அனுப்பி வைத்துவிட்டு சென்றிருந்தான். அதனால் உள்ளே வந்த கீதா ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டு நடக்கும் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். 

‌ இரண்டு மூன்று குடைகளில் இருந்த துணிகளை அள்ளிப்போட்டுக் கொண்டு தூக்க முடியாமல் அதை தூக்கிய ஐஸ்வர்யா மொட்டை மாடிக்கு செல்வதற்காக லிஃப்ட் ஐ நோக்கி அதை எடுத்துக் கொண்டு மெல்ல நடந்தாள். 

– முத்தங்கள் தொடரும் 

You may also like

Leave a Comment

About Me

Featured