அத்தியாயம் 75
தொடர்ந்து அவனுக்கு கால் செய்து கொண்டு இருந்த ஷாலினி, “ப்ளீஸ் டா..!! கால்ல அட்டென்ட் பண்ணி தொல. என்னால சுத்தமா முடியல. நீ இங்க வரதுக்குள்ள நான் போய் சேந்துடுவேன் போல..!!” என்று புலம்பிய படி இருந்தாள். ஷாலினியிடம் இருந்து வந்த தொடர் அழைப்புக்களால் தொந்தரவாகி தூக்கத்தில் இருந்து எழுந்த விஷ்ணு, அவன் தூங்குவதற்கு முன் அவனுடைய பெட்டில் எங்கேயோ அவன் வீசிவிட்டு இருந்த போனை தேடி கண்டுபிடித்து எடுத்து பார்த்தான்.
விஷ்ணு அரை தூக்கத்தில் அவனுடைய கண்களை ஒரு விரலால் தேய்த்த படியே அவனுடைய மொபைல் போனை பார்க்க அதில் “ஷாலு மா ❤️” என்ற எண்ணில் இருந்து அவனுக்கு ஏழு மிஸ்டு கால்கள் வந்து இருந்தது. அந்த திரையில் ஷாலினியின் பெயரை பார்த்த உடனே அவள் இத்தனை முறை கால் செய்து இருப்பதால் அவளுக்கு என்னை எமர்ஜென்சியோ என்று நினைத்து பயந்து எழுந்த விஷ்ணுவின் தூக்கம் எல்லாம் பல கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று இருந்தது. அதற்குப் பின் ஒரு நொடியும் தாமதிக்காமல் ஷாலினியின் நம்பருக்கு டயல் செய்தான் விஷ்ணு.
விஷ்ணுவின் கால் ஐ ஒரு ரிங்கில் அட்டென்ட் செய்த ஷாலினி, “விஷ்ணு எனக்கு ஃபீவர் அதிகமா இருக்கு. என்னால சுத்தமா முடியல. ப்ளீஸ் கொஞ்சம் கிளம்பி வரியா..??” என்று மிக மெல்லிய குரலில் சுரத்தையே இல்லாமல் அவனிடம் கேட்டாள். 😞 ஷாலினி அப்படி உடைந்த குரலில் பேசியதை கேட்டவுடன் விஷ்ணுவின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. 💔
விஷ்ணு: “இதோ..!! இதோ..!! நான் இப்பவே வரேன் டி. அஞ்சு நிமிஷத்துல நான் அங்க இருப்பேன். பயப்படாத உனக்கு ஒன்னும் ஆகாது.” என்று அவசரமான குரலில் சொன்னவன், அவன் அணிந்து இருந்த நைட் ஷூட்டை கூட மாற்றாமல் அப்படியே அந்த கால் ஐ கட் செய்து விட்டு, அவர்களுடைய பேமிலி டாக்டருக்கு கால் செய்து உடனே வருமாறு சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டில் இருந்து ஒரு குடையை மட்டும் எடுத்துக் கொண்டு ஷாலினியின் வீட்டுக்கு ஓடினான்.
அடாத மழையிலும் விடாமல் குடை பிடித்துக் கொண்டு ஷாலினியின் வீட்டை நோக்கி ஓடி வந்து கொண்டு இருந்தான் விஷ்ணு. ☔ ஷாலினியின் வீடு முதல் தளத்தில் தான் இருந்தது. அதனால் லிப்ட் இன் முன் நின்று கொண்டு இருந்த விஷ்ணு, லிப்ட் வருவதற்காக காத்திருந்தான். தொடர் மழையின் காரணமாக அந்த லிப்ட் வேலை செய்யவில்லை. அதனால் அங்கு இருந்த படிகளின் வழியாக வேக வேகமாக ஏறி ஓடி வந்த விஷ்ணு, ஷாலினியின் வீட்டை அடைந்து காலிங் பெல்லை அடித்தான்.
அவனுடைய மொத்த தவிப்பையும் அந்த காலிங் பெல் மீது காட்டியவன், அதை தன்னால் முடிந்த வரை வேகமாக அமுக்கிக் கொண்டு இருந்தான். அவன் எத்தனை முறை காலிங் பெல் அடித்தும் ஷாலினி வந்து கதவை திறக்கவில்லை. அதனால் பதட்டம் அடைந்த விஷ்ணுவின் இதயம் பயத்தில் வெளியே வந்து குவித்துவிடும் அளவிற்கு வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️
ஷாலினி தன்னுடைய உடம்பில் இருக்கும் அனைத்து சக்தியையும் இழந்து விட்ட நிலையில் அந்த கட்டிலில் அசைவின்றி கிடந்தாள். 😣 விஷ்ணு வெளியே வந்து காலிங் பெல் அடித்துக் கொண்டு இருப்பதை உணர்ந்த ஷாலினி, கட்டிலில் இருந்து எழுந்து வந்து கதவை திறக்க போராடிக் கொண்டு இருந்தாள். 😟 ஷாலினிக்கு என்னானதோ என்று நினைத்து பயந்த விஷ்ணு, செக்யூரிட்டி ஆபீஸுற்க்கு கால் செய்து மாஸ்டர் கீயை கொண்டு வரும் படி அவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தான்.
