அத்தியாயம் 33
“ஆமா நீ நெஜமாவே ஏஞ்சல் தான். Thanks for coming baby!” என்று தன்னையும் அறியாமல் சொன்ன ரிசி அவள் அருகில் இன்னும் சென்று கொஞ்சம் எக்கி அவளது பின் கழுத்தில் கை வைத்து அவளை தன் பக்கம் லேசாக இழுத்து அவளது நெற்றியில் மென்மையாக முத்தமிட்டான்.
தன்னிடம் ரிஷி அன்புடன் நடந்து கொள்வதால் ஒரே குஷியில் இருந்த நித்திலா அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு தானும் அதில் முத்தமிட்டவள், “எனக்கு உன் கூட இருக்கும்போது ரொம்ப ஹாப்பியா இருக்கு ரிஷி.
இதுக்கு முன்னாடி என் கூட இருந்த அந்த குண்டு ஆன்ட்டி, அப்புறம் வாட்ச்மேன் அங்கிள், பூச்சாண்டி அங்கிள் மாதிரியெல்லாம் என்ன அடிக்காம பயமுறுத்தாம நீ என் கிட்ட பாசமா இருக்க.
அதனால இனிமே நானும் உன் கிட்ட பாசம் மாதிரி பாசமா இருப்பேன் சரியா? நீ என்னை எங்கேயும் விட்டுட்டு போகக் கூடாது.
எப்பயும் இதே மாதிரி என் கைய புடிச்சிட்டு என் கூடவே இருக்கணும். டீலா?” என்று கேட்டுவிட்டு தனது சுண்டு விரலை அவனை நோக்கி நீட்டினாள்.
முதலில் அவள் எதற்காக அப்படி செய்கிறாள் என்று புரியாமல் திருத்திருவென்று விழித்துக் கொண்டிருந்த ரிஷி “என்ன அப்படியே பாத்துட்டு இருக்க? இந்த டீலை நம்ம final பண்ண வேண்டாமா? என் விரல் கூட நீ இப்படி பண்ணனும். அப்ப தான் நம்மளோட டீல் கம்ப்ளீட் ஆகும்.” என்ற நித்திலா அவளது வலது மற்றும் இடது கைகளில் சுண்டு விரலை ஒன்றோடு ஒன்று இணைத்து காட்டிய பிறகு தான் இப்படித் தான் அவள் டீல் போட சொல்கிறாள் என்று புரிந்து கொண்டான். .
உடனே அவளது சிறிய சுண்டு விரலில் தன் விரலை கோர்த்த ரிஷி “இந்த fingers இரண்டும் ஜாயின் ஆகி இருக்கிற மாதிரி நீயும் நானும் எப்பயும் ஒன்னாவே இருப்போம். ஓகேவா?
நம்மள யாராலயும் பிரிக்க முடியாது. உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு போறதுக்கு நான் யாரையும் allow பண்ண மாட்டேன்.” என்று சொல்லி அவள் விளையாட்டுக்கு கேட்டிருந்தாலும் ஏதோ அவளிடம் அவன் திருமணம் செய்து கொள்ளும்போது எடுத்துக் கொள்ளும் சத்யபிரமாணம் போல அதை நினைத்து மனதார அவளுக்கு வாக்கு கொடுத்தான்.
அவனது வார்த்தைகள் அரைகுறையாக தான் அவளுக்கு புரிந்தது. இருப்பினும் தனது டீிலுக்கு அவன் ஓகே சொல்லிவிட்டான் என்ற மகிழ்ச்சியில் இருந்த நித்திலா “ஹைய்யா ஜாலி.. ரிஷி டீலுக்கு ஓகே சொல்லிட்டான்..!!” என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு அவனை அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ் ரிஷி! நீதான் எப்பயும் என் பெஸ்ட் friend.” என்று மனதார சொன்னாள்.
அவள் இப்படி குழந்தைத்தனமாக ஒவ்வொரு முறையும் அவனை அணைக்கும் போது, அவனது ஆறடி உடல் ஒரு நொடி ஆட்டம் கண்டது. அதை உணராமல் அவள் அவனை நண்பன் என்று சொல்லிக் கொண்டிருக்க, “உன் கூட friend-டா இருந்தா கூட போதுன்னு தான் தோணுது. இத்துனூண்டு இருந்துட்டு நீ என்னை என்னமோ பண்ற டி.
தனு என்னை விட்டுட்டு போனதுக்கு அப்புறமா என் லைஃப்ல வேற எவளும் எப்பயும் வரமாட்டான்னு நினைச்சேன். But you are something special!
நான் ஆம்பளையே இல்ல. எனக்கு இனிமே சுத்தமா பீலிங்ஸ் வராதுன்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா நீ என்கூட இருக்கும்போதெல்லாம், நீ குழந்தைத்தனமா பண்ணாலும் எனக்கு உன்னை பார்க்கும் போது என்னென்னமோ பண்ணனும்னு தோணுது…
எனக்கு தாறுமாறா இப்ப ஃபீலிங்ஸ் வருது. அதை என்ன பண்றதுன்னு தான் தெரியல. நீ இந்த கண்டிஷன்ல இருக்கும்போது நான் ஏதாவது பண்ணிட்டா உன்னை யூஸ் பண்ணிக்கிற மாதிரி இருக்காதா?” என அவளை அணைத்துக் கொண்டு இருந்த ரிசி தனக்குள் அவளிடம் பேசிக் கொண்டு இருந்தான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)