அப்போது கதவு திறக்கப்படும் சத்தத்தை கேட்ட விஷ்ணு, செக்யூரிட்டி ஆபிஸர்களிடம் வர வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான். விஷ்ணுவை பார்த்த ஷாலினி அவனுடைய பெயரைச் சொல்லி அழைத்த படி அப்படியே மயங்கி கீழே சரியப் போனாள். அவளை கீழே விழாமல் தாங்கி பிடித்த விஷ்ணு, அவளை அப்படியே தன்னுடைய இரு கைகளிலும் ஏந்தி கொண்டு பெட்ரூமிற்கு சென்று அங்கு இருந்த கட்டிலில் அவளை படுக்க வைத்தான் . 🤗
ஷாலினி சுய நினைவின்றி மயங்கி கிடந்தாள். அதனால் விரைந்து கிச்சனுக்கு ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்த விஷ்ணு, அவளுடைய முகத்தில் அதை தெளித்து பார்த்தான். அப்போதும் ஷாலினிக்கு மயக்கம் தெளியவில்லை. அதனால் பதறிப் போன விஷ்ணு, மீண்டும் அந்த டாக்டருக்கு கால் செய்து சீக்கிரம் வரும் படி கெஞ்சினனான்.
மறு முனையில் அவனிடம் பேசிய டாக்டர் மதி, “சார் நான் பக்கத்துல வந்துட்டேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க வந்துருவேன். ரைனி சீசன்ல இந்த மாதிரி ஃபீவர் வரதெல்லாம் காமன் தான். அவங்க மயங்கிட்டாங்கன்னு நீங்க அவங்கள அப்படியே விட்டுறாதீங்க. அவங்களோட கையையும், காலையும், சூடு பறக்க தேச்சு விடுங்க. அவங்க கூட பேசிக்கிட்டே இருங்க. முடிஞ்ச வரைக்கும் அவங்கள எழுப்ப ட்ரை பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தாள்.
டாக்டர் மதி சொன்னது அனைத்தையும் செய்து பார்த்து விட்டான் விஷ்ணு. ஆனாலும் ஷாலினி இடமிருந்து ஒரு ஆசைவும் தெரியவில்லை. அதனால் பயந்து போன விஷ்ணு, சுவற்றில் சாய்ந்து தரையில் அமர்ந்து தன்னுடைய தலையில் அவனுடைய கையை வைத்துக்கொண்டு “ஷாலினி..!! ஷாலினி..!!!” என்று தன் தலையில் அடித்து கொண்டு கதறி அழ தொடங்கினான். ஷாலினி முதலில் கால் செய்த போதே அவளது கால் ஐ தான் அட்டென்ட் செய்து இருந்தால் ஒரு வேளை அவளுக்கு எப்படி ஆகி இருக்காதோ..!! அவளுக்காக தான் வருவேன் என்று நம்பியதால் தானே தனக்கு அவள் கால் செய்திருக்கிறாள்; அவளுடைய நம்பிக்கையை நாம் உடைத்து தாமதமாக வந்து அவளுடைய நிலைக்கு நாமே காரணமாகிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டு இருந்தான் விஷ்ணு. 😭 😭 😭
அப்போது அங்கே வந்த டாக்டர் மதி, விஷ்ணு இருந்த கோலத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தவள், பின் விஷ்ணு ஷாலினியை காதலிக்கிறான் போல என்று நினைத்து கொண்டு வேகமாக அவளுடைய அறைக்குள் வந்து ஷாலினியை பரிசோதிக்க தொடங்கினாள். மதியை அங்கே பார்த்தவுடன் தான் விஷ்ணுவிற்கு நிம்மதியாக இருந்தது. மதி ஷாலினியை பரிசோதித்து விட்டு அவளுடைய கையில் ஒரு ஊசி போட்டுவிட்டு அவளை எழுப்ப ஷாலினி மயக்கத்தில் இருந்து எழுந்தாள்.
முதலில் அவள் கண்ணை திறக்கும் போது அவளுடைய கண்களில் பட்டது கண்ணீர் நிறைந்த கண்களோடு பதட்டத்துடன் தன்னையே பார்த்து கொண்டு இருக்கும் விஷ்ணுவின் முகம் தான். அந்த காட்சியை அப்படியே தன்னுடைய கண்களுக்குள் படம் பிடித்து வைத்துக் கொண்டாள் ஷாலினி. 🤩 தனக்காக விஷ்ணு மீண்டும் ஒரு முறை அழுவதை பார்த்த ஷாலினியின் கண்கள் தன்னை அறியாமல் கலங்கியது. 🥺
விஷ்ணு: ஷாலினி அழுவதை கவனித்தவன், “ஏய்..!! உனக்கு ஒன்னும் இல்ல டி. டாக்டர் வந்துட்டாங்க பாரு. அவங்க உனக்கு இன்ஜெக்ஷன் போட்டு இருக்காங்க சோ உனக்கு சீக்கிரம் சரியாயிடும்.” என்று தன் கண்களில் இருந்து வலிந்த கண்ணீரை துடைத்த படி சிறு புன்னகையிடன் அவளை பார்த்து சொன்னான். 😁
ஷாலினி: கண்ணீரோடு அவனை பார்த்து புன்னகைத்தவள், “நீ இங்க வந்த உடனே எனக்கு ஒன்னும் ஆகாதுன்னு எனக்கு தெரியும்.” என்றாள் தன் மனதில் இருந்து. 🥺 😁
ஷாலினியின் இந்த வார்த்தைகள் விஷ்ணுவின் மனதை தொட்டது. ஷாலினியை அக்கறையோடு பார்த்த டாக்டர் மதி, “ரைனி சீசன்ல நார்மலா வர வைரல் ஃபீவர் தான் உங்களுக்கும் வந்திருக்கு. நீங்க ரொம்ப வீக்கா இருக்கீங்க அதான் மயக்கம் போட்டு விழுந்து இருக்கீங்க. பட் டோன்ட் வாரி மிஸ் ஷாலினி. யு வில் பி ஆல்ரைட் சூன். ஆல்ரெடி உங்களுக்கு ஒரு இன்ஜெக்ஷன் போட்டுட்டேன். இன்னொரு இன்ஜெக்ஷன் போடணும். அது கொஞ்சம் பவர் அதிகம் சோ ஹிப்ல தான் போடணும்.” என்று சொன்னவள் விஷ்ணுவை பார்த்து, “ சார் நீங்க கொஞ்சம் வெளியில வெயிட் பண்ணுங்க.” என்றாள்.
விஷ்ணு வெளியே சென்றவுடன் ஷாலினியின் இடுப்பில் ஊசி போட்டு விட்ட மதி, விஷ்ணுவை அழைத்து ஷாலினி வீக்காக இருப்பதால் அவள் இதை எல்லாம் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்று சொல்லி சில சத்து மாத்திரைகளையும், டானிக்களையும், அந்த பிச்கிரிப்ஷனில் எழுதிக் கொடுத்தவள், இப்போதைக்கு காய்ச்சல் குறைவதற்காக இந்த மாத்திரைகளை மட்டும் சாப்பிட சொல்லுங்கள் என்று சொல்லி தான் கையோடு கொண்டு வந்த சில மாத்திரைகளை அவளிடம் கொடுத்துவிட்டு, “அப்புறம் சார்.. இப்ப லாஸ்ட்டா போட்ட ஊசி கொஞ்சம் பவர் அதிகம். இப்ப ஊசி போட்ட எடத்துல கொஞ்சம் பிரஷர் கொடுத்து நல்லா தேச்சு விட்டா தான் அந்த மருந்து கரைஞ்சு போய் பிளட்ல சேரும். அவங்க தேச்சா வலிக்குதுன்னு அப்படியே விட்டுற போறாங்க கொஞ்சம் பாத்துக்கோங்க.” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றாள்.
விஷ்ணு தண்ணீர் கொண்டு வந்து டாக்டர் அவனிடம் கொடுத்துவிட்டு சென்ற மாத்திரைகளை ஷாலினிக்கு கொடுத்தவன் பின் அவளை பார்த்து, “இன்ஜெக்ஷன் போட்டது வலிக்குதா..??” பாசமாக கேட்டான்.
ஷாலினி: “ஆமா…!! உக்கார கூட முடியல கடு கடுன்னு இருக்கு.” என்று சொன்னவளின் குரலில் வலி அப்பட்டமாக தெரிந்தது. 😞 😣
விஷ்ணு: அது பவர்ஃபுல்லான இன்ஜெக்ஷன் அப்படி தான் இருக்கும்ன்னு டாக்டர் சொல்லிட்டு போனாங்க.
ஷாலினி: என் கிட்டயும் அதான் சொன்னாங்க.
விஷ்ணு: ஊசி போட்ட இடத்துல நல்லா தேய்க்கணும்னு சொன்னாங்களே தேச்சியா…??
ஷாலினி: இல்லை என்று தன்னுடைய தலையை ஆட்டினாள்.
விஷ்ணு: அட லூசு..!! ஒழுங்கா தேய். அப்படியே தேய்க்காம விட்டினா அந்த மருந்து பிளட்ல கலக்காம கட்டி ஆயிரும்ன்னு சொன்னாங்க.
ஷாலினி: தெரியும்.
விஷ்ணு: அப்புறம் ஏன் டி தேய்க்காம இருக்க..???
ஷாலினி: அட ஏன்டா நீ வேற..!! சும்மா இரு. என்னால தேய்க்க முடிஞ்சா தேய்க்க மாட்டனா..?? கை எல்லாம் செமையா வலிக்குது. என்னல கைய திறப்ப கூட முடியல. இதுல எங்க தேய்க்கிறது..??
விஷ்ணு: ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவன் சிறு தயக்கத்துடன் அவளை பார்த்து, “நான் வேணா தேச்சிவிடவா…??” என்று அவளுடைய கண்களை நேராக பார்த்தபடி கேட்டான்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)